10/15/2013

மாங்கனிச் சாறே மனம் இனிக்குது உன்னாலே...

                                                     

மாங்கனிச் சாறே
மனம் இனிக்குது உன்னாலே
கொடுத்தவர் உள்ளம் அதுவே
கொடையில் சிறந்த வள்ளம் !!

பருகிட இன்பம் பெருகிடும் போது
பார்வையில் புதுவித சுகம் வருதே ...!!!!
இனியன கூறிப் பெருமிதத்தோடு
இனியுனை நானும் வெல்வேனே .......

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட என்
தாளம் இனிமேல் தப்பாது ....
இடைவெளி கிடைக்கும் பொழுதினில் எல்லாம்
இனி உன்றன் படைப்பைத் தொடர்வேனே .......

பெரியவர் கூறும் செய்தியைக் காண
பெருமித்தத்தோடு  வாருங்கள்
இறைவனைப் போற்றும் இனிய நற் கருத்தை
இத்தளம் சுமப்பதைக் காணுங்கள்

தெளிவுற ஞானம் பெற்றிடவேனும்
தேடி இங்கு வாருங்கள் 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின்
நல் ஆசியும் கிட்டிடும் பாருங்கள் ...!!!!
                                                         
http://gopu1949.blogspot.ch/2013/10/63.html
http://gopu1949.blogspot.ch/2013/10/58.html
http://gopu1949.blogspot.ch/2013_07_01_archive.html

சுவையான இம் மாங்கனிகளைச்   சுவைத்து  
மகிழ்ந்தவர்கள் இட்ட கருத்திற்குப் பரிசுப் 
பொருளும் உண்டுங்க .மாங்கனிகளைச் 
சுவைத்தவர்களுக்கு 
இந்த மாங்கனிச் சாறும் கிட்டும் :)))))))

                                                           
                                                          http://gopu1949.blogspot.ch/
                                                                       
                                                                           


மிக்க நன்றி ஐயா .சிறப்பான தங்களின் படைப்புகளை
அனைவரும் கண்டு மகிழ வாழ்த்துக்கள் .


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/28/2013

அன்பு நிறைந்த நெஞ்சங்களே வாழ்த்துச் சொல்ல வாருங்கள்



பூவொன்று மலர்ந்ததென்று ஒரு 
பூந் தோட்டமே சிரிக்குது இங்கே 
வாவென்று அழைத்து எம்மோடு 
வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள் உறவுகளே !!


தங்கப் பாதம் தவண்டு வரத்  
தரணி எங்கும் பூப் பூக்கும் 
எங்கள் அரும்பு நலமாக 
எல்லா வளமும் பெற வேண்டும் !

மங்காப் புகழும் கீர்த்தியும் 
மரு மகளே உனக்கு அவள் அருள்வாள்! 
பொங்கும் புன்னகை எந்நாளும்
பொலியப் பெற்ற சரஸ்வதியே !

அங்கம் ரோஜா இதழே தான் இதை 
அன்பாய் அணைத்திட நாமுள்ளோம் 
எந்தன் மருமகள் உன் வரவால்
எங்கள் வீடே சிரிக்கிறது .......

வண்ணக் கனவு மலர்ந்திங்கே 
வசந்த வாசலைத் திறக்கிறது இனி 
எம் எண்ணம் எல்லாம் நிறைந்திருக்கும்
எங்கள் வீட்டு எழில் அரசியே  நீ வாழியவே........


                                                         
                                                       இனிப்பான இதயத்தால் 
                                  இனியன சொல்லி வாழ்த்துங்கள் உறவுகளே !!



என்னை "அத்தை" என்று அழைத்திட ஒரு 
செல்ல மருமகள் பிறந்திருக்கிறாள் 
அவளை வாழ்த்த வந்த அன்பு நெஞ்சங்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .......



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அன்பால் என்னைக் கட்டிப் போட்டு பேரறிவால் நீயோ...



