7/26/2011

அடிமை விலங்கை உடைக்க வா............

நெஞ்சில் உரம்கொண்டு 
வஞ்சகரை அழித்திடவேண்டி
அன்னையவள் பாதம் தொழுது 
அஞ்சாது கவிதை மழை பொழிந்தேன் 
 
அன்புக்கு அடிமையானவள் 
அரசனின் தவறான தீர்ப்பைக்கண்டு 
பொங்கி எழுந்தாள் அன்று கடலென 
இன்றும் புவிபோற்றும் அந்தக் காப்பிய நாயகி 
 
என்றும் அனலினில் இட்ட  புழுவாய்
அவதியுறும் எங்கள் உறவுகளின் 
வேதனை தீர்த்திட வரமாடடாளோ என்று 
என் இதயத்தைக் குடைந்த உணர்வினால் 
 
கண்ணீர்க் குடம் உடைந்து 
கசிந்துருகிய என் நினைவுகள் 
ஒரு பாடலாய் இன்று உங்கள் முன் 
இதுவும் என் தாய்த்திரு நாட்டிற்கு சமர்ப்பணம்!...
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/24/2011

என் மறக்கமுடியாத நினைவுகளின் இறுதித்தொடர்.....

வணக்கம் உறவுகளே எனது மறக்க முடியாத நினைவுகள்
தொடரில் இறுதியாக இன்று கன்னியாகுமரியில் நிகழ்ந்த ஒரு
மறக்க முடியாத நிகழ்வு ஒன்று. இந்த நிகழ்வின்மூலமாகத்தான் 
கவிதைகளையும் கண்ணீர் அஞ்சலிகளையும் ,நகைச்சுவைகளையும் 
தந்துகொண்டிருக்கும் என் வாழ்வில் முதன்முறையாக பாடல்கள் 
எழுதவும் ஓர் உணர்வு பிறந்தது.பொதுவாக நாம் காகித இதழ்களில்த்
தான் ஆக்கங்கள் எழுதுவதுவழமையான ஒன்று   ஆனால் அன்று                                                                                                                          
கடலின் நடுவில் கப்பலில் ஓர் கசிந்துருகும் உணர்வு  சட்டெனத் தோன்றிடவே காகித உறையின்மேல் நான் வடித்த இந்தப் பாடல்வரிகள் 
நான் அதிகம் சங்கீதம் பயிலவில்லை ஆனாலும் இது என் இதயத்தில் 
தினமும் ஒலிக்கும் இராகம் ஒன்று இதில் தவறுகள் நிறையவே இருக் 
கலாம்.இருந்தால் மன்னிக்க வேண்டும்.இருப்பினும் இந்தப் பாடலின் 
மூலம் ஓர் செய்தியினைச் சொல்லப் போகின்றேன்.இதற்க்கு உங்கள் 
கருத்துரைகளையும் ஆதரவையும் நிறையவே எதிர்பார்க்கின்றேன்.
இதற்கு முன் எனது முதற்பாடல் என்று ஒன்று வெளியிட்டிருந்தேன்.
அதற்க்கு அடிப்படையாக என் மனதில் எழுந்த சிறு ஊற்றுத்தான்
இந்தப்  பாடல் இனி என் இம்சைக்குள் நுழையலாம்  நன்றி உறவுகளே!.................. 
              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/23/2011

மூச்சுக் காற்று மூன்றின் தொடர்....

பூத்துக் குலுங்கும் அன்பெனும் இன்பச் சோலையில் 
மூச்சுக்காற்றுகள் மூன்றாக வகுத்து என் அன்புச் சகோதரர் 
(வசந்தமண்டபம்) மகேந்திரன் அவர்தந்த தொடர் பணியினை 
அழகாக முடிந்தவரைத் தொடரவந்தேன் என் உறவுகளே 
அந்தவகையில் எனக்குத் தெரிந்த பாணியில் இதோ அந்த 
(தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்) மூச்சுக்கள் மூன்றின் தொடர். 
 
(1 )நல்லவராய் வாழ்வதற்குத்  தேவை.
      அன்பு ,பொறுமை,உண்மை.
 
(2 )கெட்ட சகுனங்கள் மூன்று.
      தீயவரைக்காணுதல்,தீயது பேசுதல்,தீயது செய்தல்.
 
(3 )நினைத்துப் பார்க்க வேண்டியது. 
      செய் நன்றி ,கடமை ,உறவுகள்.
 
(4 )நினைக்கக்கூடாதது  
      நடந்து முடிந்த தீயவை,கெட்ட சிந்தனை,துரோகம்.
 
(5 )வெற்றிக்கு வழி வகுப்பவை.
      தன்னம்பிக்கை,விடாமுயற்சி,பொறுமை.
 
(6 )வீரனுக்கு அழகு.
      பிறர் நன்மைகருதி விட்டுக்கொடுத்தல்.
      தீய செயல்கண்டு பொங்கி எழுதல்.
      வலுவிளன்தொரைக் காத்தல்.
 
(7 )அரசனுக்கு அழகு.
       மக்களைக் காத்தல்
       மக்களின் நன்மைக்காகமட்டும் உழைத்தல்.
       மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தல்
 
(8 )மனைவிக்கு அழகு.
      பணிவன்போடு பேசுதல்
      நற்பண்புகளுடன் வாழுதல்
      இல்லறத்தை அழகாகக் காத்தல்.
 
(9 )கணவனுக்கு அழகு.
      ஆணாதிக்கத்தை மறத்தல்.
      அன்பால் அரவணைத்துச் செல்லுதல்
      குடும்ப நன்மைகருதி உழைத்தல்.
 
(10 )பிள்ளைகளுக்கு அழகு.
        பெற்றவர் சொற்க்கேட்டு நல்லவராய் வளர்த்தல்.
        வயோதிப காலத்தில் பெற்றோரைக் காத்தல்.
        நல்ல பிள்ளை என்றுமட்டும் பெயர் எடுத்தல்.
 
(11 )உண்மையான சகோதரத்துவத்துக்கு இலக்கணம்.
        கூட இருக்கும்போது  இருந்த அன்பை இறக்கும்வரைக் காத்தல்.
        இடர்வந்தபோது தன்னை மறந்து உதவுதல்.
        பெண் என்றால் அவள் கற்ப்பை தன் உயிராய்  மதித்தல்.
 
