12/22/2020

வண்ணம் கொஞ்சும் தாய்நாடே / singer,surmukhi /music Elakkiyan/lyrichs.Amba...


வண்ணம் கொஞ்சும் தாய்நாடே 
vannam konchum thaainaade 

Eezha tamil  manasu album songs
Lyrics .Ambaladiyal Santharupi
Music.Elakkiyan
singer.Surmukhi

Recorded and mixed by-Sundar Raj
Edition reccording Chennai

producer.Ambaladiyal Santharupi
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/21/2020

murugan devotional tamil songs / முத்துப்பரல் ஒத்துக் குனுகிட


இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!

தொடரும் கொரோனாத்  தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்கள் விரைவில் இத் துன்பத்தில் இருந்து இறையருளால் விடுபட வேண்டும் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்று இறைவனை மன்றாடி வேண்டிக் கேட்டுக்கொண்டு இப்பாடலை இங்கே  சமர்பித்துள்ளேன் .அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! பாடலைக் கேளுங்கள் பிரார்த்தியுங்கள் தங்கள் பிராத்தனையால் நன்மை நிகழட்டும்.எல்லோரும் இந்தத் தருணத்தில் மிகுந்த அவதானமாக நடந்துகொள்ளுங்கள் 
இன்றும் என்றும் என் எண்ணத்தில் குடியிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எக் குறையும் நேராமல் இருக்க எங்கோ ஓர் மூலையில் தங்களுக்காக என் மனமும் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருக்கும்.நன்றி அன்பு உள்ளங்களே! வாழ்க தமிழ்! வாழ்க நன் மக்கள்!

கந்தா குகனே கதிர்வேலா 
முத்துப்பரல் ஒத்துக் குனுகிட 

பாடல் வரிகள் .கவிஞர் .அம்பாளடியாள் சாந்தரூபி 
இசை .சேங்கை .மு .விஜய் 
பாடகி .வத்சலா தேவி 
தயாரிப்பு வெளியீடு  அம்பாளடியாள் சாந்தரூபி 
(குயில் பாட்டு )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/13/2020

முத்தமிழே முக்கனியே Albam song -muththamizhe mukkaniye song


வணக்கம் தோழமைகளே!

என்னுடைய இந்த அழைப்பை ஏற்று தங்களால் என்னுடைய குயில் 
பாட்டு  தளத்திற்குக்  கைகொடுக்க முடிந்தால் தயைகூர்ந்து கை 
கொடுக்க அழைக்கின்றேன். குயில் பாட்டுத் தளத்தில் தொடரும் 
ஆக்கங்கள் கண்டிப்பாக இன்தமிழுக்குப் பெருமை சேர்க்கும் என்று 
உறுதியாக நம்புகின்றேன் அந்த வகையில் முடிந்தவரை தங்களின் 
ஆதரவை எனக்கு வழங்குமாறு பேரன்போடு வேண்டிக் கொள்கின்றேன் 
நன்றி! வாழ்க தமிழ்!

subscribe செய்யுங்கள்? தங்கள் கருத்துரையை வழங்குங்கள்? 
முடிந்தவரைப் பரிந்துரையுங்கள்?  இன்னும் இன்னும் 
தங்களை மகிழ்விக்க வருகின்றன எனது பாடல்கள் நன்றி! வாழ்க தமிழ்!


பாடல்: முத்தமிழே முக்கனியே 
பாடல் வரிகள்: அம்பாளடியாள் சாந்தரூபி 
இசை :இலக்கியன் 
பாடியவர் :முகேஷ் 
ஒளிப்பதிவாளர் :சுந்தர்ராஜ் 
வாழ்க தமிழ்!🌹

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/10/2020

கந்தா குகனே கதிர்வேலா/ திருப்புகழ்/ murugan devotional song tamil |அம்பா...



இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!

கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மக்களைக் காக்க வேண்டி 
எல்லாம் வல்ல அந்த ஆறுமுகப் பெருமானை நினைந்துருகி இப் 
பாடல் பாடப்பட்டுள்ளது கந்தன் அருள் பெற்று எல்லோரும் நீடுழி வாழ
வாழ்த்துகின்றோம். வாழ்க தமிழ்! வாழ்க மக்கள்!  வாழிய வாழிய வாழியவே!

பாடல் வரிகள் : பாவலர் .அம்பாளடியாள் சாந்தரூபி 
இசை .சேங்கை மூ விஜய் 
பாடியவர் .வத்சலாதேவி 

நன்றி அன்பு உள்ளங்களே 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/06/2017

காத்திருந்த கனவுகள்!


தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
நான் தேடும் சொர்க்கம் நீயடா!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
உன்னைக் கண்ட நாள்முதலாய்த் தூக்கம் போனதே
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
காத்திருந்த என் கனவைப் பாரடா
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!

நிலா முறத்திற்கு மிக்க நன்றி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/27/2017

சிற்பங்கள் கண் திறந்தால்!







சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------

சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்!
சிங்காரத் தமிழின்மேல் காதல் கொள்ளும்! 
அற்பமாயை உலகினிலே யாவும்பொய்யே!
அருந்தமிழ் தந்தசுகம் ஒன்றே மெய்யாம்!

மண்தோன்றி கல்தோன்றும் முன்னாலே தோன்றினாள்! 
மாமனத்துள் ஆணிவேராய் ஊன்றினாள்! 
கண்டுக்கொள் கடலுக்குள் சாட்சிகள் தூங்குதே! 
காணத்தான் மனமிங்கே எந்நாளும் ஏங்குதே! 

முத்தமிழாள் முத்தமிட்டால் உயிர் சிலிர்க்கும்!
மூவுலகும் மனத்திரையில் கை குலுக்கும்!
சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!

இத்தரையில் எழுச்சிமிகு பரதக்கலையை 
எம்இறைவன் இறைவியவள் ஆடக்கண்டால் 
கொத்துக் கொத்தாய் மலர்வனங்கள் பூத்துக் குலுங்கும்!
கொடும் கோடையிலும் குளிர்காற்று கொஞ்சி மகிழும்!

செத்தாலும் என் சாம்பல் மணக்கும் தமிழாய் 
செந்தூர நதியலையில் சேரத்துடிக்கும்!
வெத்துக்கள் என்னுயிரைப் பழித்தால் வெடிக்கும் 
வெம்சின எரிமலைகள் அவர்கள்தம் கதையை முடிக்கும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/23/2017

பூமி வறண்டிடிச்சே!



நாட்டுப்புறப் பாடல்கள்!
***************************************

பூமி வறண்டிடிச்சே
பூகம்பமும் கிளம்பிடிச்சே!
சாமி மனசுக்குள்ள
போட்ட சாபம் கேட்டதாரு!

நாத்து நட்ட குடி
நாளும் கண்ணீர் வாக்குதடி!
ஊத்து நிலம் கெட்டு
ஊரும் ஊமை ஆச்சுதடி!

குண்டு மழை பொழிஞ்சு
குடியைக் கெடுத்ததாரு!
விவசாயி குடும்பத்த
வீதியில விட்டதாரு!

அரசு மனசு வச்சா
அடி ஆத்தி மழை வருமா!
பொல்லாத சோகம் சொன்னா
போன ஜென்மம்தான் வருமா!

மாடு மட்டும் சந்தையில ஏலம் போகுது!
மானபங்க பட்ட உசிர் இங்கே ஏங்குது!
சோறு தண்ணி இல்லாம வாழ்க்கை ஏதடி!
சொந்தக் கத சோகக் கத இத
சொன்னால் கேளடி!

வெள்ளையன வெளியேறச் சொன்ன தாரடி
விருந்துக்கு அழைக்கிறான் இங்கே பாரடி!
கூறு கெட்ட அரசியல மாத்துற தாரு
கொஞ்சம் கொஞ்சமா
நெஞ்சம் வேகுதே!
பஞ்சம் தீருமா!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி!
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

மூலிகைய குழுசையா விக்குறானடி!
மூடருக்கு அவ ஆப்பு வைக்குறானடி!
என் தாத்தா பாட்டி சொத்து
அத அள்ளுறான்!
ஏமாந்த குத்தத்துக்கு குண்டத் தள்ளுறான்!

சொன்னா புரியுமா?
இந்த சோகம் தெளியுமா!

சாலையில ஓடுது நாலு சக்கரம்
இது சாஞ்சா புரியுமடி வந்த சிக்கனம்!
புகையோடு புகையாக மனுசன் போகிறான்
இது புரியாமல் தானடி இங்கே வேகுறான்!

கேட்டாக்கா நாகரீகம் ஏறிப் போச்சுதாம்!
கேழ்வரகு கஞ்சி தூசா ஆகிப் போச்சுதாம்!
உப்புக் கல்ல வைரமாப்  பாக்குறானடி
சிலத ஒப்புகொண்டா கண்ணீரும் இங்கே ஏதடி!
எல்லாளன் ஆட்சிக் காலம் நீதி வாழ்ந்ததாம்
அது  இல்லாத  அரசியல்தான் இங்கே வாழுது!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

----------------------------------------(பூமி வறண்டிடிச்சே )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/22/2017

கற்பனைக் கோட்டை!