அன்பால் என்னைக் கட்டிப் போட்டு
பேரறிவால் நீயோ திட்டம் தீட்டு
வெண்பா எழுதி முடிப்பதற்குள்
உன்பால் என்னைச் சேர்த்து விடு ...

மண்ணும் பொன்னும்
மதியை மயக்கும்
உன்னை எண்ணும் பொழுதில்
உலகை மறக்கும் !!.........

தன்னந் தனிமையில் நின்றுகொண்டே
நான் தரையைப் பார்த்துப் பேசுகின்றேன்
எண்ணம் முழுதும் இறை நாமம் அதை
அதை எண்ணிக் களிக்குது என் சாமம் ...

விண்ணைச் சேரவும் பாதையில்லை
உன்னைக் காணவும் யோகமில்லை
என்னை ஏனோ சீண்டுகின்றாய்
எதை எதையோ எழுதச் சொல்லித் தூண்டுகின்றாய் !!

பொன்னில் வடித்த சிலை தானோ நீ
பேசாதிருந்தால் விடுவேனோ ......
அன்னப் பறவை போலுன்னை
அறியத் தந்த இறைவா சொல் !.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/27/2013

happy birthday google-இனிதே வாழிய பல்லாண்டு


எண்ணற்ற கோடி மக்களின்
எண்ணங்களைச் சுமந்து நிற்கும்
வண்ணத் திரையே நீ
வாழிய வாழிய பல்லாண்டு !....

பல்சுவை விருந்ததனைப்
பகிர்ந்தளிக்கும் அனைவருக்கும்
உன் முகவரியே வரமாக
உருவெடுத்து வாழிய நீ ...........

செங்கதிரோன் போலிருந்து
செம்மையுறப் பணி புரிந்து
உன் திறனால் வெற்றி பெற்று
உலகெங்கும் வாழிய நீ ........

கூகுள் என்ற பெயர் கேட்டால்
குழந்தைகளும் மகிழ்ந்து குதிக்கும்
கணனியுலக நிலவே உனைக்கு மனம்
கசிந்துருகும் நல் வாழ்த்துக்கள் இங்கே ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/22/2013

நிழலாய் என்றும் நீயிருந்தாய்


நிழலாய் என்றும்  நீயிருந்தாய்
நிஜமாய்  உன்னை நான் தொடர்ந்தேன்
நிழலும் நிஜமும் பிரியும் நேரம்
நின்மதி நிலைக்காதே!

உழலும் மனதைக் கேட்டுப் பார்
உண்மை உனக்கும்  புரியும் பார்
களவும் பொய்யும் கற்று மறவாக்
கண்கள் சொல்வதும் மெய்தானே?

வலியைத் தாங்கும் இதயம் என்ன
உன் போல் வலிமை நிறைந்ததா ?
என் வலியே நீதானடி பெண்ணே
ஏன் தான் வலிய வந்தாயடி ?

மனமே மனமே அழுவாதே நீ
மறந்தும் அவளை நினையாதே என
மறக்க நினைத்த நினைவெல்லாம் என்
மதியை வென்று கொன்றது ஏன்!

அன்பை முறிக்கும்  விஷம் எங்கே?
அதை அருந்தத் துடிக்குது மனம் இங்கே!
பெண்ணே என்னைத் தொடராதே இனி நீ
போகும் போதும் என்னை நினையாதே..

பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
பாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
இனியும்  தஞ்சாவூருப் பொம்மையடி நான்
தலையை ஆட்டுவேன் நீ சொன்னபடி ..

எனக்கெனத் தந்த இதயமதை
அறுத்தெடுத்தெங்கோ போனவளே
என் உயிர் துடிப்பதனை அறிவாயோ?
இதற்கொரு நீதி  கிடையாதோ!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/17/2013

செத்தும் சிவனடி சேராதார்



அற்ப மாயை உலகினில் பிறந்து 
அன்பைத் தவிர அனைத்தையும் உணர்ந்து  
சர்ப்பம் போல வயிறு வளத்தோர்
சாவிலும் நின்மதி அடைந்தது இல்லை !!...

