9/12/2014

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...


அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !

அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்!
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !

தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்!
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !

பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்!
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !

வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்!
தெள்ளத் தெளிவாய் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !

உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும்  நம்பிடுவோம்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !

தானம் தர்மம் செய்திடுவோம்!
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்!
கனவில் கூட அமைதி கொள்வோம் !     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

18 comments:

  1. உலகே அன்பால் நிறைக்க எனும் உங்கள் பாடல் அருமை தோழி! வாழ்த்துகள் !!

    ReplyDelete
  2. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...

    ReplyDelete
  3. அம்பாளடியாள் கவிதைகளை வலையில்
    அனைவரும் நன்கு படித்திடுவோம்
    தம்பா நாளும் தவறாமல்
    தருவார் ! வருவார் அறிவீரே!

    ReplyDelete
  4. நற்பணி ஆற்றிட நாடே மகிழ்வுறும்!
    கற்றிடச் சொன்னீர் கனிந்து!

    அருமையான அறிவுரைப் பாடல்! நலமாக இருக்கின்றீர்களா?..
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  5. வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
    வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்///
    அன்பாய் இருப்போம் அகிரத்தில் சிறப்போம்

    ReplyDelete
  6. அன்புடையீர்..
    விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
    இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா !விரைந்து வந்து பார்வையிடுகின்றேன் .

      Delete
  7. அருமையான பாடல்.
    வாழ்த்துக்கள் தோழி.
    த.ம. 4

    ReplyDelete
  8. நல்ல குணங்களை வளர்த்திட சொல்லும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வோம் வோம் என்று ஓங்காரத்தில் நீங்கள் சொன்ன நல்ல கருத்துக்களை ரசித்தேன் !
    த ம 5

    ReplyDelete
  10. அன்பே சத்தியம். அன்பே நித்தியம்...அன்பே ஆனந்தம்....இறுதி வரிகள் அருமை! அருமையான கவிதை வரிகள்! சகொதரி!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........