எண்ணற்ற கோட்டை கட்டி 
என்ன பயன் கண்டோம் இங்கே! 
கண்ணிறைந்த இயற்கை ஒன்றே
காவலரணாகும் எங்கும்!

மண்மீது உயிர்கள் வாழ 
மறுபிறவி தானும் காண 
பூமி நலம் காக்க வேண்டும்!
சாமி என நோக்க வேண்டும்!

தண்ணீரும் காற்றும் இன்றி 
தரை வாழுமா! 
தனவான்கள் எண்ணம் போலே 
எம் இனம் வாழுமா!

உயிருக்கு உறங்க ஓர் இடம் வேண்டும் 
உயிரான மண்ணுமதைத் தாங்க வேண்டும்! 
கருவறை தன்னில் இங்கே 
கல்லொன்றைச் சுமந்ததாரு!
கருவறை போல நீயும் 
தாய் மண்ணை எண்ணிப் பாரு!

கடற்கரை மண்ணை அள்ளிக் 
கோட் டை கட்டலாம் 
கடலன்னை பொங்கி எழுந்தால் 
எங்கே ஓடலாம்!

கோட்டைக்குள் அடங்காது இந்த உலகம் 
கோமாளித் தனமான எங்கள் சொந்த உலகம்!
ஆடம்பரமாய் இருக்க இது போதும் 
அட ஆயுளைத்தான் கூட்டாது ஒரு போதும்!

இயற்கையை மிஞ்சுமா இந்த அழகு!
ஈரலிப்பா நீயிருக்க வந்து பழகு!
மூலிகைக் காற்றைத்தான் 
உயிர் மூச்சு விரும்பும்! 
முத்தமிழை முத்தமிடும் பேச்சு விரும்பும்!

காத்தாடி தந்த காற்று 
காலடியைத் தொட்டு நிற்கும் 
ஆத்தாடி வாடைக் காற்று 
அக்கம் பக்கம் எல்லாம் சுற்றும்!

சுற்றுகின்ற காற்றுக்குச் 
சூனியத்தை வைக்காதே!
கோட் டையிலே இருந்து கொண்டே 
மனக் கோட்டைகளைக் கட்டாதே! 

---------------(எண்ணற்ற கோட்டை கட்டி )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/17/2017

நிலாக்கால இரவுகள்



மரபுக் கவிதை எண்சீர் விருத்தம் 
---------------------------------------------------

அகராதி முதற்கொண்டு தேடிப் பார்த்தேன் 
......அடியாத்தி சொல்லத்தான் வார்த்தை இல்லை!
 பகவானின் கற்பனைக்கோர் எல்லை உண்டோ!
......பார்போற்றும் பேரழகை மண்ணில் கண்டேன்!
ஜெகன்மாதா பெற்றெடுத்த பிள்ளைச் செல்வம் 
......ஜெகத்தினையே சுற்றிவரும் காட்சி போலும் 
சுகமான சிந்தனைகள் இங்கே தோன்றும்!
......சுழல்கின்ற நிலாக்காலம் நெஞ்சுள் வாழும்!

இனிதான காலமென எண்ணும்   காலம் 
......இரவெல்லாம் நிலவோடு வாழும்  காலம்!
தனிமைக்குள் நுழைந்தின்பம் காணச் சொல்லும் 
.......தள்ளாடும் வயதினிலும் ஆசை  கொல்லும்!
கனியொத்த சுவைநல்கும் எண்ணம்  தோன்றும் 
.......கண்ணதாசன் நினைவலைகள் நெஞ்சுள் நீளும்!
பனிபோல துயரெல்லாம் மாய மாகும்!
.......படர்ந்திருக்கும் பேரழகில் பார்வை சொக்கும்!


வெண்ணிலவு சுற்றிவரும் வீதி எங்கும் 
......விளையாடித் திரிந்தோமே அந்தக் காலம்!
எண்ணற்ற நினைவுகளைச் சொல்லச் சொல்ல 
......ஏக்கம்தான் விழைகிறது  ஏழை நெஞ்சில்!
கண்காணாத் தேசத்தில் இன்றெம் மக்கள் 
......காணுகின்ற காட்சியெல்லாம் வேறொன் றாகும்!
மண்மீது இத்துயரை மாய்ப தாரோ!
......மறுபடியும் நிலவினைநாம் ரசிக்க  வேண்டும்!

(கவிக்களம் -11 கவிதைப்பூங்கா போட்டிக்கான கவிதை) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/15/2017

காதல் கலாட்டா கவிதைப் போட்டி!





ஆண்
-----------------------------------

மாலைப்பொழுதில் மயக்கும் பெண் நிலவடி 
அவள் சேலை கட்டி வந்த சிலையடி!
குயிலின் குரலோசை தானடி! 
பூக்களில் அவள்தான் அழகோ அழகடி!