முற்றும் துறந்த முனிவர்கள் எங்கே
முரண்பட வாழ்ந்த மனிதர்கள் எங்கே
கற்றும் நன்நெறி  தழுவிட மறந்தோர்
கயமை உணர்வினில் தான் திறன்பட நின்றார் ...

வற்றிக் கிடக்கும் வயிற்றைப் பார்த்ததும்
வளைந்து நெளிந்த பாதையை நோக்கும்
அற்பப் பிறவிகள் உயர்வதைக் கண்டு
அகம் அது இறைவனை வெறுப்பதும் நன்றோ ...!!!!

முன்வினைப் பயனதை மூட்டியே செல்லும் தன்
வினைப் பயனதை அறுப்பவன் இறைவன்...........
எவ்விதை இங்கே விதைத்து நின்றாயோ 
அவ்விதை அறுத்திட மறு பிறப்பது தோன்றும் !!

செய்வினை சூனியம் செய்திடத் துடிக்கும்
உன் மன வலிமை உறங்கிடும் பொழுதில்
தன்வினைப் பயனதை உணர்த்தி நிர்ப்பானே
சங்கரன் திருவடி தான் 
அசைந்திடும் சக்கரம் இப்புவி காண் .....!!!!!!


                                                                               
ஓம் நமசிவாய... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/09/2013

சுப்புத் தாத்தாவிற்கு என் நன்றி இதோ காணத் தவறாதீர்கள் !



அருங்கனியில் சிறந்த கனி எக்கனியோ 
அதனையுண்ட மகிழ்வினிலே அகம் குளிர்ந்து 
விரும்பி மீண்டும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றேன்
அதனையொத்த விநாயகனைத் துதி பாடும் குரலைக் காண வாரீர்..!!!


பாடியவர் :சுப்புத் தாத்தா 
http://menakasury.blogspot.ch/

தும்பிக்கையான் துணையிருக்கத்
துயர்கள் யாவும் மறையட்டும்
நம்பிக்கையே வாழ்வின் முதலாய்
எந்நாளும் இங்கே மலரட்டும் .........

அன்பும் அறமும் தழைத்திருக்க
ஆலய தரிசனம் தொடரட்டும் நாம்
நம்பும் வகையில் வாழ்க்கைச் சக்கரம்
நன்மையை நோக்கி நகரட்டும் ........

இன்பம் துன்பம் எதுவந்தாலும்
இதயம் சமநிலையடையட்டும்
இருளை அகற்றி ஒளியைப் பரப்பும்
இறைவன் நல்லருள் புரியட்டும் ...

தன்பின் தொடரும் உறவையெல்லாம்
தன்னுறவாக மதிக்கட்டும் மனிதன்
தானம் கொடுத்துத் தானும் உயர்ந்து
தரணியில் நன்மைகள் அடையட்டும்....//


பெரும் பேறே பெற்றிருந்தேன் முற்பிறவிதனில் அதனால் 
பின் தொடர்ந்தே  வந்தளித்த நல்லாசியிது ...........!!!!!!!
வரம் கொடுத்தாற் போல் நல்ல விநாயக சதுர்த்தியிலே 
வாழ்வளித்தார் சுப்புத் தாத்தா என் பாடலுக்கு ...!!!!!!!

விநாயகனே நல்லாசிதனைக் கொடுத்தது போல் 
விம்மி விம்மி நான் அழுதேன் பெற்ற மகிழ்வினாலே
இளையவர்கள் ஆயிரம் தான் போற்றினாலும் ஒரு 
முதியவரின் வாழ்த்தொன்றே வெற்றி தரும் .......... 

