7/29/2014

தாய் மண்ணை முத்தமிட வேண்டும்


மண்ணின் மணமது குன்றாமல்
மலர்கள் மலரும் எம்நாடே!
பெண்ணின் பெருமை புகழையுமே
போற்றிப்   பாடும்  எம்நாடே!
விண்ணில் இருந்து தேவருமே
வாழ்த்தி  வணங்கும் எம்நாடே
கண்ணின் மணியே கற்கண்டே-உன்னைக்
காணத்    தவிக்குது மனம் இன்றே!

உறவுகள் கூடி மகிழ்ந்திடவும்
உன்னத  வாழ்வு வாழ்ந்திடவும்
திறவுகோல் ஒன்று கிட்டாதோ!
தென்றலைத் தாங்கும் எம்நாடே !
பிறமொழி   பேசும் அயல்நாட்டில்
பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்
திறமைகள்      இருந்தும் பாரம்மா
திவ்விய  ஒளியே கேளம்மா!

நிலைமைகள் இங்கு வேறாகும்-இதனால்
நித்தமும்     துன்பங்கள் ஆறாகும்!
தலைமுறை காத்திட வழியின்றித்
தவிப்பவர் உள்ளமும் நீறாகும்!
அலைகடல்    அலையே தான் வாழ்க்கை
ஆசைகள் எமக்கே  மாறாகும்
கலைநயம்  மிக்க எம்நாடே  இங்கு
காண்பவை யாவும்  சேறாகும் !!

பனைமரக்  காடும் தென்னைகளும்
பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
நினைவினில் வந்து வாட்டுதடி
நெஞ்சுரம்    கொண்ட எம்நாடே
வினைகளை அறுத்து எறியாயோ!
வேங்கைகள் எம்மின்  அடையாளம்!
மனைகளில்  இன்பம் பொங்கிடவே
மாபெரும் மகத்துவம் நிறைநாடே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/19/2014

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !


தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
        தாகம்  தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
        பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
      காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
       செம்      பட்டுடுத்திய அம்மாவே !

மருவத் தூராள் எனக் கேட்டால்
   மலரும்   சிரிக்கும் தன்னாலே !
புருவம்     வியந்து  பார்த்திடவே 
   பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
   உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
   வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!

கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
          கூட  வருவாய் என் தாயே
நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
      நித்தம்  இருந்தால் போதுமடி
அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
   தோல்வி   எம்மைத் தழுவிடினும் !

வேப்பிலைக்கு ஈடாக என்றும்
  வினைகள்        தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ 
  கருணை           பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
  பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்       போ தெல்லாம்
     நல்ல        துணை யாபவளே !!
 
படம் :இணையத்தில் பெற்றுக்கொண்டது .நன்றி    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/15/2014

எண்ணமெல்லாம் நிறைந்த சிவனே போற்றி போற்றி



இயல்பு   நிலை மாறாமல்
    ஈசன்   அடியைப் பற்ற வேண்டும்
முயலும் வரை  முயன்று நானும்
   மும்    மூர்த்தி  புகழ் பாட வேண்டும்
கயல்   விழிகள்  ஏங்காமல் இங்கு
   காத்  தருள்வாய்  எம் பிரானே
வயல்  வெளியில்  வரப்பினைப் போல்
  வார்த்தை   என்றும் உயர்வு பெற  !

எண்ணத்தில் உன்னை வைத்து
  ஏற்றமுற  வடித்த நற் பா -தேன்
கிண்ணமெனத் தோன்றிடவே எம்
   சிந்தையிலே வந்த மர்வாய்
வண்ணத்தில்  சிறந்த வண்ணம்
    வாழ்வ    னைத்தும் வந்துதிக்க
விண்ணவரும் போற்றும் வகை
    வார்த்தைகளைத் தந் தருள்வாய்

காரைக்கால்  அம்மையைப் போல்
   களிப்புடனே நாம் வாழ
தேரைக்கும்  வாழ்வளிக்கும் நின்
   திருவடியே சொர்க்க மென்பேன்.!.
நீரைப்போல் நிலத்தைப் போல்
   நீங்காத     வரமளிப்பாய்  இறைவா -ஜென்மக்
கூரைக்குள் அவதரித்த எமை என்றும்
   வேரைப்  போல் காத்தருள்வாய்...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/05/2014

எண்ணற்ற துயரம் வந்து என் நெஞ்சை அடைக்கிறதே

 

எண்ணற்ற துயரம் வந்து
என் நெஞ்சை கொல்கிறதே!
புண் பட்ட உள்ளத்திலே
பூகம்பம் எழுகிறதே!