பெண் 
----------------------------------------------------
எரிமலை நானடா குமுறக் குமுற 
வரும் துயர் பாரடா.....
உன்னோடு என்ன வழக்கு! தன்னாலே தீரும் கணக்கு! 
கண்ணுக்குள் நோயிருக்கு உன் நெஞ்சுக்குள் பேயிருக்கு!

ஆண்
-------------------------

பேயென்று சொல்லதடி! நெஞ்சைக் கொல்லாதடி! 
என் உயிராய் வாழும் தேவதை நீயடி 
திட்டும் போதும் வலிக்கும் பாரடி 
தேன்முத்தம் தந்து என்னை அள்ளடி! உணர்வே நில்லடி!

பெண் 
-------------------
சண்டாளனே! என்னை ஏதேதோ செய்கிறாய்! 
உன்னோடுதான் வாழ்க்கை என்கிறாய்! 
உயிரோடு விளையாடுறாய்! நீயாரடா? பதிலொன்று கூறடா?
புரியாத புதிரிங்கே நீயடா! என் உயிரும் தானடா!


ஆண்!
---------------------- 
சும்மாதான் சொன்னேன் நானடி அவள் நீ இல்லடி!
கொம்புத்தேனுக்கு ஆசையென்னடி!
கொலுவிருக்கும் பூங்கொடி! எண்ணிப் பாரடி 
நான் ராஜாதி ராஜனடி பல ரோஜாக்கள் தேடுமடி!

பெண்
-----------------
நீ ஒன்றும் அழகு இல்லையடா 
கற்பனையால் வந்ததிந்தத் தொல்லையடா! 
பூவெல்லாம் ஒன்றுதானடா 
நீ தேன் தேடும் வண்டுதானடா! என்முன்னே நில்லாதடா!

ஆண் 
------------------------------

கிளி மூக்கில் கோவம் வந்ததா அது 
அழியாத கோலம் ஆனதா! 
உளிகொண்டு சிதைத்தாலும் நீதானடி 
உயிருக்குள் உயிர் வாழும் என் பைங்கிளி 

பெண்!
------------------------
இனியென்ன சொன்னாலும் நம்பேனடா 
எல்லாமே என் வாழ்வில் பொய்தானடா!
வலி மேவுதே! அதில் காதல் பலியானதே! 
விளையாட்டும் உன்னால்தான் வினையானதே 
என் நெஞ்சம் தனியாய் வாடுதே!

                                                             


கவிஞர் .அம்பாளடியாள் 
சாந்தரூபி 
சுவிஸ்
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/08/2017

வெற்றி!




வெற்றிபெற்ற களிப்பொன்றே வாழ்வில்  போதும்
.....வேறுவேலை இங்கிருந்தால் பார்த்துச் செல்வீர்!
பெற்றவெற்றி ஒன்றினையே எண்ணி எண்ணிப்
.....பெருமைகொள்ளல் வளர்ச்சிக்குத் தடையாய் நிற்கும்!
கற்றவர்கள் எப்போதும் களிப்பில் மூழ்கிக்
.....கண்டபடி கதைபேசித் திரிய மாட்டார்!
அற்புதங்கள் நிகழ்த்துவதே அவர்தம் நோக்கம்
....அதனால்தான் இன்றுலகால் அறியப் பட்டார்!

மற்றவரை மதிக்கின்ற பண்பு ஒன்றே
....மானுடர்க்கு மகத்தான பண்பே ஆகும்!
பெற்றாலும் அப்பேறு நிலைக்க வேண்டிப்
....பெருமுயற்சி எடுத்தென்றும் உழைக்க வேண்டும்!
தற்பெருமை தலைசிறந்த கலைஞர்க் கிங்கே
....தகாதென்ற உண்மையினை உணர்தல் வேண்டும்!
அற்பமாயை உலகினிலே சிக்கிக் கொண்டே
.....அடுத்தவரைப் பகையாளி என்றெண் ணாதீர்!

ஏட்டிக்குப் போட்டியாக வளரும் ஆற்றல்
....எவர்த்தடுத்தும் நிற்காதென் றெண்ணிக் கொள்வீர்!
நாட்டிற்குள் திறமையினால் உச்சம் பெற்ற
.....நல்லவரை வாழ்த்துவதே நற்பண் பாகும்!
வீட்டிற்குள் எப்படியும் வாழ்தல் உண்டு
.....வியாபாரத் தளத்தினிலே உண்மை வேண்டும்!
போட்டியிலே சிலசமயம் தோல்வி வந்தால்
.....போராடி வெற்றிகொள்வீர் அதுவே தர்மம்!