(12)பூப்படைந்தவளின் நலனுக்கு உகந்தவை.
       குட்டை ஆடை அணிவதைத் தவிர்த்தல்.
       எங்கு சென்றாலும் நல்ல தோழியுடன் செல்லுதல்.
       புதிய ஆணின் நட்பை வேண்டப்பட்டவரிடம் தெரிவித்தல் 
 
(13 )நல்ல நட்புக்கு அழகு.
       முடிந்தவரை உண்மையாக இருத்தல்.
       ஆபத்தில் உதவுதல்,பிரிந்தாலும் பழகிய நட்பை மறவாதிருத்தல்.
 
(15 )எந்த  வலைத்தளத்துக்கும் அழகு.
        ஆபாசப் படங்களைத் தவிர்த்தல்,
        ஆபாசச் செய்திகளைத் தவிர்த்தல்
         தரமான பயனுள்ள செய்திகளை வழங்குதல்.
 
(16 )அடிக்கடி மாறக்கூடியது .
        மனித மனம்,இயற்கையின் குணம்,அறிவின் வளர்ச்சி .
       
இன்று இது போதும் உறவுகளே உங்கள் விருப்பம் கண்டு நாளையும்
தொடரும்!... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/11/2011

மறக்க முடியாத சில நினைவுகள்..(தொ -2 )

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே.இன்றைய எனது மறக்க 
முடியாத நினைவுகளில் இடம்பெற இருப்பது இலங்கையில் 
கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையில் வீற்று
இருக்கும் ஸ்ரீ வீர மகா கண்ணகி அம்மன் (பத்தினி)கோவில்.
இந்தக் கோவில் 1973 ல் ஸ்தாபிக்கப்பட்டது .இது ஒரு மிகச் சிறிய
கோவில். ஆனாலும் அம்பாளின் அருளாட்சிக்கு எல்லை இல்லை.
பக்த்தர்கள் தம் விருப்பம்போல அம்பாளுக்கு பாலாபிசேகம்
செய்வதுமுதற்கொண்டு அன்னதானம் வழங்குவதிலும் இந்த 
ஆலயத்தைப் பராமரிப்பதுவரை அவரவர் விருப்பம்போல் 
காணிக்கைகளைச் செலுத்தி அம்பாளின் அருளைப்பெற்று 
வருகின்றார்கள்.வேண்டிய வரம் அளிக்கும் இந்தக் கண்ணகி
அம்மன் கோவிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள்
வந்துபோகின்றனர்.விசேஷ தினங்களில் அன்னையின் தரிசனத்தைக்
காண்பதற்கு மிகவும்  சிரமமாக இருக்கும். அத்தனைக்கும் காரணம்
நான் சொல்வதைவிட உங்களில் யாருக்காவது சந்தர்ப்பம் கிட்டினால்
இந்தக் கோவிலுக்கு ஒருதரம் சென்று வாருங்கள்.ஆலயங்கள்
இன்று முழத்துக்கு முழம் எங்கெல்லாம் அமைந்திருந்தாலும் சில
ஆலயங்களில்மட்டுமே புதுமையான உணர்வைப் பெறமுடிகின்றது.
அந்தவகையில் இந்தக் கோவிலில் உள்ள சிறப்பினை நான் பிறர்போல்
விளம்பரம் செய்வதர்க்குக்கூட விரும்பவில்லை.காரணம் என் 
மனதில்க் குடிகொண்டிருக்கும் என் அம்பாள்மீது பக்தி மட்டும் அல்ல 
நான் அவள்மீது நிறைந்த பாசமும் வைத்திருக்கின்றேன்.என் எண்ணம் 
என் சிந்தனை உடல் பொருள் ஆவி அத்தனையிலும் குடிகொண்டிருக்கும்
இந்த உணர்வை வெறும் பிதற்றல் என  பிறர் நம்ப மறுத்தால் அதைத்
தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்குக் கிடையாது.ஆனாலும் இந்த
அம்பாளினுடைய புதுமையை பலரும் அறியச் செய்வதில் எனக்கொரு 
பேரானந்தம்.அதற்குக் காரணம் நிறையவே இருக்கின்றது.
எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிட முடியாது.ஆனாலும்
ஒரே வார்த்தையில் சொல்கின்றேன் நான் நானாக வாழ எனக்கு 
வேண்டிய வரத்தைக் குறைவின்றிக் கொடுத்தாள்.இன்றும் அவளால்த்
தான் நான் உயிர்வாழ்கின்றேன்.இப்போது நான் இட்ட தலைப்பிற்கு 
வருவோம்!...
 இதுவரை இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் சிறப்பைத்தான்     சொன்னேன். அன்று நான் காணும்போது  கற்கோவிலில் குடிகொண்டு இருந்ததாய் என்று என் இதயக்கோவிலில் வந்து அமர்ந்தாளோ
 
அன்றுதான்  அவளருளால் முதன்முறையாக இந்த வலைத்தளத்தை நான்
ஆரம்பித்தேன். முகவரி தொலைந்த எனக்கு இப்படி ஒரு முகவரியைத்
தேடியடைய வைத்தவளும் அவள்தான்.எப்படி என்று கேட்க்கின்றீர்களா?..
பல கனவுகள் சுமந்து எதுவுமே கைகூடாமல் இந்த வெறும்கூடு
இது இருந்து என்ன பயன். மனிதனாகப் பிறந்தால் எதையாவது சாதிக்க 
வேண்டும் .நான் அப்படி எதைச் செய்துவிட்டேன்?ஏதாவது செய்யவேண்டும்  
என்று ஆதங்கத்துடன் இந்தத் தாயை நினைந்து ஆழமாகச் சிந்தித்தேன் .
கிட்டத்தட்ட பத்துப் பாடல்கள் உருவாக்கும் வல்லமையை அவள்
எனக்கருளினாள். இதை எதிலாவது வெளியிட வேண்டும் என்று
என் ஆவலின் நிமிர்த்தம் எனக்கு இந்த வலைத்தள செய்திகிட்டவே
அவள்தந்த பாடலுடன் நான் ஆரம்பித்த இந்தத் தளத்தில் அவளின்
அன்புக்கு நான் அடிமை என்ற உணர்வு எனக்குள் எழவே "அம்பாளடியாள்"
என்று  பெயர் சூட்டினேன்.அந்தப்பாடலே எனது ஆக்கங்களுள் பிரபல
மான இடுகைகளில் ஒன்றாக வெளிவந்த "ஆதி சக்தி ஆனவளே
அம்மா தாயே" என்றபாடல் இதை நானே பாடி வெளியிட உள்ளேன்.
இந்தப் பாடல் வருகின்ற 16 ம் திகதி என் வலைத்தளத்தில் நீங்களும்
கேட்கலாம். நன்றி உறவுகளே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
தவறாமல்க் கருத்திட்டு இந்த ஆக்கத்தை வாழ வையுங்கள் என்று
பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி வணக்கம்.................... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

நெடுந்தீவுபற்றிய சில அரிய தகவல்கள்.....