இதை அடக்க வழியைத் தான் தேடுகிறேன்- நான்
இருந்தும் ஊமையாய் வாடுகின்றேன்!
கனவு சிதைவதைக் காணுகின்றேன் எதிர்
கால முடிவைத் தான் தேடுகிறேன்!

பறவை என்றால் சிறகுகள் வேண்டும்
பேசிப் பழக உறவுகள் வேண்டும்
நிலைமை இங்கு வேறானதே என்
நினைப்பும் இதனால் நீறானதே!

கலகம் நிறைந்த பூமியிலே
காணும் யாவும் பொய்யானதே
உலகம் இதைத் தான் விரும்புதடா
ஊமை நாடகம் ஆடுதடா!

இறந்தவர் தொகையை எண்ணி எண்ணி
இருப்பதை விடவும் மரணம் மேல்
சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
சிந்தையில் எட்டுதா பாரிங்கே!

ஒருதலைப் பட்சத் தீர்வு  இதனால்
ஒழிந்திடும் அழகிய தீவு!
உயிர்களைக் காப்பது இனி யாரு ?
எல்லாம் உணர்ந்தவரே  பதில் கூறு ?

                                             (     எண்ணற்ற துயரம் வந்து..)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/02/2014

என் தேகம் பட்டுப் போனாலும்...



என் தேகம் பட்டுப் போனாலும்
இந்த  சந்தேகம் விட்டுப் போகாது!

அதைச் சொல்லு சொல்லு சொல்லு மன்னா
எனை அள்ளு அள்ளு அள்ளு கண்ணா
உயிர்த் தீயில் தீயில் நீயே தானே
உருவாகி நின்றாய் தேனே தேனே...

என் தேகம் பட்டுப் போனாலும்
அந்த  சந்தேகம் விட்டுப் போகாது ...

பஞ்சணை என்று நெஞ்சினிலே
தூங்கத் துடிக்கின்றாய்
பகலும் இரவும் என் விழியைப்
பார்த்தே ரசிக்கின்றாய்!

கொஞ்சிடும் போது இதழ்களை வருடிக்
கோலம் போடுகின்றாய்!
விஞ்சிடும் போது விரல்களைப் பிடித்தே
விருப்பைத் தொடருகின்றாய்!

இது ஏனோ ஏனோ!
பிடிவாதம் தானோ!
விடை கூறு கண்ணா?
விழி தேடும் மன்னா!

இது காதல் தானடி பெண்ணே என் மீது
கருணை காட்டடி கண்ணே!

சிற்றிடை மீது பற்றிய தீயைத்
தீண்டித் தணிகலாம் வா....
ஒத்தையில் வந்தால் முத்தமாய்த் தந்து
உயிரைக் குடிக்கலாம் வா .........

பெண்

இது ஆசை ஆசை பொல்லாதது
அந்தம் ஏதும் இல்லாதது
இழந் தென்றல் உன்னால் சூடானது ...
இனி எங்கும் முன்னே நில்லாதிது

ஆண்

உன் தேகம் பொன்னானது
என் மோகம் என்னாவது ?
சந்தேகம் உண்டானது இதில்
சந்தோசம் சதிராடுதே!.....

                   (என் தேகம் பட்டுப் போனாலும் ...)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/25/2014

சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறது



காத்திருப்பின் அவசியங்கள்
கலைந்து போனது!
கால தேவன் கைகளிலே மனம்
உறைந்து போனது!

நேற்றுவரை உன் நினைப்பு
நெஞ்சில் இருந்தது!
இன்று முதல் என் நினைப்பும்
மறந்து போனது!

ஊற்றெடுத்த ஞானமிதால்
உயிர் பிழைத்தது!
உண்மை எது பொய் எதுவென
உணர்ந்து கொண்டது!

வாட்டும் துயர்
வழி தவறி எங்கோ போனது!
வந்த சொந்தம் பொய் அதனால்
வருத்தம் தணிந்தது!

கவிதை ஒன்றே
காதலுக்குப் பொருத்தம் என்றது!
கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
கனவு பெருத்தது!

நிலவு கூட எனக்கு இதனால்
சொந்தமானது!
நித்தம் மகிழ்வு வந்து வந்து
சித்தம் குளிர்ந்தது!

கவலை ஏது! கண்ணீர் ஏது!
கவிதை இருக்க
காலம் போகும் போகும்
இன்ப ஜாலம் துரத்த!.
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/23/2014

வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு...