முதற் பாடல் முக்கண்ணன் முதல்வனுக்கே இதை 
முன்னொரு பொழுதும் நான் நினைக்கவில்லை 
எனக்காக என் ஜீவன் நீயல்லவோ தானாய் 
எங்கிருந்தோ தேடி வந்து  பாடிச் சென்றாய் ....!!!!

மறவேனே உன்றன் அன்பை  எந்நாளுமிங்கே
மலர் கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே
இனி யார் யார் தான் பாடினாலும் என் பாடல்களை 
இந்நிகழ்வைச் சொல்லாமல் செல்ல மாட்டேன் !!

வரமொன்று தந்தாயே சுப்புத் தாத்தா இதுவே 
வழித் துணையாய் அமையெட்டும் என் முயற்சிக்கெல்லாம் 
விழுந்தேனே உன்றன்  பாதக் கமலமதில்
வீணாக இவ்வாழ்த்தே வெற்றி தரும் ........

                                                                 
                                                                     
                                           

                                                நன்றி எங்கள் சுப்புத் தாத்தாவிற்கு.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/21/2013

கழுகுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை !!



கழுகினைப்  போல் காத்திருந்து
கண்களிரண்டும் பூத்திருந்து
அருந்தும் இரத்தம் ஒன்றே சொர்க்கம்
என அறிந்தவர்க்கு ஏது துக்கம் !

வலையில் வீழும் குஞ்சினத்தில்
வண்ண நிறம் அது எதற்கு!
எலும்பும் சதையும் போதுமிங்கே
எச்சில் ஊறத் தின்பதற்கு!

கொழு கொளுத்த கழுகினைத்தான்
கொத்தித் தின்ன யாருமில்லை!
பரிதவிக்கும் இனத்தைப் பார்த்து மேலும்
பரிகசிக்குது இது என்ன  கூத்து!

அறிவிழந்த கழுகுக்கென்றும்
அடுத்தடுத் துன்பம் வந்தால்
தெரிந்து கொள்ளும் எங்கள் துயரைத்
தெரிவிப்பவர் யார் தான் இங்கே!

மது மயக்கம் மனதை மயக்க
மதியிழந்து செய்த செயலால்
கொதி கொதித்துப் போனது உள்ளம் இந்தக்
கொலைக்களம்தான் மாறுவதெப்போ!

அருவருப்பாய் பெண்ணினத்தை
அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
தொழுவத்திலே கட்டி வைத்துத்
தோலுரிக்க வேண்டுமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/16/2013

பிறந்தநாள் வாழ்த்து எனக்கே எனக்கா :)


அழைத்த அழைப்பிதற்கு ஓடோடி வந்த
அன்பு நெஞ்சங்களே வருக வருக ..........
இன்பத்திலும் துன்பத்திலும் கலந்திருக்கும்
இணையற்ற வலைத்தள உறவுகளே வருக வருக....
                                                   
வகை வகையாய் உணவு செய்து
வற்றாத அன்பு கலந்து
நான் பிறந்த நாளிதனில்
நன்றி சொல்லவே காத்திருந்தேன்

தேன்கொளிக்கும் கருத்து மழையைத்
தேடி வந்து பொழிந்தவர்களே
நான் கொடுக்கும் விருந்திதனை
நாள் முழுதும் சுவைத்திடுவீர் :)))






மச்சம் உண்டு சைவம் உண்டு
மனதிற்கேற்ப வகையில் உண்டு
மிச்சமின்றி உண்டுடுவீர்
மிருதுவான மனம் படைத்தவர்களே ...

அச்சம் வேண்டாம் எண்ணெய்யில்லை
அளவு கடந்த கொளுப்பும்மில்லை
இன்றுமட்டும் எனக்காகவே
இயன்றவரைக்கும்  உண்டு களிப்பீர் .....
                                               

தேனும் பாலும் கலந்து நல்ல
தித்திக்கும் பலகாரமும் உண்டு
போகும் போதும் எடுத்துச் சென்றால்
புன்னகை பூக்கும் என் மனதினில் இன்று ....