  
யாழ். குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஏறக்குறைய 32 கிலோ மீற்றருக்கு அப்பாலும் இராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவிலும் நெடுந்தீவு அமைந்துள்ளது.
இத்தீவு கிழக்கு மேற்காக 9 கிலோ மீற்றர் நீளத்தையும் வடக்குத் தெற்காக 6 கிலோ மீற்றர் அகலத்தையும் ஓர் சரிந்த இணைகர வடிவில் சுமார் 30 கிலோ மீற்றர் சுற்றளவையும் கொண்டது.
இத்தீவு தலைத் தீவு பசுத் தீவு பால் தீவு அபிஷேகத் தீவு தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழை க்கப்பட்டு வந்தன. எனினும் இப் பெயர்கள் யாவும் காரணப் பெயர்களாகவே அமைந்தன.


             இது பெருக்கு மரம் இம்மரம் பலநூறு ஆண்டுகளுக்கு 
முர்ப்பட்டதெனக் கூறுகின்றார்கள்.நெடுந்தீவில் 
இருக்கும் இந்த பெருக்குமரமே தென்னாசியாவில் 
இரண்டாவது பெரிய சுற்றளவான  மரமும் ஆகும். 

இதுதான் நெடுந்தீவு மாவலி துறைமுகம்.இதைப் பயன்படுத்தி
ஒல்லாந்தர் குதிரைகளை ஏற்றி இறக்கினார்களாம்.அதனால்த்தான்
இதற்க்கு இப்பெயர் உருவானது என்றார்கள்.அதற்கு அருகில் உள்ள
புகைப்படம் நெடுந்தீவில் காட்டுக் குதிரைகள் வசிக்கும் இடம்.
பார்பதற்கு றொம்ப  அழகா இருக்கும்.
                                           

இதுதானுங்க கல்வேலி பார்ப்பதற்கு மிக மிக அழகாக
இருக்கும்.ஒரே அளவில்  இந்த வேலிகள் கட்டியுள்ள
அந்த நுட்பத்தை என்னவென்று சொல்ல!....ஆனா
இவங்க றொம்ப உறுதியாகக் கட்டி வச்சிருக்காங்க.
இதையே வேறமாதிரி யோசிச்சுப் பாருங்க நம்ம
சண்டைக்கார வீடுகளில் இந்தமாதிரி வேலி இருந்தா
நிலைமை எப்படி இருக்கும் அதனால ஆதாரபூர்வமாய் 
இன்னொரு அதிசயம் சொல்லுறன் கேளுங்க. 
இதனுடய பாதி அங்க நிறைய இருக்குங்க.என்ன நா  சொல்லுறது
பொய் என்குறீர்களா?....இது என்ன சின்னம்?...காதல் சின்னம்தானே?..
அப்ப நா சொல்லுறதுதா ரொம்ப சரி....எனுன்னா காதல் அங்க நிறைய
இருக்குது சின்னம்மட்டும்தான் இல்ல.வேணும் எண்டா கீழ நெடுந்தீவு
வெளிச்சவீடு இருக்கு அதப் பயன்படுத்தி கப்பலையோ படகையோ
புடிச்சு நெடுந்தீவிலையே போய்ப் பாருங்க. ஒரு வேலியிலகூட
இரத்தக்கற காணமாட்டீங்க.அதவிட றொம்ப முக்கியமா ஒண்ணத்
தெரிஞ்சுகொள்ளணும் தை மாசிமாசம் நெடுந்தீவுக்கு போறத
கனவாலகூட நினைச்சுப் பாக்காதீங்க அம்புட்டுத்தா. அனுபவத்தோட
சொல்லுற. கப்பல் பனையளவு தூரம் குதிச்சு குதிச்சுத்தான் போகும்.
பெரும்பாலும் இந்த மாசங்களில அவங்களே பயணம் செயுறதில்லயாம்
நான் நெடுந்தீவுக்கு போயிற்று வந்ததில றொம்ப  றொம்ப மறக்க
முடியாத சம்பவமே இதுதான்.பலமுற மாலுமி சொர்க்கதக் காட்டினார்
ஆனா எனக்குத்தான் றொம்ப பயமா இருந்திச்சு.உயிரை கையில 
புடிச்சுக்கொண்டு ஓடியாந்திற்றன்.ஆகா ஒண்ட மறந்திற்ரன் வெடி
அரசன் கோட்டை அது ரொம்ப நல்லா இருந்திச்சு.நா குடிச்ச கூழும்
நல்லா இருந்திச்சு இப்ப நா உங்களுக்கு குடுத்த கூழ் நல்லா இருந்தா
கீழ உள்ள வெளிச்சவீட்டப் பயன்படுத்தி நெடுன்தீவப் போய்ப் பாருங்க
இதுக்கு மேல சத்தியமா எனக்கு நேடுந்தீவப்பத்தி ஒண்ணுமே தெரியாது.
ஆனா அடுத்த பதிவு அத பாக்க தவறீடாதீங்க இது றொம்ப முக்கியமானது.
                                                  
ஆகா ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல
மறந்திற்றன்.நீங்க இன்னும் நல்லா நெடுந்தீவு
பற்றி தெரிஞ்சுக்க வேணும் என்றால்
www . neduntheevu . com இதில்  welcome  to  neduntheevu
சென்று பாருங்கள். ஹி.....ஹி.....ஹி..........தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/10/2011

கொடையிற் சிறந்த "கொடிவேல்"

ஏவாமற் பணிபுரிய ஈசன் எமக்களித்த
இருகரமே மூவா மக்களுள் முனிவரும்
நின்கருணை உளமறிவார்...........
 
