6/18/2013

சிவ சிவ என்றிட சிந்தையும் மகிழ்ந்திடும்


எண்ணிக் கழிக்கும் நாட்களுக்கிடையில்
இத்தனை துன்பம் ஏன் இறைவா ?.....!!!!!
இந்த மண்ணில் பிறந்த உயிகளுக்கெல்லாம்
மகிழ்ச்சியை என்றும் தா இறைவா .......

தண்ணிப் பஞ்சம் தாவரப் பஞ்சம்
தரையை வாட்டி வதைப்பதனால்
உயிர்களைக் கொல்லும் வெப்பம் உலகம் எங்கும்
உக்கிரமாதைத் தடுத்தருள்வாய்...........

வெள்ளிப் பனி மலை உருகிக் கடலை
தரையைத் தாவி வந்தென்றும்
உயிர்களை அள்ளிக் கொலை வெறி
ஆடும் ஆட்டம் அடங்கிட இங்கே அருள்புரிவாய்

மண்ணில் நல் வளம் மகிழ்வாய் பொங்கிட
மா தவத்தைத் துறந்து நீ வருவாய் என்றும்
கண்ணின் மணியென கருணைக் கடலென நற்
கருத்தில் உறைந்த பக்தருக்காய் 

பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........ 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. அருமையான வரிகள்... அருள் கிடைக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ !

      Delete
  2. verygood prayer to siva. god bless you/ spr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  3. சிவசிவ என்றிட சிவகதிதானே..... லெவ்ட்டு ரைட்டூ.. டேயூ நைட்டூ எனக் கவிதையில் கலக்குறீங்க அம்பாளடியாள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்றுமே வாழ்த்துச் சொல்லி என் கவிதைகளை வாழ வைக்கும்
      என் தோழிக்கு அன்பு கலந்த நன்றிகள் .......

      Delete
  4. அம்பாளடியாள் அகமது உருக
    உன்பால் விண்ணப்பம் விடுத்துள்ளாள்
    தென்பாலுறையும் சிவனே அரனே
    அவளின் நல்மனம்வாழ அருள்செய்!

    அருமையாக வரம் வேண்டினீர்கள்!
    அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி தங்களின் இனிய வாழ்த்து என்றுமே
      மனதைத் தொட்டு நிற்கின்றது .

      Delete
  5. //பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
    புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
    அன்னந் தண்ணி இரண்டும் அருளி
    அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........//

    நிறைவான நியாயமான பிரார்த்தனைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. எம் முழு முதற் கடவுள் சிவனிடம் நீங்கள் வேண்டியவைகள் அனைத்தும் அருமை! கவிதையும் அழகு!

    ReplyDelete
  7. உலக நலம் வேண்டும் இனிமையானதொரு பிரார்த்தனை. வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  8. நெஞ்சம் நிறைவும் பிரார்த்தனை.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........