9/18/2016

அன்பே வா!


கொஞ்சும் கிளியே கோல விழியே
கொண்ட துயரைப் போக்கு -எழில்
மிஞ்சும் அழகால் மீண்டும் வந்தே
மின்னல் போலே தாக்கு!
கட்டிக் கொண்டால் காதல் தேடும்
காமன் பள்ளிக் கூடம் -அதை
விட்டுத் தள்ளி விரைந்து சென்றால்
வீணாய்க் கலையும் வேடம்!
உன்னை என்னை உணர்ந்தால் போதும்
உலகம் சொர்க்கம் ஆகும் -இதில்
தன்னைத் தானே வருத்திக் கொண்டால்
தானாய் உள்ளம் வேகும்!
அன்பே உன்றன் அழகைக் கண்டு
அடிமை ஆனேன் அன்று -அதை
முன்பே உணர முடிந்தால் ஏன்தான்
முட் டா ளானேன் இன்று!
கண்ணே மணியே காலம் தோறும்
காதல் கீதம் பாடு -உன்னை
எண்ண மறந்து இருப்பே னானால்
இதயக் கதவை மூடு!
பஞ்சும் நெருப்பும் பக்கம் வந்து
பற்றிக் கொண்டால் போதும் -உயிர்
தஞ்சம் உன்றன் நெஞ்சம் என்று
தானே இங்கு ஓதும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
    நலமா? வெகு நாட்களுக்கு பிறகு அழகான காதல் பாட்டு.
    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. கண்ணே மணியே காலம் தோறும்
    காதல் கீதம் பாடு -உன்னை
    எண்ண மறந்து இருப்பே னானால்
    இதயக் கதவை மூடு!..

    அருமை.. அழகு!..

    ReplyDelete
  3. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. கவிதை அருமை!நலமா!?

    ReplyDelete
  5. வணக்கம் அன்பு உள்ளங்களே!
    வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  6. #அழகைக் கண்டு அடிமை ஆனேன் அன்று#முட்டாளானேன் இன்று!#
    காதல் படுத்தும் பாடு அருமை :)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........