அண்டங்கள் கடந்திங்கு நிற்கும் மாந்தன்
....ஆற்றலினை எவருமிங்கு அறிதல் நன்று!
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே நின்று
.....மகத்தான சாதனையைப் படைப்பார் வென்று!
எண்ணியிதை நாம்பார்க்கத் தவறும் போதே
......எண்ணத்தில் விரிசல்கள் வந்து சேரும்!
புண்பட்டுப் புரையோடி நிற்கச் செய்யும்
.......புரிந்துணர்வே அற்றசெயல் இதனால் ஓங்கும்!

நான்பெரிதே என்றெண்ணும் எண்ணம் கொண்டால்
.....நல்லதெது கெட்டதெது   தெரியா திங்கே!
கூன்விழுந்த மனதினிலே தோன்றும் கோபம்
.....குற்றமற்ற எவரையுமே கொல்லத் தூண்டும்!
நோன்பிருந்து பெற்றபிள்ளை இவ்வா றென்றால்
....நொந்துபோகும் தாயுள்ளம் என்ன ஆகும்!
ஏன்பிறந்தோம் என்றெண்ணி வருந்த வைக்கும்
....இழிச்செயலை எவருமிங்குத் துறத்தல் நன்று!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/07/2017

இதுவே எமக்கான பாதை!

 

அப்பனுக்குப் பிரணவத்தின் பொருளு ரைத்த
.....ஆறுமுக சாமியையே எண்ணிப் பாரீர்!
இப்புவியில் நாமெல்லாம் ஞானி யன்றோ!
......எடுத்தெறிந்து பேசுவதற் கொன்றும் இல்லை!
தப்பாட்டம் ஆடுகின்றோம் இதுவே எம்மின்
......தலைக்கனம்தான் என்றவரும் புரிதல் நன்று!
நற்கருத்தைச் சொல்வதற்கு நாயைக் கூட
.....நாமிங்கே அனுமதித்தால் நன்மை உண்டு!

கிட்டாத வாய்ப்பதனால் எம்மை இன்று
.....கீழோர்  என்றவரும்  நினைக்கக்  கூடும்!
எட்டாத தூரத்தில் இல்லை யென்று
......எவர்முயற்சி செய்தாலும் வெற்றி உண்டு!
பட்டதெல்லாம் போதுமென்ற எண்ணம் மட்டும்
.....பகுத்தறிவுக் காகாத செயலாய்க் கொள்வீர்!
கெட்டகுடியும்   மேலோங்க வாய்ப்பும்  உண்டு!
.....கேள்விஞானம் இங்கிருந்தால் அதுவே போதும்!

இன்றெவரும் பிறக்கையிலே கற்றுக் கொண்டே
....இப்புவிக்கு வரவில்லை எண்ணிக் கொள்வீர்!
முன்ஜென்ம பாவமென்று முயற்சி இன்றி
......முடங்கிவிட்டால் மூலையில்தான் கிடைக்க வேண்டும்!
பின்நாளில் நாம்விட்ட பிழையை  எண்ணிப்
.......பிதற்றுவதால் ஆவதிங்கே ஒன்றும் இல்லை!
நன்மையொன்று  கிட்டவேண்டும் என்றால் நாளும்
......நாம்தேடி அடையவேண்டும் அதுதான் வாழ்க்கை!

பிள்ளையொன்று பால்குடிக்க முதலில் கற்கும்
.....பின்னாளில் பால்நிலவில் காலை வைக்கும்!
எள்ளளவும் முயற்சியின்றிக் கிடந்தி ருந்தால்
.....எட்டியடி வைப்பதற்கே பாதம் கூசும்!
துள்ளியெழு விரைந்திங்கு வெற்றி கிட்டும்!
......துணையாக உன்னைநீ அழைத்துச் சென்றால்!
பள்ளியிலே கற்றவர்தான் மேதை அன்று
......பயின்றுவந்த அனுபவத்தைப் பாட மாக்கு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

என்னுயிரே! பொன்மொழியே!



உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும்
....ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க
இக்கணமே நீவருவாய் என்றன் நாவில்
....இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்!
எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள்
....ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே!
தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால்
.....தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்!

நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன்
......நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்!
திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம்
......திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து
பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது
......பைந்தமிழே எனக்கிங்குப் பயமும் ஏது?
முக்காடு போடவைப்பேன் மீண்டும் அந்த
.....மூடர்கள்  முத்தமிழைப் பழிக்க வந்தால்!

