10/31/2013

தீப ஒளித் திருநாளில் மகிழ்ச்சி பொங்க ஒரு நல்வழி



எங்கோ ஒரு தெரு முனையில்
ஏதோ ஒரு தெய்வத்திற்குப்
பொங்க வைத்துப் படைப்பதெல்லாம் அன்று
ஏழைகள் வயிறு நிறைவதர்க்கே!

எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
ஏழைகள் வயிற்றைக் குளிர வைப்பீர்!
தங்கும் மங்களம் எந்நாளும்
தக தக தகவென இல் வாழ்வினிலே!

ஒளியை ஏற்றும் திருநாளில்
வெடியைப் போட்டு மகிழாதீர்!
விடியும் காலம் வேண்டும் எனில்
மடியும் உயிர்களுக்கு உணவளிப்பீர்!

கருணை பொங்கும் இதயத்தில்
கடவுள் தெரிவான் எந்நாளும்
உயிரைக்  காக்கும் செயலொன்றே
உன்னதமான செயலாகும்!

வருவாய் இருந்தால் ஏழைக்கும்
வாழ்வளிக்கத் துணிபவரைத்
தொழுவார் உலகில் தெய்வமெனத்
தொண்டில் சிறந்தது இது தானே ?

இனிப்பாய் உண்ட பலகாரம்
இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்டும்!
                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

26 comments:

  1. வணக்கம்
    இனிப்பாய் உண்ட பலகாரம்
    இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
    நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
    நினைப்பே போதும் நல் வழி காட்ட

    கவிதையின் வரிகள் மதை உருகவைததுவிட்டது வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  2. வருவாய் இருந்தால் ஏழைக்கும்
    வாழ்வளிக்கத் துணிபவரைத்
    தொழுவார் உலகில் தெய்வமெனத்
    தொண்டில் சிறந்தது இது தானே ?...!!!!

    தீபாவளி வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
      என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  3. எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
    ஏழைகள் வயிற்றைக் குளிர வைத்தால்
    தங்கும் மங்களம் எந்நாளும்
    தக தக தகவென இல் வாழ்வினிலே ...// அருமையான வரிகள்! சிறப்பான படைப்பு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  4. இனிப்பாய் உண்ட பலகாரம்
    இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
    நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
    நினைப்பே போதும் நல் வழி காட்ட .//
    அழகான பண்டிகை செய்தி.
    பகிர்தல் மகிழ்ச்சி.
    அதுவும் இருப்பவர்களெக்கே கொடுத்துக் கொண்டு இருக்காமல், இல்லாதவர்களுக்கு கொடுத்தால் நல்லது.
    தீபாவளி வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
      என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  5. நல்ல செய்தி...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  6. //விடியும் காலம் வேண்டும் என்றால்
    மடியும் உயிர்களுக்கு உணவளிப்பாய் ........//

    அழகோ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

    வாங்கோ ப்ளீஸ்: http://gopu1949.blogspot.in/2013/10/73.html#comment-form

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
      என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  7. உண்மைதான் சாந்தரூபி!
    இந்தப் பண்டிகை என்றில்லை எல்லாப் பண்டிகைகளிலும்
    எம் நினைவும் செயலும் அவர்கள் மேல் இருந்தால் அதைவிட
    வேறு புண்ணிய காரியம் உண்டோ...

    உன்னதமான உணர்வுத்தூண்டல் கவி படைத்தீர்கள்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
      என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  8. ஏழைகளுக்கு திண்டாட்டம்தான்....

    மகிழ்ச்சியை பன்மடங்காக பெருக்க ஒரு வழி அடுத்தவருடன் பகிர்ந்துக்கொள்ளுவதன்தான்....

    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
      என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  9. எல்லோர் நினைவும் இது போல் ஆயின் என்றுமே தீபாவளிதான்!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் ..உங்களுக்கும்
      என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  10. இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  11. அழகாகச் சொல்லிட்டீங்க தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரியாரே !

      Delete
  12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  13. அருமையான வரிகள்.
    தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  14. கருணை பொங்கும் இதயத்தில்
    கடவுள் தெரிவான் எந்நாளும் !

    தீபாவளி வாழ்த்துகள்..!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........