பார்த்துப் பார்த்து வாங்கி வைத்த
பலவகை இனிப்பு வகைகளும் கொஞ்சம்
ஈற்றில் சிறுவர்கள் வீட்டினில் இருந்தால்
இதையும் எனக்காக எடுத்துச் செல்லுங்கள் :)


பாக்கு வெற்றிலை  போடும் பழக்கம்
இருந்தால் இதையும் எடுத்துக் கொள்ளுங்கள்
பழங்களுண்டு தண்ணியுமுண்டு
பழரசம் வேண்டுமா கேட்டு வாங்குங்கள் .....:))



குளிர்களி வேண்டுமா தேனீர் வேண்டுமா ?..
குடிக்கத் தண்ணி ஏதேனும் வேண்டுமா?...
பாட்டுத் தொடர்ந்து கேட்க்கப் பிடிக்குதா ?..
நாஞ்சில் மனோ அண்ணா பாட்டுப் பாடுங்க :)


வாழ்த்துச் சொல்ல வந்த உறவுகளே
வந்தவரைக்கும் நன்றி சொல்லுவேன்
கூட்டம் கலையும் நேரமிப்போ
கொண்டு வந்த பரிசைப் பார்ப்போம் !!:......


ஆஹா அத்தனையும் பாடலா !!!!....
தித்திக்கும் பாடல் நூறு
தெய்வீகக் கதைகள் பாரு !!!!...
எத்திக்கில் நான் சென்றாலுமே
எட்டாத பரிசு இது !!!!...........
                                                         


டிஸ்கி : கற்பனையிலேனும் இப்படியொரு விருந்துபசாரம்
                 செய்த திருப்தி எனக்கு :) சாப்பாடு எப்படி என்று இனி
                 உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் ?...............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/14/2013

என் தெய்வம் நேரில் வந்தாலே...



என் தெய்வம் நேரில் வந்தாலே
இன்பங்கள் பொங்கும் தன்னாலே
விதி போகும் பாதை ஓரம்
விடை தேடும் கானல் நீர் நான்

உனக்காகப் பாடும் பாடல்
உயிர் வாழும் வாழும் இங்கே
எனக்கே எனக்காய் பிறந்தவள் உன்னை
எங்கே காண்பேனோ ?

மலர் போன்ற பாதம் அம்மா அதை
மறவாது என் நெஞ்சம் அம்மா
நிலையாய் இங்கே நீ வந்தாலே
நின்மதி பெறுவேனே!

திருக்கோவில் சிற்பங்கூட
சிரிக்காமல் சிரிக்கும் போது
உனக்காக ஏங்கும் உள்ளம்
ஏன் ஊமையாகாது!
                                     
உருவத்தால் குமரி என்னை
உள்ளத்தால் குழந்தை என்பாய்- உன்றன்
மடியைத் தேடி அலையும் போது
மறைந்தே சென்றாய் ஏன்?

விடியாத இரவுக்குள்
விடை தேடும் பட்டாம் பூச்சி
முடியாது முடியாதென்று
முனங்கும் ஓசை கேட்கலியா?
                                             
                                        ( என் தெய்வம் நேரில்  )                                        
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/13/2013

பஞ்ச புராணங்களை நெஞ்சில் நிறுத்துங்கள்



அடியொத்தி வாழாத வாழ்வும் நன்றோ!!!..... 
நல்லடியார்கள் அருளிச்சென்ற பாக்கள் தன்னை
மனமொத்த வாழ்விற்கு மருந்தாகுமே அவை 
மறு ஜென்மம் எடுத்தாலும் விருந்தாகுமே 
திருஞான சம்பந்தர் அருளிச் செய்த 
தேவாரப் பதிகத்தை நாம் பாடிட 
இளகாத மனமும் தான் இளகுமிங்கே
இருள் சூழ்ந்த வானத்தில் நிலவைப் போல