கத்திக்கு என்னிடத்தில்  வேலை இல்லை
....கண்ணீரைத் துடைகின்ற செயலே போதும்!
புத்திக்கு வேலைதந்து மூர்க்கத் தோடு
....புல்லுருவிக் கூட்டத்தைப் பூண்டோ டொழிப்பேன்!
எத்திக்கும் இன்தமிழைப்  பரப்பிச் செல்லும்
....என்பேச்சை  நானும்தான் கேட்க மாட்டேன்!
முத்தமிழே   உயிரென்று இடித்துச் சொல்லி
......முன்னேறத் தடைவந்தால் மூச்சை யாவேன்!

என்நாட்டை இழந்தவழி  எண்ணிப் பார்த்தால்
......எதிரிமுகத்தில் எழுதுகோலும் துப்பித் தீர்க்கும்!
பொன்னான நேரத்தைச் செலவு செய்து
.....போகின்றோம் எதற்காக? உணர்வை மீட்க!
இன்றெம்மின் வாழ்வுற்ற அடையா ளத்தை
.....இழப்பதற்கா இத்தனைநாள் பாடு பட்டோம்!
கன்றுக்குப்   பசுமீது உள்ள காதல்
......கழுத்தறுத்துப் போட்டாலும் கண்ணுள் வாழும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/10/2016

வண்டி உருண்டோட


வண்டி உருண்டே ஓடும்
.....வாய்த்தால் இரண்டு மாடும்!
கண்டு கொள்வீர் இதுபோல்
.....கணவன் மனைவி வேண்டும்!
சண்டை இட்டுப் பிரிந்தால்
......சாகும் வரைக்கும் துன்பம்!
தொண்டில் சிறந்து விளங்கித்
......தோகை மயிலே வாழ்க!

உழவுத் தொழிலுக் குதவும்
....உண்மை யானதோ ழர்கள்!
பழகும் விதத்தில் என்றும்
....பசுவும் எருதும் எம்மின்
குழந்தை என்றால் வாழ்வில்
.....குலத்துக் கதுவே பெருமை!
இழப்பைத் தாங்க இனியோர்
.....இதயம் எங்கே கேட்போம்!

மண்ணின் வளத்தைக் காக்கும்
.....மழையைப் போல்தான் என்றும்
எண்ணக் கருத்தில் நிற்கும்
......எருதும் பசுவும் வாழ்வில்!
உண்ண உணவும் தந்தே
.....உயிரைக் காக்கும் தெய்வம்
கண்கள் முன்னே தோன்றும்
.....காளை மாட்டின் வம்சம்!

வணக்கம் அன்பு உள்ளங்களே!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2016

உயிரே! உயிரின் உயிரே!


                                               

ஈன்றவளுக் கொப்பான  இன்றமிழை நான்மறைவேன்
தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! -வான்மழைபோல்
இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல்   என்னுயிரே !
என்றுமிது போதும் எனக்கு!

தூக்கத்தில் கூடத்தான் உன்றன்  எண்ணம்
.....தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால்
பூக்கின்ற புலமையும்  பூலோ கத்தில்
......பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்!
தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது
.....தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்!
ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும்
.....எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்!

உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம்
.....உலகத்தில் எனக்கிங்குச்  சொர்க்கம் ஆகும்!
பொன்னான வரமளித்த தாயே உன்னால்
.....போகட்டும் பொல்லாத தூக்கம் இங்கே!
கன்னல்பூங் கவிதைகளால் மாலை செய்து
....காலமெல்லாம் உனக்கணிந்தால் அதுவே  போதும்
இன்றெனக்கும் இதைவிடவும் மகிழ்ச்சி உண்டோ!
.....இன்றமிழே! என்வாழ்வே! வணங்கு கின்றேன்!

திக்கெட்டும் இனியிந்த அம்பாள் அடியாள்
......தீந்தமிழின் உணர்வேந்திச் செல்ல  வேண்டும்!
துக்கத்தை எவர்மனமும் துறக்க வேண்டும்!
.....துணையாக உனையெண்ணச் செய்ய வேண்டும்!
பக்குவமாய் எடுத்துரைக்கும் கருத்தால் நாளும்
.....பலசமய இருள்நீங்கச் செய்ய வேண்டும்!
உக்கிரமாய் நின்றொழிக்கும் பகையும் இங்கே
.....உன்பாதம் சரணடையச் செய்ய வேண்டும்!

அணியணியாய்ப் பலகதைகள் வந்த போதும்
.....அடியவளின் உள்ளத்தில் இன்றும் வாழும்
மணிமேகலை யுடன்சிலப்பதி  காரம் என்றும்
......முத்தான காவியமாம் இராமா காதை
பணிவன்பு தரவல்ல  பார தத்தைப்
.......பயின்றுவந்தால் நல்வாழ்வும் அளித்துக் காத்துத்
துணிவுடனே வாழவைக்கும் என்றே சொல்லித்
...... தூயதமிழ்மேல்  ஆர்வத்தைத் தூண்டிச் செல்வேன்!