நாவால் நாமுரைக்க முடியா நின்பணியது!..
காரிருளில் ஒருவிளக்காய் எமைக்காத்து 
நின்ற திருவிளக்கே வானுலகம் சென்றாலும் 
வையத்தே நின்புகழ் வாழ்வாங்கு வாழ 
வள்ளலே நாகேந்திரரே நின்பணி  பூவோடு 
மணமதுபோல் பூவுலகில் நிலைத்திருக்க 
நன்நாவுடைய மனிதரெல்லாம் 
நின்நன்றியை எடுத்துரைக்க வையத்தே
நின்வம்சமெல்லாம் தழைத்திருக்க மாறாது
மறையாது நின்பணி தொடர்ந்திருக்க
மறுபடியும் பிறந்து இங்கே வாழ்வாங்கு 
வாழ வாழ்த்துரைப்போம்....
 
என்ன இந்தப் பிறவியென இருளில்
கிடப்பவர் முன் தன்னை அழித்து ஒளிகொடுக்க
இத்தரணியிலே மெழுகினைப்போல்
கல்வியொடு கருணையும் கலந்து பிறந்த மானிடருள்
உன்னை ஒருவனாய் ஒளிகொடுக்கும் தலைவனாய் 
எண்ணி மகிழ இறைவன் எமக்களித்த வள்ளல் 
பெருந்தகையே எம் வாழ்வில் இன்பம் அளித்த 
நாகேந்திரரே எம்மையாம் இழந்த பின்னும் 
உன்பெயர் நிலைத்திருக்கக் கவிபாடிடுவோம்.... 
 
நெஞ்சமெனும் ஆலயத்தில் நிழல்
கொடுத்த தந்தையிடம்-தஞ்சமென
வந்தவர்க்குத்  தானம் கொடுத்தகரம்
பஞ்சமெனும் நிலைபோக்கி பாசமளிக்கும்
மனமுனை நெஞ்சுருக வாழ்த்துகிறோம்
நித்தமும் பணிபுரிந்த ஒப்பிலா அன்பின்
உணர்வுடைய அன்னையே!...தந்தையே!..
நின் ஊனுடல் மறைந்திடினும் எம் உள்ளத்தே
பெரும் பேருடனும் புகழுடனும் திகழும் மனம்
வாழ்க வாழ்கவென வாழ்த்துரைப்போம்....
 
தீவொடு தீவாய் திகளுமொரு நெடுந்தீவினிலே
பூவொடு நாரினைப்போல் பிணைந்தனர் நற்பணியில் 
பூவுலக நாயகனாம் புண்ணியனாம் 
நாகேந்திரரொடு செல்லம்மா கரம்பிடித்து 
சேவையினால் தன்தேவை மறந்த இனம் 
அல்லும் பகலும் இணைந்தன்பாய் இரு உயிரும் 
சொல்லில் அடங்காப் பணிபுரிந்தனரே!.......
கண்ணின் மணியெனக் காத்த நெடுந்தீவில் 
இன்னும் பலபிறவி எடுத்து இங்கே நலம்வாழ 
வாழ்த்துரைப்போம்...........
 
காரிருளில் ஒரு விளக்காய் 
கருணையுடைய திரு விளக்காய்
பார் புகழ வந்தபிதா நெடுந்தீவினிலே
நெஞ்சை நெகிழவைத்து நித்தமும் சேவைசெய்து 
எமை உத்தமராய் வாழ வைத்து
ஒளிகொடுத்த தெய்வமே உயர்திரு 
நாகேந்திரரே நின்உருமறைந்து போனாலும் 
வழிவழியாய் உன் கருணைக் கரம்கொடுத்த 
பொருள் மறவோம் புண்ணியனே உனது 
உடல்கொடுத்து எமக்களித்த வரம் மறவோம்
செந்தமிழன் சிரம் காக்க சேவையிலே தன்
தேவை மறந்த மாமனிதன் தேடித் தேடி 
வரம்கொடுத்த தெய்வமே உனது
மூச்சுக்காற்றில் முனிவரும் தன் தவம் துறப்பார் 
மன்னவனோ அவன்புகழில் ஒருகணம் 
மயங்கி நிற்பான் தன்னையொருவர் 
புகழுரைத்தால் அதைத்தவறு என்றே 
இவர் அறிவுரைப்பார்!...........
வெறும் சொல்லில் மட்டும் செயலைக் 
காட்டும் மனிதர் வாழும் இவ்வுலகில் 
பள்ளிப்பாலகரும் சொல்லி மகிழ்ந்திடக் 
கல்விக்கூடம் தந்த பிதா.......
தண்ணிக்கிணறுடன் இறைதாகம் தீர்த்திட 
கோவில் அமைய சேவை புரிந்த பிதா...
எம்மை உலகொடு இணைந்து  வாழ
இயந்திரப்படகை வரவழைத்தார் 
தன்னைநாடி வருவோரெல்லாம் 
தன்னுறவாக எண்ணி மகிழ்ந்தார் 
தானம் கொடுத்து தானும் மகிழ்ந்து 
எம் தலைவனைப்போல நின்றார்!..
வானம் இறைக்கும் நீரைப்போல 
தானும் கொடுக்கும் இடமறியார்
ஊசி முனையிலும் பொருளைத்தேடி
அலையும் மனிதர்கள் வாழும் உலகில் 
கொடையில் சிறந்த மனிதனதனால் 
கொடிவேல் என்று பெயரும் பெற்றார். 
 
(இதுவே எனது முதலாவது கவிதை அரங்கேற்றம்.
அடுத்த பதிவிலும் இன்னுமொரு வித்தியாசமான 
அனுபவத்தோடு சந்திக்கின்றேன் தொடருங்கள் 
உறவுகளே......) 
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மறக்கமுடியாத சில நினைவுகள் (தொ.1 )