 

வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு
வந்து போகுதே எண்ணம்
கன்னி மயில் ஆட்டம் ஆடி
கண்கள் ரெண்டிலும்!

உன்னிடத்தில் மோகம்
உள்ள அந்தத் தாகம்
சொல்லில் அடங்காது
சொன்னால்  புரியாது!

பூங்குருவிக் கூட்டம்
பாடும் அந்தப் பாட்டும்
தேனெடுக்கும் வண்டு
தேடி வரும் தோட்டம்!

ஆலமரம் புளியமரம்
அழகழகாய்ப் பூக்கும் மரம்
வேலவனின் ஆலயமும்
வேண்டி நிற்கும் பக்தர்களும்

கால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ?
ஊரழகைத்  தேரழகை
உயிர் தரித்த மண்ணழகை

சொன்னால் புரியாது
சொல்லில் அடங்காது
இன்னலிது கேளு
எந்தன் உயிர்த் தீவே!

உன் மடியே சொக்கமடி
உணர்ந்தவர்க்குத் இன்பமடி
அள்ளி அணைக்காயோ?
அன்பை உதிர்க்காயோ?

என்றன்  உயிர்த் தீவே!
என்று அணைப்பாயோ!

                              ( வன்னி மண்ணைத் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2014

பாவச் செயலை இளைத்தவர் தமக்கொரு பரிசும் இது தானே


சத்தியத்தைப் புறக்கணிக்கும் மானிட வாழ்வு
சாக்கடையில் தான் மிதக்கும் மூடரே  கேளீர்!
வித்தைகளை யாம் படித்து வெற்றி கொள்ளலாம்
வென்ற வெற்றி தோல்விதனைத் தழுவிச் செல்லலாம் !

மட்டமான நினைப்புளால்  மரணம் கிட்டலாம்!
மாறு வேடம் போட்ட உண்மை மனத்தைக் கொல்லலாம்!
திட்டமிடும் சதிச் செயலால் சக்தி இழக்கலாம் உயர்
தீமைகளே வாழ்நாளை அலங்கரிக்கலாம்!

உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமா!
ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமா!
கொத்த வரும் பாம்பிற்கும்  தீங்கு நினையாதார்
கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ!

பத்துமாதம் சுமந்து அன்னை பெத்தெடுக்கிறாள்
பகலிரவாய்க் காத்தும்  எம்மை வளர்த்து விடுகிறாள்
எத்தனையோ கனவு சுமந்து ஏங்கித் தவிக்கிறாள்
எதிரிகளின் கண் படாமல் மறைத்தும் வைக்கிறாள்

பெத்தவளின் மனம் துடிக்கக் காவு கொள்வீரோ!
போதையினால் அறிவிழந்த மூடர் தாம் இங்கே
வெற்றியென நினைத்ததெல்லாம் வெற்றியுமல்ல
வேண்டி நிற்கும் ஆசைகளும் அழியுமே மெல்ல!

இன்றுணர மறுக்க வைக்கும் இளமையும் சாகும்!
அன்று துயர் கொன்று தமை ஆட்டியும் படைக்கும்!
என்றொருவர் அழிவை எண்ணிக்  குழி பறித்தீரோ
அன்று முதல் காத்திருப்பீர்  அக் குழி வரவேற்கும்!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/11/2014

செல்வம் இருக்கும் இடத்தில் சிறந்த பண்பும் வேண்டும்



நீர்க்குமிழி போல மனம் உடைந்து போகுதே!
நெஞ்சுரத்தை இழந்து தினம் தஞ்சம் கோருதே!
போர்க்கொடியை உயர்த்துவதால் வந்த தொல்லையே
பொறுமை என்ற வாசகத்தை எவரும் அறியவில்லையே !

மனம் முழுக்க வக்கிரத்தைப் புதைத்து வைத்தாரே!
மாறு வேடம் போட்டு நாளும் சேட்டை செய்தாரே!
குணம் அறிந்தும் ஒதுங்கிடத்தான் வழியுமில்லையே!
கொள்கையிலும் இழிவான கொள்கையுடையோரே!

ஏழை என்று இளக்காரம் கொள்ளவும் வேண்டாம்!
எளியோரைப் பழி வாங்கித் திரியவும் வேண்டாம்!
நாளை இந்த உலகினிலே எதுவும் நடக்கலாம்
நலிந்தோரின் வாழ்வு சிறக்கப் புதையல் கிடைக்கலாம்!

