2/24/2011

வீட்டு மிருகங்கள்

குட்டி முயல் கூட்டுக்குள்
கொறித்துத் தின்னுது கரட்டைப் பார்!                      கொண்டைச் சேவல் கோழியுடன்
விதைகளைக் கொத்தித் தின்னும் குஞ்சுகள் பார்!

ஆட்டுக் குட்டியும் மாட்டுக் கன்றும் குழைகளை
அழகாய் மென்று தின்பதைப் பார்!
வாத்துக் கூட்டம் தண்ணிக்குள்ளே 
வடிவாய் மிதந்து செல்வதைப் பார்!

பூனைக் குட்டிகள் கூரைமேல் 
எலிக் குஞ்சைப் பிடிக்கத் தாவுது பார்! 
கொளுத்த பூனை அடுப்படியில் 
கொதித்த பாலையும் குடிக்குது பார்!

நாய்கள் போட்ட குட்டிகளுக்கு 
நல்லான் உணவு கொடுப்பதைப் பார்!
அவை வாங்கித் திண்ட சோற்றுக்கு 
வளமாய்க் காவல் காப்பதைப் பார்! 

பெட்டை நாயும் கடுவன் குட்டியும் 
புல்லைப் பித்தம் தெளியத் தின்னுது பார்! 
வண்ணக் கிளிகள் குஞ்சுகளுடனே 
வடிவாய்த் தொங்கும் கூட்டைப் பார்! 

அவை எண்ணம் போல மாம்பழத்தை 
இனிதே கொத்தித் தின்பதைப் பார்! 
வீட்டு மிருகம் இவைகள்தான் நாம் 
விரும்பி வளர்க்கும் செல்வங்கள் பார்!  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. குழந்தைகளுக்கு ஏற்ற இனிமையான பாடல்.

    ReplyDelete
  2. பிள்ளைக் கவிதை பார்க்கும் போது குழந்தைக் கவிஞர் வித்தகர் வேந்தனாரின் பிள்ளைப் பாடல்கள் நினைவுக்கு வருகிறது. நன்று !

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி!......ஒரு படைப்பாளிக்கு தங்களைப் போன்றவர்களின்
    வாழ்த்துக்களும் கருத்துரைகளுமே என்றும் ஊக்கத்தையும் ஆக்கத்
    திறனையும் அள்ளி வழங்குகின்றது. இப்பணி தொடரட்டும்
    உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.............

    ReplyDelete
  4. இனிய கவிதை. அருமை. பாரட்டுக்கள்.

    ReplyDelete
  5. நல்ல பாடல் .. அம்பாளடியாள்..

    ReplyDelete
  6. நல்ல பாடல் .. அம்பாளடியாள்..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........