வணக்கம் என்அன்புக்கு  இனிய உறவுகளே இன்றைய பதிப்பு இதுவரை 
நான் எழுதிவந்த ஆக்கங்களுள் முற்றிலும் வித்தியாசமானது.என் மன 
உணர்வுகளோடு தொடர்புடைய சில மறக்க முடியாத என் நினைவுகளைத் 
தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இந்த அம்பாளடியாள் மிகவும் மகிழ்ச்சி
அடைகின்றாள்.அந்தவகையில் இன்றைய முதற்பதிப்பு நெடுந்தீவுபற்றியும்
அங்கு வாழ்ந்த ஒரு மாமனிதரைப்பற்றியும் நான் அறிந்த சிலவற்றைத்
தங்களுக்கு தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.அதன் அடிப்படையில் 
நெடுந்தீவின் முடிசூடா மன்னனாகத்  திகழ்ந்த   ஸ்ரீமான். சுப்பிரமணியர் 
நாகேந்திரர் அவர்களும் அவரது பாரியார் ஸ்ரீமதி . நாகேந்திரர் செல்லம்மா
அவர்களைப்பற்றிய  தகவலும் இன்றைய எனது ஆக்கத்தில் இடம்பெற 
இருக்கின்றது.  என்னைப்  பொறுத்தவரையில்     இவர்களைப்பற்றித்  
தெரியாதவர்கள் ஈழத்தில் மிகக் குறைவாகத்தான்  இருக்க முடியும்.
இருப்பினும் இவர்களைப்பற்றி என் வலைத்தளத்தில் குறிப்பிடுவதை
நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன்.காரணம் மக்களுக்காக
தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களுக்கு சேவை செய்வதையே
தம் வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்த நெடுந்தீவின் வரலாற்று நாயகன், பெருந்தலைவன், நெடுந்தீவின்   முதன்  முதல்  கிராமசபைத் தலைவராகவும் கிராமத் தலைமைக்காரராகவும் , சமாதானநீதவானாகவும்  பணியாற்றியவர்.அதுமட்டும் அல்லாமல் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தை ஆரம்பித்து சொந்தச் செலவில் தற்காலிக பாடசாலையை அமைத்து வழங்கியவர்.மக்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்த உத்தமர் என்றும் நெடுந்தீவில்
நான்குமுறை கிராமசபைத் தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு அம்மக்களினது நன்மைகருதி போக்குவரத்துவசதி,கல்வி,சமயப்பணி,          விவசாயம்போன்ற துறைகளில் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்ப்படுத்தி மக்களின் மனதில் தனது இந்த அரிய சேவையினாலும் நற்குணத்தினாலும் கொடிவேல் என்று பெயர்பெற்ற இந்த மகானைப்போன்றே அவரது மனைவியாரும் ஈழத்தின் முதற்பெண் கிராமசபைத் தலைவியாக நெடுந்தீவு கிராமசபையால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பெற்று உலகில் நெடுந்தீவுக்குப்பெருமை  சேர்த்தவர்என்பதும் அன்று  மகாவித்தி யாலயத்தை   நிரந்தர கட்டடமாக அமைக்க தனது காணியைத் தந்துதவியவர்  என்பதும் நான் கேள்வியுற்ற சம்பவங்கள்.
 
மண்ணில் மலர்வு :1889 -11  -14              மண்ணில் மலர்வு 1900 - 04 -26 
கிராமசபைத் தலைவராக 1932 -1935  கி .சபைத்  தலைவியாக1941  .1944  
இரண்டாம் முறை                 1935  -1938  கி .சபைத்  தலைவியாக1944  - 1948
மூன்றாம் முறை                   1952  - 1956
நான்காம் முறை                   1939  -1952
மண்ணில் உயர்வு: 1973  - 07 - 02            மண்ணில் உயர்வு: 1989 - 07 - 12  
 
அது சரி இத்தனை தகவலுக்கும் இன்றையஎனது தலைப்பிற்கும் என்ன  தொடர்பு இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா?...இருக்கின்றதே. உங்களுக்கு நன்கு தெரியும் எனக்கு கிறுக்கும் பழக்கம் அதிகம் உண்டு  என்பது .அந்தவிசயம் எப்படியோ இந்தக் குடும்பத்தினருக்கு தெரியவந்ததனால்  அவசரத்துக்கு நல்ல கவிஞர்கள் கிடைக்காதபட்சத்தில் இந்த மிளகுரசம் போதும் என்று எனக்கு ஒருசந்தர்ப்பத்தை  வழங்கினார்கள்.    வழங்கிய தோடு மட்டும் நின்று  விடாமல் கவிதை அருமையாக   இருக்கின்றது  என்றும் அதை நீயே வந்து பாடித்   தரவேண்டும் என்றும்  அந்தநெடுந்தீவு  மண்ணுக்கு என்னை அழைத்தனர். பிறகு சொல்ல வேண்டுமா என் நிலையை!...  கவிபாடும் தீவுக்கு என்  முதற்கவிதை அரங்கேற்றம்  அத்தோடு என் ஆட்டம் முற்றுப்புள்ளி பெற்று  விடுமோ என்ற எனது       மனநிலையை சொல்லி  வேலை இல்லை!!!.....  ஆனால் நான் தப்பித்துக்  கொண்டேன். மாறாக  அவர்கள் எனக்கு அளித்த கௌரவம்,  உபசரிப்பு  அவைதான் இன்றும்  நான்  இவ்வளவு துணிச்சலாகக்  கவிதைகளை     எழுதக்காரணம்.  இப்போது  சொல்லுங்கள்    என் நீங்காத நினைவுகளில்  இடம்பெற்ற  இந்த  நிகழ்வுகளை  என்றும் என்னால் மறக்க முடியுமா?...           அதுமட்டும் அல்ல நான் பிறப்பதற்கு முன்னால்த்தோன்றி மறைந்த இந்த  இரு புண்ணியயீவன்களின்  சேவையைப் பாராட்டி அவர்களது  உருவப்  படத்தை அவர்கள்  உருவாக்கிய  மகாவித்தியாலயத்தில் திரைநீக்கம்  செய்துவைத்து பலரது  சிறந்த  ஆக்கங்களுடன் எனது  ஆக்கத்தையும் இணைத்து நூல்வெளியீடு செய்த அந்தநிகழ்வின்போது  பலநூற்றுக் கணக்கான  மாணவர்கள், ஆசிரியர்கள்மாமேதைகளின்  மத்தியில்  துணிச் சலாக இந்த இருவரினது சேவைகளையும்,பெயரையும்  கருப்பொருளாக  வைத்துகவிதையை  பாடலாகப்  பாடிய  அந்த நிகழ்வை   நான்  எவ்வாறு  மறப்பேன்!.....                                                                                                        இவ்வளவுதானா  இல்லை இன்னும் நிறையவே    இருக்கிறது.  அவர்கள் மனம்போல இந்தசிறுதுரும்புடன்  ஆடிப் பாடி மிக    அழகாக உபசரித்து தங்கள் ஊரைச் சுற்றிக்காட்டினார்களே இதைநான்      எவ்வாறு  சொல்வேன்........மொத்தத்தில் என்  வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத  சந்தோசத்தை  அன்று நான் அனுபவித்தேன்.இதற்கு பல காரணங்கள் இருதாலும் இன்று இந்த ஆக்கத்தை நான் எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.அதுதான் நன்றிக்கடன்.எனது இந்த ஆக்கத்தைக் காணும் ஒவ்வொருத்தர் இதயத்திலும் இந்த புண்ணிய யீவன்களின் நினைவுகள் ஒரு மீள் பதிவாக மலரவேண்டும் என்பதே        என் ஆவல். அடுத்த பதிவில்எனது"கொடையில்சிறந்த     கொடிவேல்"என்ற  தலைப்பில் உருவான என் கவிதைகளை  வெளியிடுகின்றேன் .  வளமைபோல் தங்களின் கருத்துக்களையும், விருப்பத்தையும் தெரிவித்து இந்த பதிப்பை  வாழ வைப்பீர்கள் என்ற  நம்பிக்கையுடன் தொடர்கின்றேன். நன்றிஉறவுகளே. 
                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/02/2011

என் தாய்த்திரு நாட்டுக்கு சமர்ப்பணம்....