வள்ளுவனார் குறள்நெறியும் ஓளவை தந்த
.....வற்றாத மூதுரையும் பைபிள் மற்றும்
தெள்ளுதமிழ்ப் பாட்டிலுள்ள   திருக்குர் ரானும்
.....தேடினிதம் கற்றிட்டால் இன்பம் என்றே
கள்வடியும் பாட்டாலே  எடுத்து ரைத்துக்
.....கலியுகத்தில் எம்மவரின் போக்கை மாற்றிப்
பள்ளிகொள்ள வைத்திடுவேன் நாளும் இங்கே
.....பைந்தமிழ்ழே   உயிரென்று உலகம் மெச்ச!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/31/2016

உள்ளத்திற் கஃதே உயர்வு!

                                                   

தன்னையே தான்போற்றும்  தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப்  பூமியிலே இல்லையிடம் ! -நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

ஆல்போல் தழைத்தே  அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப்! - பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

எண்ணம் இனித்திட  இன்னிசையை  யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்!-கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம்  எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

குற்றம்  இழைப்போர்  குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும் ! - கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே! -தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழிக்கு வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

மண்ணில் மரங்களைக்  காப்பதே  எம்கடனாய்
எண்ணி இயங்குவோம் இக்கணமே !- விண்வியக்க
வெள்ளை விடையேறி வந்தபிரான் வாழ்த்திவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும்  தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப்  பூமியிலே இல்லையிடம் ! -நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

ஆல்போல் தழைத்தே  அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப்! - பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

எண்ணம் இனித்திட  இன்னிசையை  யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்!-கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம்  எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

குற்றம்  இழைப்போர்  குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும் ! - கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே! -தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழிக்கு வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

மண்ணில் மரங்களைக்  காப்பதே  எம்கடனாய்
எண்ணி இயங்குவோம் இக்கணமே !- விண்வியக்க
வெள்ளை விடையேறி வந்தபிரான் வாழ்த்திவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/23/2016

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!



செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!

கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும்  மோகன மே!

என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  - பொங்கும்
இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே
தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்
தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே!

தென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்
தெம்மாங்கு பாடும் பூங்குயி லே
இன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்
இன்றுமே நான்வரும் ஓர்கன வோ!

மல்லிகை முல்லையும் பூத்திடிச் சே -அந்த
மஞ்சள் நிலவதைப் பார்த்திடிச் சே
அல்லியும் தன்னிதழ் மூடிடிச் சே - இன்னும்
அந்தப்புறத் திலுன்னைக் காணலி யே!

கள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்
காத்திருக் குமென்றன் காதல னே
துள்ளி யெழுந்துவா  இக்கண மே -மெல்லத்
தூண்டிடும் ஞாபகம்  வாட்டிடு தே!

அன்பெனும் இன்பச் சோலையி லே -இரு
அன்றிலும் கூடிடும் வேளையி லே
தன்னிலை மறக்க வைத்திடு  தே -அந்தத்
தென்றலும் உன்பெயர் சொல்லிடு தே!

சத்திய வாக்குத் தந்தவ னே - இன்னும்
சங்கடம் மெத்திடச் செய்வா  யோ
முத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/04/2016

எழுந்து வா தாயே!



ஏற்றம் இன்றி இழைத்தோம் அம்மா
எல்லாம் எம்தலை  எழுத்து - அதை
மாற்ற முயன்று மடிந்தவர் தாமே
மாவீரர் என்னும் விழுது!

எல்லைக் கோட்டை எவரும் தாண்ட
இயலா திருந்த பொழுது - ஏன்
அல்லக் கைகள் அணைத்துக் கொண்டார்
அழிகுடி யினரைத் தொழுது!

காட்டிக் கொடுத்துக்  கழுத்தை அறுத்தார்
கயவர் எம்மோ டிருந்து - உயிர்
போட்டி போட்டுப் பிரியக் கண்டோம்
போதும் இங்கேது மருந்து!

நாட்டை விட்டு நாடு கடந்தோம்
நம்மின் உயிரைக் காக்க -தீ
சூட்டைப் பரப்பிச்  சுட்டெ ரித்ததே
சூழ்நிலைக் கைதியை நோக்கு!