அற்பருக்கு வந்த வாழ்வு அகத்தைக் கிழிக்கலாம்!
அடுத்தவரின் சாபம் வந்து முகத்தை மறைக்கலாம்!
சொற்ப காலம் வாழும் வாழ்வில் சொந்தம் எதுவடா
சோதனையும் வேதனையும் கொடுக்கும் மானிடா!

நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம் அதை
நாடி நின்றோர் கோடி நன்மை பெற்று வாழ்கவே!
உட்புறத்தைத் தூய்மையாக்கி உலகம் உய்யவே
உண்மை பேசி நன்மை யாவும் பெற்று வாழ்கவே!

(படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/09/2014

சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே



சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே!
சொக்குப் பொடி போடும் இந்தக் கண்ணை நம்புதே!
என்றன்  உயிர் என்னிடத்தில் சண்டையிடுதே!
எங்கு சென்ற போதினிலும் முந்திக்கொள்ழுதே!

கண்ணழகைக் காட்டிக் காட்டி
காதல் வலை விரித்தாயே!
பெண்ணழகைப் பார்த்துப் பார்த்து
போதையிலே சிரித்தேனே!

காதல் இன்று என்ன ஆச்சு? -வெறும்
கானல் நீராய்ப் போயே போச்சு!
ஆசை அது என்ன ஆச்சு?
அத்தனையும் பொய்யாய் போச்சு!

ஊரை விட்டுப் போனாலும்
உன் நினைப்புப் போகலியே
பாறையில நீர் கசிய
பக்குவத்தை விதைத்தவளே!

ஆலமரமாய் இருந்தேனே
அன்பால் துரும்பானேனே!
யார் அழுதால் உனக்கு என்ன?
அழுதவரை மறந்து விடு!

குற்றமது பார்த்துப் பார்த்து என்னைக்
குப்பையிலே போட்டவளே
சத்தியமாய் உன் நினைப்பில்
சாகும் வரை  நானிருப்பேன் ....

                                                    (   சொந்த பந்தம்... )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/07/2014

உடல் அசையும் ஓசை இங்கே



உடல் அசையும் ஓசை இங்கே
உணர்வுகளின் பாசை எங்கே!
மலர்களிலும் நீ தான் அழகடி என்
மனம் கவர்ந்து செல்லும் பைங்கிளி..

கடலலையில் மோகம் கொண்டேன்  இங்கு
கரையென நான் நாளும் நின்றேன்
தொட விரும்பித் தொட்டுச் செல்லும் உனை நான்
தொந்தரவு செய்யேன் இனியும்

வர விரும்பி வருவாயோ புது
வசந்த காலம் தருவாயோ?
திருமண நாள் காத்திருக்குது இந்தத்
திங்களைத் தான் எதிர் பார்த்திருக்குது ...

பெண்

சொக்க வைக்கும் சுந்தரனே
சொன்ன சேய்தி அறிவேனே ...
அக்கம் பக்கம் பார்த்து இனியும்
அன்பை அள்ளித் தருவேனே ....

முத்து உடல் தொட்டணைக்க புது
மோகம் வந்ததா?
இந்தச் சித்திரத்தைக் கவர்ந்து செல்லத்
தாகம் வந்ததா ?

காத்திருக்கேன் காத்திருக்கேன் என்
கனவும்  நீ தானே ...
எதிர் பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்
ஏக்கம் ஏன்  செந்தேனே?

ஆண்

பூவு ஒன்று பேசியதே !...
புன்னகையை வீசியதே ....
தேன் அழைக்குது தேன் அழைக்குது அன்பே வா
தென்றலென முன்றலென முன்பே வா .....

கண் சிமிட்டும் நேரமெல்லாம் இனிக்
காதல் அரங்கேறும்!
கைவளையல் ஓசையோடு
மோதல் அரங்கேறும்!

பெண்

போதும் போதும் போதும் மச்சானே
பெண்ணிவளை வெக்கம் கவ்வ வைக்காதே!
உச்ச நாணம் உயிரைக் கொல்லுதே!
உன் பெயரை உரக்கச் சொல்லுதே!

ஆண்

அச்சம் ஏனடி?
அமைதி கொள்ளடி
மொட்டு விட்ட மலரே நீ புது
மோகம்   கொள்ளடி

பத்து விரல் தொட்டணைத்துப்
பாடம் சொல்லவா?
பாவை உன்றன்  விழி கசிய
பார்வை சிந்தவா?

பெண்
பரிகாசமா?
இது நியாயமா?
என் தேகம் தொடலாமா?

ஆண்

சந்தேகம் வரலாமா?