நீதி தேவதை கண்களிலே
இருள் நீக்கிவிட்டால் வரும்
தமிழ் ஈழம் -பெரும் போரினிலே
தினம் போகுது பார் அந்தப்
புண்ணிய யீவன்கள்  இது கலிகாலம்

சிங்களம் என்றொரு பேரினத்தால்
தினம் தினம் அழியுது எம்மினம்தான்
மங்களம் வாசித்த மண்ணினிலே தினம்
மக்களின் அழுகுரல் கேட்குதடா........

எம்தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு இந்த
சிங்களம் வாழ்ந்திட வழியுமுண்டோ.........

விதையெனப் புதைகுழி சென்ற வேங்கை(கள்)
விடுதலை தாகம் கொண்ட வேங்கை(கள்)
சதையதை  இழந்த மனிதரடா உங்கள்
சரித்திரம் முடித்திட வலம் வருவார்...........

உலகமும் எம் துயர் கேட்க்கவில்லை
உண்மையை ஏற்றிட யாரும் இல்லை
தமிழனின் வேதனை தீரவில்லை
தரணியில் எமக்கினி யாரும் இல்லை.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/08/2011

மனம் உவந்து ஒரு வாழ்த்து.....

தங்கக் கலசம்
இத் திங்களின் முடிமேல்
என்றும் தங்கிட  வாழ்த்துங்கள்
இசையெனும் இன்பக் கடலில்
எங்கும் தவழ்ந்திடும் சீமான் 
இனிதே வாழ வாழ்த்துங்கள்....
தந்தை புகழையும்  இம் 
மைந்தன் காத்தான் என்றே 
நாமும் மனம் மகிழ்ந்திடும் 
எம் செந்தமிழ் கற்ற நாவினால் இவரை 
சிறப்புடன் வாழ வாழ்த்துங்கள்.......//
தித்திக்கும் குரலோசை  அதிலும்
தெளிந்த நற் தமிழோசை 
திக்கெட்டும் பரவச்செய்
சீர்காழி சிவசிதம்பரம் -என்றும்போல்
இன்றும் கலைவாணியின் அருள்பெற்று
நிலையான புகளின் உச்சியில் 
இவர் தந்தைபோல் என்றென்றும் வாழ
இன்றே வாழ்த்துங்கள்¨!......
வாழ்க வாழ்க பல்லாண்டு
நல் வளமும் ,நலனும் ,புகழும் பெற்று.....  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/06/2011

நாம் உங்கள் செல்வங்கள் !.......

அம்மா வயிற்றில்  கருவாய்  இருந்து
பாப்பா நாமும்  வந்தோமே!
சும்மா இருந்த முதுகில் இப்போ
சுமையைக் கொழுவி விட்டாரே!

பாப்பா நாமும்  பறவைகள்  போல
பறந்து திரிய நினைத்தோமே!
பத்துப் பாடமும் மனதில்  பதிய 
பகலும் இரவும் துறந்தோமே !

குத்தம் குறைகள் சொல்லும் அம்மா
கோலைக் கையில் எடுத்தாலே
பிஞ்சுக் குழந்தைகள்  எங்கள் உள்ளம்  
பதை பதைத்துப்  போகாதா !

பெற்றவர் அறியாப்  பிள்ளை மனதை
மற்றவர் அறிய  மாட்டாரே!
இந்தச்  சித்திரவதையைப் பெற்றே  ஆயினும்
சிறப்புப் பட்டம் தர  நினைப்பான் ஏன்!

கற்றவர்மட்டும் வாழும் உலகினில்
இனி மற்றவர் வாழக் கூடாதா!
சுய புத்தியை வளர்த்திடும் வாழ்க்கைக்
கல்வி சுகமாய் இருக்கக் கூடாதா!

நித்தமும் எங்கள் கனவினில்கூட 
புத்தகம் வருவது முறைதானா!
இத்தனை சிறிய வயதினில் எம்மை 
இறுக்கிப் பிடிப்பது சரிதானா !

பெத்தவர் (கள்)கூட பகைவர்கள் போல
முறைத்துப் பார்ப்பது முறைதானா!
இதனால் மொத்தமாய் எங்கள்
மழலைப் பருவம் புத்தகப்பூச்சி ஆனதுவே!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/31/2011

தீராத சுமை.....

கதிர் அறுக்கக் குனிந்த தலை
கை அறுத்து நின்றதடா!
சிந்திய இரத்தத் துளிகளினால்
சிவந்த மண்ணும் அழுததடா!
களை எடுக்கும் கமக்காரன்
களங்கம் அற்ற உழைப்பாளி-அவன்  
நினைப்பு எங்கே போனதென்று
எமக்குமட்டும்தான்  தெரியுமடா!

சொல்ல வழி இல்லையடா!
எம் சொந்தங்களின் வலியதனை
அன்னை என நினைத்த பூமி
நல் அறுவடையைத் தந்த பூமி 
எம் வம்சமதை வளர்த்த பூமி 
வறுமை  நிலை துடைத்த பூமி 
நல் உறவுதனை துலைத்து விட்டு
உருக்குலைந்து நிற்பதனை

நெஞ்சமதில் நினைத்துவிட்டால்
இந்த நினைப்பு எங்கே போகுமடா!
கணக்கற்ற உயிர்ப்பலிகள் இங்கே
கருணையற்று நிகழ்ந்ததடா!
எமக்கென ஒரு வாழ்வு அது இன்றும்                                                           இருட்டிநிலேதான்  இருக்குதடா!
இந்தக் கவலைமட்டும் இல்லையென்றால்
கண்களுக்கு ஏது தொல்லையடா !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/28/2011

காத்திருந்த விழிகள்....

