1/02/2012

சிந்தனைத் துளிகள்.


(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியை மறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமமானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய் மாறும்.

(6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்குப்  பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள் மீதும்  
         அதன் தத்துவங்கள் மீதும்  கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது.



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
    நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.
    வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  2. பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
    நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.
    வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  3. வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கிறீங்களா?
    வள்ளுவனின் வெண்பா நடைக்கு ஒப்பானதாக வாழ்வியலையும், மனித மனங்களையும் எடை போட்டு அழகிய சிந்தனை முத்துக்களை உதிர்த்திருக்கீறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  4. மனிதனின்
    மதி பருகவேண்டிய
    நன் துளிகள்

    ReplyDelete
  5. வணக்கமம்மா..!
    அருமையான பகிர்வு.
    அதிலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள்..

    உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
    ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு சமனானது...

    சரியாக சொன்னீர்கள் இப்படிபட்டவர்கள் பல பேர் கிளம்பீட்டாங்க அறிவுரை சொல்ல ..!!

    ReplyDelete
  6. அருமையான மொழிகள். அனைவருக்கும் உவப்பானவை. அதிலும் (7) எனக்கு மிகமிகப் பொருத்தமானது. மகிழ்ந்தேன், வியந்தேன். நன்றி.

    ReplyDelete
  7. அருமையான சிந்தனைத் துளிகள்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோ...
    வாழ்வில் நித்தமும் கடைபிடிக்க வேண்டிய உயிர் மொழிகள்...
    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  9. மீள் பதிவாயினும் தூள்பதிவு
    பத்தும் மொத்தத்தில் முத்து
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எல்லாமே கடைபிடித்தால் உன்னத வாழ்வுதான்.

    ReplyDelete
  11. அனைத்துமே வாழ்வின் தத்துவங்கள்...யாரும் பின்பற்றுவதில்லை என்பதுதான் வருத்தம்.

    ReplyDelete
  12. வாழ்தலுக்குத்தேவையான சிந்தனைகள்.
    புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கு

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........