                             (  உடல் அசையும் ) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/05/2014

வண்ண வண்ணக் கனவுகளால் என் எண்ணம் நீளுதே


வண்ண வண்ணக் கனவுகளால்
என் எண்ணம் நீளுதே!- அதில்
வந்து வந்து உன் நினைவு என்னை வாட்டுதே!
அன்னமென நடை நடந்து போகும் பைங்கிளி
ஆசை ஆசை என்றும் உன்மேல் தானடி

மொட்டு விட்ட மலரே நீ
மோக வலை வீசாதே
கட்டி வைத்த கரும்பே என்னைக்
கட்டெறும்பு ஆக்காதே !

புத்தனுக்கும் ஆசை வரும்
போதி மரம் தூசாய் மாறும்
கட்டழகு ரதியே எனைக்
கட்டிக் கொள்ள வா தனியே

முத்த மழை பொழியத்தான் காத்திருக்கிறேன்
மூன்று கால வேளையிலும் எதிர் பார்த்திருக்கிறேன்
உத்தரவு தந்தாலே போதுமடி பெண்ணே
மன ஊஞ்சலிலே உன்னை வைத்து
ஆடுமடி கண்ணே!

(பெண் )

ஆசை ஆசை ஆசை ஆசையைப் பாரு
ஆதரவாய் சாயும் முன்பே மீசையைப் பாரு
காதல் வலை வீசியது நானா நீயா?
களத்து மேட்டில் சண்டை வேண்டாம் போ போ மாமா ...

தாலி வரம் ஒண்ணு தந்தா போதாதா?
தங்கமென கொஞ்சும் நிலை மாறாதா?
ஆடவனின் ஆசையெல்லாம் எத்தனை காலம்?
அந்தி சாயும் நேரமாச்சு போ போ மாமா...

(ஆண் )

மன இருப்பைச் சொல்லி விட்டேன்
மானே மானே
நான் மறுபடியும்  வருவேனே
தேனே தேனே ....

தவமிருந்து உன் நினைப்பை
நான் மாற்றுவேன்
தங்கமென வெள்ளியெனத்தான் கொஞ்சுவேன்
அறுவடைக்கு நேரமாச்சு
போ போ பெண்ணே
ஆசை தீர உனை அணைக்க
வருவேன் கண்ணே ...

என்னாசை என்னோடு தீராதடி
எவர் வந்து தடுத்தாலும் மாறாதடி
உன்னோடு நான் சேரும் காலம் வரும்
ஓடோடிப் போ போ போ என் பைங்கிளி .....

                                            ( வண்ண வண்ணக் கனவுகளால்..)                                                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/01/2014

ஆணவம் மிகுதலும் அழிவுக்கோர் அடையாளம் தான்

முட்டி மோதி அலை கிழித்து
மூர்க்கமாய்ப்  பறக்கும்  பறவை எமை
எட்டிப் பிடித்து வெற்றி கொள்ளவே
ஏங்கித் தவிப்பீரோ குள்ள நரிகளே !!

நரிகளின்  வேஷம் நிலைக்காது
நாளும் நினைப்பது நடக்காது இவை
புரியும் காலம் வரும் போது
பூப்போல் எம் மனமும் இருக்காது !

அழிவைத் தேடி அநீதியை மூட்டு
ஆணவத் தேரினை எந்நாளுமே ஒட்டு
ஒழியும் காலம் வரும் போது
உணரத் துடிப்பீர் மூடர்களே !

ஏழைக் குடிசையை எரிப்பவர் தமக்கு
என்றோ ஒரு  நாள் அழிவு பிறக்கும்
நாளை என்பதே நிட்சயமற்ற
நரகலோக வாழ்வுதனிலே

உண்மை பேசி உயர்வு பெற்றவர்
உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
வெண்மையான மனத்தை வதைத்தவர்
விரயமாகி  போய் விடுவர்!!

நல்லோர் விடும் சாபம் ஒன்றையே
எந்நாளும் வாங்கும் அரக்கர்களே
பொல்லா வினையால் புழுவாய்த் துடிப்பீர்
பொறுமை இழந்து ஆடாதீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/31/2014

தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்



தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்
தவமாய் அவனை என்னுள் வைத்தேன் 
சேயைப் போற்றும் அப்பனை மறந்தவர் 
செழுமை உடையவரா? ..........

அன்னை கோவில் என்றால் 
அப்பன் தெய்வமடா !......
அந்தத் தெய்வம் இல்லை என்றால் 
நீயும் இல்லையடா !....