முற்றத்து வெண்ணிலவே எம்மை
முதுகில் சுமந்தவள் எங்கே!
பத்துமாதம் சுமந்தவள்
பாதியிலே உயிர்துறந்தாள்!

எம் மொத்த உறவுகளையும்
தன் முதுகின்மேல் சுமந்தவள் அன்று
முள் வேலிக்குள் அகப்பட்டாள்
இன்றும் கத்திக் கத்தியே எம்
காலங்களும் வீணானதே!

கலங்குகின்றோம் வருந்துகின்றோம்..
கண்ணீரில் தினம் குளித்தும்  
தணியாத உயர் வெப்பத்தால் இதயம் 
கருகியே உருகிடும் இந்நிலை மாறுமோ!

கிட்டிப்புல்லு விளையாடும்போது 
எட்டி எட்டி அளந்த கரம் உன்னை 
விட்டுப் பிரிந்த நாள்முதலாய் 
தொட்டுத் தழுவத் துடிக்கிறதே!

ஏக்கம் கொண்ட நெஞ்சத்தில் 
தூக்கம் கெட்டுப் போனதே!
மாற்றமின்றி எம் வாழ்க்கை
மயாணம் நோக்கிச் செல்லுதே!

பட்டி தொட்டி எங்கேயும் நாம் 
பாடித்திரிந்த காலங்கள்
நித்தம் மனதை வாட்டுதே!
நீதி செத்துப் போனதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/13/2011

தரைமீது நானுறுண்டேன்

தரைமீது நானுறுண்டேன்
தலைமீது தீச்சட்டி
பாற்குடமும் நான் எடுத்தேன் 
மாரியம்மா... என்னைப் பார்க்காமல்
ஏனிருந்தாய் மாரியம்மா                                                                                                       
உலகெங்கும் உன் புகழை
ஓயாமல் நான் கேட்டும்
உனக்காக ஏங்கி நின்றேன்
மாரியம்மா.....உந்தன்                                                                                            உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா.......உந்தன்                                                                                          உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா........

ஒருகோடி ஜென்மங்கள்
உலகத்தில் நான் ஜெனித்தாலும் 
உன் நாமம் ஓத வேண்டும் 
மாரியம்மா.........நான் உனக்காக                                                                       வாழ வேண்டும் மாரியம்மா...........

கருமாரி அம்மா உன் 
கால் தொட்டு நான் பெற்ற 
பேரின்பம் பெற வேண்டும் 
மாரியம்மா......அன்பு குறையாத 
தாயே நீ வாடியம்மா... அன்பு
குறையாத தாயே நீ வாடியம்மா.... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/09/2011

இப்படியும் சில மலர்கள் ......

ரோஜா மலரை
முள்ளோடு படைத்தான்
செந்தாமரையை
சேற்றினில் படைத்தான்
சில பெண்களை ஏனோ
இரண்டுக்கும் நடுவில் படைத்தான்!....

இதயத்தில் தூய்மையையும்
இன்புறும் அழகையும்
கொடுத்த இறைவன் நல்
உதயத்தை ஏனோ வாழ்வில்க் 
காட்ட மறந்தான்!.................

பொருள் தரும் இன்பமோ 
பொறாண்மையின்  உச்சமோ
கலியுக மிச்சமோ இங்கே
கலங்குதே நெஞ்சம்!!!!........

உறவெனும் பாலமே
இன்று உயிர்ப்பலி கேட்பதால்
கனவுபோல் நினைவிது
கண்களில் துயரை மீட்டுதே!!!!........ 

வரும் பகை தீர்ப்பவர் 
பகைவராய்  ஆவதால்
மறைமுக வேதனை
மனதினை வாட்டுதே.......

கலகமே  வாழ்க்கையில்
கருந்திரை ஆனதால்
உலகமே இருளினில்
உள்ளதாய்த் தோன்றுதே!......

இத் திரைதனை அகற்றிடத்  
தீவினை தடுக்குதே!..........
நரைவிளும்வரைக் காத்திருத்தல்
பெரும்  நரகமாய்த் தோன்றுதே!!!...

  


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/31/2011

இது யார் செய்த பாவமோ!....

நீல மேகம் குடை பிடிக்க
நிலா வந்து ஒளி கொடுக்க
நாமும் உந்தன் மடிமீது
நனைகின்றோம் தினம் விழிநீரில்!

தூக்கத்தை துக்கம் முழுங்கியது
தூசி தட்டியே பல இரவுகள்
தூங்காமல் இங்கு விடிகிறது!
ஏக்கத்தில் எம் மனம் தவிக்கிறது!

எதிர்பார்த்த சுதந்திரமோ இங்கு
எதிரி கையில் இருக்கிறது!
காக்கும் தெய்வம் உறங்குவதால்
காவலின்றி மனம் புலம்புகிறது!!

தீக்குளித்தே நெஞ்சுக்குள்ளே
தினம் தீயணைப்பு நிகழ்கிறது! 
போர்க்களத்தில் எம் வாழ்க்கைப் 
போராட்டம் தொடர்கிறதே!

இதை ஊக்குவிக்கும் பல மிருகங்களும்  
எம் உணர்வுகளை உணர மறுக்கிறதே!
முட்டாள்கள் தினத்தன்று இவர்களுக்கும் 
முடி சூட்ட யார் வருவாரோ! 

பல அற்பர்களின் ஆசைக்கெல்லாம் 
அடங்கிப் போகும் எங்கள் வாழ்க்கைச் 
சக்கரத்தைச் சுழற்றிச் சுழற்றி 
சதிசெய்யும் விதியே எமை விட்டுப் போகாயோ !

கர்ப்பம் தரிக்கும் வயதின் எல்லை
காணாத சிறிய முல்லை மொட்டு
கயமை கொண்ட வண்டினத்தால்
கருவுற்றுக் கருகிப் போகுதே காவலற்று!

சற்றும் இரக்கம் காட்டாது
சாக்கடையில் வீழ்த்தி எம்மை
அச்சுறுத்திப் பெற்ற இன்பம்
அழிக்காதோ இவர்கள் வாழ்வை!

இந்த முட்டாள்கள் கொள்ளும் வெறி 
முன்னேறும் பாதை எங்கும் 
 பற்றாதோ  தீயாய்   இங்கே
எம் பத்தினிகள்  விட்ட சாபம் ஏற்று!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/25/2011

உன்கனவு நினைவாகும் காலமிது!......