அன்னை மொழியை அறவே மறந்தார்
அடிமை வாரிசு இங்கே -எம்
இன்னல் தீரவும் இலக்கை எட்டவும்
இனியொரு வழிதான் எங்கே?

கண்ணீர் பெருகக்  கடலும் தானே
கரையைத் தாண்டு தம்மா - நீ
எண்ண மறந்து இருப்பா யோசொல்
இனியும் இங்கே சும்மா!

அம்மா என்று அழைத்தால் போதும்
அடியவர் குறைகள் தீரும் - இதை
இம்மா நிலத்தில் இருக்கும் உயிர்கள்
என்றும் அறியத் தாரும்!

பொன்னே! மணியே! போதும் இந்தப்
புவியில் பட்ட பாடு -இனி
இன்னல் இன்றி எவரும் இங்கே
இன்புற மார்க்கம் தேடு!

அன்பும் அறமும் அன்னை உன்னால்
அவனியில் தழைக்க  வேண்டும்  -உயர்
நன்மை பொங்க  நாளும் இதனால்
நட்பை மதிக்கத் தூண்டும்!

கன்னல்  மொழியால் காலம் தோறும்
கண்ணீர்க் காவியம் தொடுத்தோம் -நீ
இன்னல் துடைக்க எழுந்து வந்தால்
இன்றோ டிதனை  முடிப்போம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/30/2016

கிராமிய பூபாளம் உலகெங்கும் ஒலிக்கட்டும்!



கற்றவரும் மற்றவரும் வீற்றி ருக்கும்
....கலைமாலைப் பொழுதினிலே வாழ்த்துப் பாடி
நற்பெயரை நான்சூட்ட வந்தே னம்மா!
.....நறுந்தமிழே! நானிலமும் போற்றும் வண்ணம்
உற்றதுணை யாயிருக்க வேண்டும்! என்றன்
......உயிர்மூச்சுப் பேச்செல்லாம் நீயே ஆனாய்!
நற்றவமே! நறுமணமே! தேனின் ஊற்றே!
......நற்றமிழே! வந்தமர்வாய் என்றன் நாவில்!

குற்றமறக் கற்றகல்வி ஞானம் கொண்டு
......குடிமக்கள் உயர்வுக்காய் ஆற்றும் தொண்டு
நற்பயனை நாளுமிங்கே அளிக்கக் கண்டு
......நம்மவர்கள் கொண்டாடும் விழாவில் இன்றும்
கற்பனைக்கும் எட்டாத  மகிழ்வு பொங்கும்
......கலைவாணி நல்லாட்சி எங்கும் தங்கும்!
சொற்பனத்தில் மிதப்போரே இந்தச் சோலை
.....சொக்கவைத்து மகிழ்வூட்டும் இன்று மாலை!

வந்தனங்கள் கோடிமுறை சொல்லிச் சொல்லி
.....வணங்குகின்றேன் அம்பாளின் அடியாள் நானும்!
சந்தனமாய் மணக்கட்டும் சான்றோர் உள்ளம்!
......சங்கீத இராகங்கள் பூபா ளத்தால்
செந்தமிழர்  போற்றுகின்ற  கிராமப் பண்பைச்
......சுமந்துவரும் நல்லரங்கம் இன்றும் எம்மின்
சிந்தையிலே தேன்தடவிச் செல்லும்! அந்தச்
.......செழிப்பூட்டும் இன்பத்தில் களிப்பீர் நன்றே!

மண்ணிலொரு மலர்விரிந்து மணத்தை வீசும்
....மக்கள்தன் சாயலென உலகம் போற்றும்
தண்ணிலவு மனங்கொள்ளும் தாய்சேய் சொந்தம்!
....தருமவழி செல்வதனைத் தரணி சாற்றும்!
புண்ணியத்தில் வாழ்வுதனைப் புகுத்தி ஈழப்
....புங்குடுதீ வுதித்திட்ட புகழ்சேர் சான்றோர்
கண்ணியத்தைக் கற்றொழுகிக் காலம் யாவும்
....காட்டுமொரு பரிவுதனை உலகம்  போற்றும்!

அஞ்சாத படைவீரன் ஆண்ட பூமி!
...  அதுதானே எம்மவர்க்கு என்றும் சாமி!
துஞ்சாமல் தலைவனது கொள்கை பேணித்
.... .துணையாக நின்றவர்கள் சீரைப் போற்றி!
நெஞ்சத்தில் நாட்டுணர்வை ஏந்திக் காத்து
......நிறைமனத்தை அடைந்திட்டோம்! இன்றும் அந்தச்
செஞ்சொற்றுக் கடனெண்ணி மகிழ்வார்  சோம
......சுந்தரனார் திருநாவுக் கரசர் வாழ்க!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.