தாயைப் போற்றும் மனமே கொஞ்சம் 
தந்தையை நினையாயோ !-அந்தத் 
தந்தையின் காலடி சொர்க்கம் என்று 
சங்கதி சொல்லாயோ !......
                                        
அன்பை ஊட்டி வளர்த்தாள் அதனால்   
அம்மா தெய்வமடா ........
அந்தத் தெய்வமும் வாழ வழிகள் வகுத்த 
அப்பா பாவமடா ......

காலை இழந்ததும் கண்ணீர் சிந்துது 
காளை மாடிங்கே!- அந்தக் 
காளை மாட்டின் கவலைகள் எல்லாம் 
அதன்  கன்றுகள் தான் இங்கே !....

பத்தே மாசம் சுமந்தவள் எம்மை
பாதியில் மறந்து விட்டாள்  நான்
பாக்கியம் செய்தவள்  அதனால் அப்பனின்
பாசத்தில் வளர்ந்து விட்டேன்! ....

அம்மா அம்மா அம்மா தெய்வம் என்றால் போதாது
சிலர் அப்பனைக் கொஞ்சம் இப்படி நினைத்தால்
தப்பேயாகாது ...................

கொட்டும் மழையில் குடையாய் வந்தவன்
குல தெய்வம் தான் இங்கே!
அந்தக் குல தெய்வம் தந்த
அறிவைக் கொஞ்சம் பார் பார் பாரிங்கே !...

பட்டப் படிப்பு நாம்  படிக்க
பனியில் அவன் உறைந்தான்
தன் பாசம் எல்லாம் கொட்டிக் கொடுத்துத்
தனியாய் ஏன் இருந்தான் ?..........!

                                             (தாயைப் போலொரு....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/23/2014

கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே...




கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே
கண்ணிறைந்த தூக்கம் ஏனடி?
உன்னோடு வாழும் பொன்னான நாட்களை
இன்றோடு முடித்தாய் ஏனடி ?

மங்கள நாணில் சாபம் வீழ்ந்ததால் என்
மனமிங்கு வலிக்குதடி! - உன்னைத் 
திங்களைப் போலே  நினைத்தேன் அதனால் என் 
திசை எட்டும் இருண்டதடி!

                                              (   கல்யாணப் பெண்ணே )

கங்கையைக் கண்ணில் சுமந்திடத்தானா
இந்தக் காதலும்  சொல்லிங்கே ?
என் அங்கமும் உசிரும் துடிக்குது உன்னால் 
என் ஆருயிரே  நீ எங்கே ?

இதயம் இதயம் புண்ணானது என் 
இளமை எல்லாம் மண்ணானது- ஓர் 
உதயம் எனக்கு நீயானாய் இந்த  
உயிரைப் பிரிந்து  ஏன் போனாய்?

                                         
மலரே மலரே பேசாயோ? உன் 
மலர்விழி திறந்தென்னைப் பாராயோ? 
உலரும் நாவிலே  உணர்வும்  சாகுதே
என் உயிரே நீயும் பேசாயோ ?

மௌனப் பாசறை விட்டெழுந்து வா
மணவாளன் கைகளைத் தொட்டெழுந்து வா
பூவே உன் வாசம் போகாதடி
போனாலும் என்னுசிரு தாங்கதடி ......

                                            (   கல்யாணப் பெண்ணே )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/20/2014

அடடா அடடா அழகிதடா அமுதைப் பொழியும் நிலவிதடா



அடடா அடடா அழகிதடா
அமுதைப் பொழியும் நிலவிதடா!
உதடா உதடா தேன் கூடா
உலகம் சுற்றுதே என் தோழா!

கனவில் வந்தவள் அவள் தானே என்
கைகளைப்  பிடித்தவள் அவள் தானே!
நினைவில் நின்றவள் அவள் தானே என் முன்
நீச்சலடித்தவள் அவள் தானே!

மின்னலடிக்கும் கண்ணழகி  உயிர்
மூச்சைத்  தடுக்கும் பெண்ணழகி!
அன்ன நடை அது நடையழகு என்னை
ஆட்டிப் படைக்குதே  அவள் இடையழகு!

கன்னமிரண்டும் செவ்வாழை -அவள்
கழுத்தினில் தொங்குதேன் என்  மூளை!
சிக்கனமாய் அவள்  சிரிக்கையிலே நான் ஏன்
சிக்கித்  தவிக்கிறேன்  மச்சானே!

ஐயோ ஐயோ ஐயோ  ஓரம் போங்கடா- இவன்
காதல் வலையில் விழுந்து புட்டான் தூரம் போங்கடா!
மச்சம் உள்ள இடத்தை மட்டும் விட்டுப்புட்டானே
மத்ததெல்லாம் சொல்லிச் சொல்லி மனசத் தச்சுப்புட்டானே!

