6/06/2011

நாம் உங்கள் செல்வங்கள் !.......

அம்மா வயிற்றில்  கருவாய்  இருந்து
பாப்பா நாமும்  வந்தோமே!
சும்மா இருந்த முதுகில் இப்போ
சுமையைக் கொழுவி விட்டாரே!

பாப்பா நாமும்  பறவைகள்  போல
பறந்து திரிய நினைத்தோமே!
பத்துப் பாடமும் மனதில்  பதிய 
பகலும் இரவும் துறந்தோமே !

குத்தம் குறைகள் சொல்லும் அம்மா
கோலைக் கையில் எடுத்தாலே
பிஞ்சுக் குழந்தைகள்  எங்கள் உள்ளம்  
பதை பதைத்துப்  போகாதா !

பெற்றவர் அறியாப்  பிள்ளை மனதை
மற்றவர் அறிய  மாட்டாரே!
இந்தச்  சித்திரவதையைப் பெற்றே  ஆயினும்
சிறப்புப் பட்டம் தர  நினைப்பான் ஏன்!

கற்றவர்மட்டும் வாழும் உலகினில்
இனி மற்றவர் வாழக் கூடாதா!
சுய புத்தியை வளர்த்திடும் வாழ்க்கைக்
கல்வி சுகமாய் இருக்கக் கூடாதா!

நித்தமும் எங்கள் கனவினில்கூட 
புத்தகம் வருவது முறைதானா!
இத்தனை சிறிய வயதினில் எம்மை 
இறுக்கிப் பிடிப்பது சரிதானா !

பெத்தவர் (கள்)கூட பகைவர்கள் போல
முறைத்துப் பார்ப்பது முறைதானா!
இதனால் மொத்தமாய் எங்கள்
மழலைப் பருவம் புத்தகப்பூச்சி ஆனதுவே!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. இது குழந்தைகள் மீதான அக்கறை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரரே தங்களின்
    கருத்துக்கும் வரவுக்கும்.

    ReplyDelete
  3. பிஞ்சிலே பழுக்க வைக்க நினைக்கின்றார், அறிவுக்காக பிஞ்சுகளுக்கு புத்தக சுமையைக் கொடுத்து.

    ReplyDelete
  4. நன்றி ஐயா தங்களின் வரவுக்கும்
    கருத்துக்கும்!.....

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........