பாரதியே உம்மை நாம்  வணங்குகிறோம் !
பகலிரவு உன் பேச்சில் மயங்குகிறோம்!
நீதி சொன்ன மன்னன் இங்கு நீயல்லவோ!
நிமிர்ந்து நிற்கும் பெண்ணினத்தின் தாயல்லவோ!
சூளையில் இட்ட செங்கல் மனையானது !
மனையாளின்  மனமறிய மனம்  என்றும்  கல்லானது!

பாரதி உன் மனமோ இதனால் புண்ணானது!
மறத்தமிழன்  பாட்டு  எமக்குத் துணையானது!
சாதிவெறி கொண்டவர்க்குக் காலனாய்  நின்றாய்! 
சங்கடத்தில் நின்றவர்க்கு சக்தியாய்  நின்றாய்!
வீரமற்ர மனிதர்கள் முன் வேங்கையாய் நின்றாய்!
வியர்வை சிந்தும் உழவருக்குத் தோழனாய் நின்றாய்.!

சாத்திரங்கள் பெண்ணினத்தின் வாழ்வை இருட்ட
சந்திரனாய் சூரியனாய் வந்த  பாரதியே!
பாட்டிசைக்கும்  வல்லமையால் பாரதத்தை வென்றாய்!
பாவையரின் சுதந்திரப் போர் வீரனாய் நின்றாய்!
ஏட்டினிலே  எமை வாழ வைத்த தெய்வம் நீ!
எங்கிருந்த போதினிலும்  உன்னை மறவோம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2011

வாழ்க்கையில் வெற்றிகொள்ள

உடலைக் கோவிலாக்கு
உன் உள்ளத்தைத் தெய்வமாக்கு
சத்தியத்தின் வழியில் நீ நீயாகவே இரு
உன் எதிரில் வரும்
வஞ்சனைத் தீயையும்,வதந்தியையும் அன்பெனும் நீரூற்றால்
அணைத்துச் செல்
முடியவில்லை எனில் அடித்துச் செல்
வெற்றி என்றும் உனதாகும். 
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

தத்தித் தத்தி நடந்து வாறா

தத்தித் தத்தி நடந்து வாறா
எங்கள் தங்கப்  பாப்பா
அவ பத்து விரலையும் 
மூடிகொண்டே ஓடிப் பாப்பா.....

கலர் கலராய்ப் பொட்டுச் 
சட்டை போட்டால்  
 நல்லாய்ப் புதினம் பார்ப்பாள்
பட்டுப் பூச்சி போலவந்தும் 
தொட்டுப் பார்ப்பாள் .............

வட்ட நிலா போல வந்து
எட்டிப் பார்ப்பாள்- கட்டி 
நாங்கள் அணைப்பதர்க்குள் 
கலைந்து  செல்வாள் .......

கெட்டிக்காறக்  குட்டி இவள்
பாட்டும் பாடுவாள்-  தன்
பாட்டி சொன்ன கதைகளையும் 
வடிவாய்க் கேட்டுச் சொல்லுவாள்!.....   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/17/2011

பத்துத் தலை இராவணனின்

பத்துத் தலை இராவணனின்
பரம்பரை அழியவில்லை
மொத்தத்தில மக்களது
துக்கம் இன்னும் குறையவில்லை

ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா 

குத்தங் குறை சொன்ன மக்கள் 
குழப்பங்கள் குறையவில்லை 
மொத்தத்தில சீதை அம்பாள் 
விட்ட கண்ணீர் ஓயவில்லை 

 ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

அர்த்தமற்ற வாழ்க்கையிதில்
அனர்த்தங்கள் குவிந்திருக்கு  
சத்தியத்தைக் காப்பதற்கு 
சங்கடந்தான் நிறைந்திருக்குது 

 ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

புத்திகெட்ட மானிடர்க்கு
புகலிடம் எங்கிருக்கு
சத்தியத்தைக் காத்து இங்கே
சங்கடத்தைப் போக்கிடுவாய்......

ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

விதவையும் ஒரு பெண்ணே!.....


மனசுக்குள்ள பாரம்
மதி மயங்கும் நேரம்
உறவுகள் றொம்ப  தூரம் 
உருக்குலையுது  சதுரம்!

இது இறைவன் தந்த வரம் 
இல்லை இங்கு இன்ப சுரம் !
நாம் பட்டுப் போன மரம் 
இதனால் பேச முடியவில்லை வீரம்!

பெண்ணுக்கேது  சுதந்திரம் 
அவ பொறுமை காக்கும் இயந்திரம்! 
வந்த துயர் என்றும் நிரந்தரம் !
வாழ்நாளில் இறங்காது இந்தப் பாரம்!

பெண்மை போற்றும் சரித்திரம் 
உட்பூசல் நிறைந்த தந்திரம் 
 இயம்புகின்றார் பலசாஸ்த்திரம்
இட்ட கட்டளைக்கு அடங்குது எம் சரீரம்!

கத்தரிக்க நினைக்குது பல கரம்! 
காட்ட முடியவில்லை அதிகாரம் 
எங்கும் வேதம் ஓதிடும் மந்திரம்
அது விளங்கிக் கொள்ள  முடியாத பெரும்  சூத்திரம்!

 ஏனோ எழுதினார் எமக்கென தனியான பத்திரம் !
இதுதான்  தாங்க முடியாத பெரும் துயரம்!
இதனால் நாங்கள் கொள்ளவில்லை  ஆத்திரம்
இருந்தும் நம்மைக் காக்க எடுக்க வேண்டும் புதிய பாத்திரம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

கோமாதா பூஜை செய்வோம்.....

புல்லைத் தின்னும்
பசுவின் பாலை
பிள்ளை குடித்து வளருதடா!

இதில் உள்ள சத்து 
உடலைக் காத்து 
உயிரை வாழ வைக்குதடா! 

அன்னை போல 
எம்மைக் காக்கும் 
ஆவின் குணத்தை அறிந்தவர்கள் 

இன்றும் இதனை 
வணங்கி  இங்கே  
இதற்கும் பூஜை வைத்தனரே!

அன்னையர் தினம் போல்
இன்றயநாளை அனைவரும்
மகிழ்ந்து கொண்டாடி

இதன் ஆசிகள் பெற்று
ஆயுட் பலமும்
அமைதியுமுற்று வாழ்ந்தாரே!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/01/2011

அணையைத் தாண்டுது துயரம்

அணையைத் தாண்டுது                                                                                                   துயரம் இங்கே அம்மா வருவாளோ.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயோ நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயோ...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.