கெட்டி மேளச் சத்தம் கேட்கும் நேரம் வந்தாச்சு
நம்ம நட்பு மெல்லத் தூரம் போகும் காலம் வந்தாச்சு
நண்பனுக்கு ராஜ யோகம் கூடி வந்தாச்சு அந்த
ராணியோட சேரும் காலம் தேடி வந்தாச்சு ...

பீப்பீ  பீப்பீ பீப்பீ பீப்பீ ...
டும் டும் டும் டும்..
பீப்பீ ...பீப்பீ...பீப்பீ..பீப்பீ ..
டும் டும் டும் டும்....

அழகா அழகா அழகிதுவா?
அமுதைப் பொழியும் நிலவிதுவா?
உதடா உதடா தேன் கூடா?
உன் உலகம் சுற்றுதா என் தோழா?

பட்டு வேட்டி கட்டிக்கோ மெல்லப்
பாவை மனசில் ஒட்டிக்கோ
எட்டுப் பத்துப் பெத்துக்கோ
ஏன் தான் தாமதம் என் தோழா?

ஆஞ்சநேய பக்தனுனக்குக் காதல் வந்தாச்சு
அம்மா சொன்ன பொண்ணோடு தான் மோகம் வந்தாச்சு
நேந்து வச்ச நேத்திக்கேத்த பொண்ணு தானடா
நெத்தியடி பந்தயத்தில் நாம் செயிச்சுப் புட்டோம்டா!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/18/2014

விடியலைத் தேடி ஓடுகின்றோம்



விடியலைத் தேடி ஓடுகின்றோம்
  வீதியில்  நின்றே வாடுகின்றோம்
அடியவர்  குறைகளைக் கேட்காயோ
   ஆடிடும் தில்லைக் கூத்தனே நீ?.... !
படியவே  மறுக்குது மனமிங்கே இது
   பாசமா  பக்தியா  சொல்லிங்கே ?...
கொடியவர் வஞ்சகர் வாழ்வதற்கே -பல
    கோடி   நன்மைகள் அருளுகின்றாய் !!

விதி என   அனைத்தையும் மறந்திருந்தோம்
         விரும்பியே உனதடி தொழுது நின்றோம்
சதி செய்யும் மனத்தவர் மகிழ்ந்திடவே
         சாம்பலாய் எமதுடல் வேகுவதா !
அதி உயர் சக்தியே ஆனந்தமே -எமை
          ஆட்கொள்ளும் எங்கள் பெருமானே
கதி அது உனையன்றி யாதுமில்லை-எமைக்
           காத்திடிட இங்கே எழுந்தருள்வாய்

பெருகிய    துன்பங்கள் மடியட்டும்
  பேரொளி  எங்கும் திகழட்டும்
கருகிய       உள்ளங்கள் சிரிக்கட்டும்
  காதலால்  மும்மாரி பொழியட்டும்
அருகிய       நற்புகழ் ஓங்கட்டும்
   ஆனந்தம்  நெஞ்சினிலே தங்கட்டும்
உருகியே    உனதருள் வேண்டுகின்றோம்
     உமைய   வளோடிங்கு எழுந்தருள்வாய்

 புலியுடை அணிந்த நாதனே -மனம்
    புண்பட  எமையிங்கு வைக்காதே
கலியுகம்   காத்திட  எழுந்தருள்வாய்
   கண்களில் ஆனந்தம்  தந்தருள்வாய்
பொலிவுற  உன்னாலே நீதியிங்கே
    புதைந்திட வேண்டும் அநீதியெங்கும்
நலிவுறும்  அடியவர் மனம் தழைக்க
    நமச்சி வாயனே எழுந்தருள்வாய் ...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/07/2014

காலம் வரும் வரும் போது பகையை வெல்வோம்



அன்பு செய்ய வந்தவளே! எம்மை
ஆதரித்து  நின்றவளே!
உயர் பண்பதனால் உருவானவளே!
உத்தமியே! கொஞ்சம் நில்லு!

புறமுதுகு காட்டாமல்
புலியையும்தான் விரட்டியவள்
நடுநிசியில் பெருநெருப்பாய்
நகர்ந்து நீயும் எங்கே வந்தாய்!

கொடியவரை அழித்திடவோ
கோ மகளே புறப்பட்டாய்!
நெடிய துயர் நெஞ்சை வாட்ட
நீ போகும் பாதை எதுவோ!

விடியும் வரைக் காத்திருந்து
விம்மி விம்மி அளவும் மாட்டாய்!
படை நடுங்கும் உனைத்தான் கண்டு
பாசம்மிகு தமிழ்த் தாயே நில்லு!

ஒத்தையிலே போர் முனைக்கு நீ
ஓடோடிச் செல்கையிலே
சித்தமெல்லாம் கலங்குதடி
சினம் தணிந்து  வா தாயே!

ஊளையிடும் நரிகளுக்கு
உன்னால்தான் முடிவு பிறக்கும்!
கோழையல்ல தமிழினத்தின்
கொள்கை நிலைத்திடும் நீ வா தாயே!

வீர மறவரை ஈன்றெடுத்தவள்
வேதம் அனைத்தும் கற்றுக் கொடுத்தவள்
உயிரின்  நாதமெனத் தமிழ்மொழியில் உதித்தவள்
உலகப் புகழின் உச்சமே! நீ வா தாயே!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/30/2014

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக..


உழைக்கும் மக்கள் வாழ்வுயர
ஒன்று சேருவோம் நாங்கள்
ஒற்றுமையாய் நின்றுலகில்
வெற்றி காணுவோம் .....

அடுக்கடுக்காய் உயருகின்றான் அரசியல்வாதி
அடிமைப் பட்ட ஏழைகளின்  உழைப்பையே நம்பி
பிணத்து மேல நடந்ததெல்லாம் போதுமடா சாமி
பிஞ்சு மனம் கல்லுடைத்தால் கிளம்பிடுமே சுனாமி ...

மரத்துக்கும் மனிதனுக்கும் பேதமுண்டடா
மாசு பட்ட சிலருக்கு எல்லாம் ஒன்றடா....
இனத்துவேசம் காட்டிக் காட்டி வெட்டி எறிவார்
ஈன்றெடுத்த தாய் மண்ணைத் தட்டிப் பறிப்பார்  ....

நடத்தை கெட்ட நாய்களுக்குப் புத்தியும் இல்லை
நம்பி நம்பி வாழ்வோர்க்குச் சக்தியும் இல்லை
குடத்துக்குள் எரியுதடா குத்து விளக்கு
கோவப் பட்டால் வந்திடுமே அந்த வழக்கு ...

படிச்சவனும் ஏமாந்து பல்ல இழிக்கின்றான்
பழக்க தோஷம் மாறாமல் கொல்ல நினைக்கின்றான் !
இனத்துக்குள் பாவப் பட்ட எம்மினத்தைப் பாரு
இரக்கமுண்டெல் எம்முடனே நீயும் வந்து செரு ....

தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும் 
தோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும் 
அநியாயம் செய்வோரை எதிர்த்திட வேண்டும் 
ஆண்டாண்டு காலமாக நலன் பெற வேண்டும் ....


                                                             
                                                
                                            கலியுகத்தில் இதுவும் கடந்து போகும்....

(படங்கள் :இணையத்தில் பெற்றுக் கொண்டது .நன்றி )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/21/2014

சிவன் இன்றிச் சீவன் ஏது ...

                                 

துன்பம் வரும் போதினிலும் சிவன் நாமம்
துவண்டு விழும் போதினிலும் சிவன் நாமம்
இன்பம் வரும் போதினிலும் சிவன் நாமாம்
ஈற்றில் செல்வம் வரும் போதும் சிவன் நாமம்

சிந்தையிலே சிவன் இருக்கப் பயமேது ?...
சீற்றம் கொள்ளும் நாகம் முன்னும் கிடையாது !!
எந்தன் உயிர் என்னிடத்தில் இல்லையடி
ஏழ்பிறப்பும் வேண்டும் இந்தத் தொல்லையடி

அம்மையப்பன் பதம் பற்றி வாழ்ந்திடவே
ஆகுதியாய் இவ்வுடலை நான் துறப்பேன்
செம்மையான நினைப்பிது தான் மாறாது
சிவன் அருளைப் பெறும் வரைக்கும் ஓயாது ...

ஒளவையைப் போல் மன உறுதி வேண்டுமிங்கே
அடைக்கலமாய் அவனருளை நாம் பெறவே
சிந்தையிலே நாண் ஏற்றி எக்கணமும்
சீர் பெற்றார் அறுபத்தி மூவரும் தான் !!

விந்தையான அவன் நாமம் சொல்லச் சொல்ல
விரும்பிய நற் பொருள் கூடும்  மெல்ல மெல்ல
இந்த சுகம் இன்ப சுகம் இணையே அற்ற
ஈசனருள் பெற்றவர்க்கும் அடிமை நானே....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.