ஒளியூட்டும் புராணங்கள் ஐந்தே வகை
இதை ஓதாதார் மனதிற்கே ஒல்கும் பகை
இறைஞான சக்திக்கு வித்தாய் நின்ற
அடியார் தம் அடியார்க்கும் அடியேன் நானே
வினை முற்றி நின்றாடும் வேளை தன்னில்  
ஊழ்வினையாலே வருகின்ற வலிகள் தீர
மனதாரப் பாடாத நாட்கள் இல்லை
மலர்கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே

துதி பாடும் நாவுக்குத் துன்பமில்லை
துளை போட்ட (புல்லாங்)குழலுக்கு மனம் இணையாகுமே
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நின்றாடிடும்
இறைவன் தம் இதயத்தில் குடிகொள்ளவும்
பஞ்ச புராணங்கள் எப்போதும் துணையாகுமே
பகலென்ன இரவென்ன மனமே ஓது ...
பலி கொண்டுழல்கின்ற மனதை வெல்லப்
படைத்தாரே நால்வர் தம் அருளால் அன்று !!!!..

இடர் வந்த போதெல்லாம் இன்பம் ஊட்டும்
இல்லாதார் எனும் சொல்லை மாற்றிக் காட்டும்
பகை நீங்கும் பற்றேதான் வாழ்வில் உயரும்
பரந்தாமன் அருளுக்கே மனமும் ஏங்கும்
துணிவேதான் துணை என்று உணரத் தோன்றும்
துயிலாதார் வாழ்விற்கும் நல் வழியைக் காட்டும்
அறிவாற்றல் புகழெல்லாம் வந்தே சேரும்
அகத் தூய்மை புறத் தூய்மை அனைத்தும் காக்கும் .

(16  ஆம் திகதியே என் பிறந்தநாள் :) )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/12/2013

பொய்யாய் போலியாய் வாழும் மனிதர்கள் முன்னே


பொய்யாய் போலியாய்
வாழும் மனிதர்கள் முன்னே
பொறுமை இழந்து போகுதே
ஐயா உனக்கிது புரியாதா ?...!!!!
நல் ஆறுதல் நீயென்று தெரியாதா ....

வண்ணமயில் ஏறி
வந்து விடு நீயும்
எங்களுயிர்  வாடும்
கந்தனுனைத் தேடும்

மண் மணக்குதே
மண் மணக்குதே
கந்தன் உன்றன் பாதம்
மண்ணில் பதிக்கயிலே !....

எண்ணமெல்லாம் இருப்பது
கந்தன் கவசம் இதை
ஏழ்பிறப்பும் மறவாமல்
நெஞ்சில் பதிப்போம் ......

துன்பம் வரும் வேளையில்
சேர்ந்து துதிப்போம் உன்றன்
தூய திருவடி அதனால்
நன்மை அடைவோம்.....

ஔவைக்கருள் புரிந்தவனே என்றும்
ஆனை முகத்தானுக்கு இளையவனே
வள்ளி தெய்வானை மணவாளனே நாம்
வேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ....

                                                   (பொய்யாய் போலியாய் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/06/2013

உயிரே...... என் உயிரின் உயிரே..........


உயிரே! என் உயிரின்  உயிரே
உணர்வும் நீயே 
வந்து விடு 
நீயே வந்து விடு 

இந்தத் தனிமை 
கொடுமை கொடுமை 
இதனைக் கொன்று விடு 
நீயே.. கொன்று விடு 
                                             உயிரே...... என்  
ஏழிசையில்  கலந்து 
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ நின்றதென்ன! 
அந்த உறவைக் கலைத்து எம் 
உயிரைப் பிரித்து 
விதி சதியை வளர்திங்கு  சென்றதென்ன! 
அன்பே சென்றதென்ன!

மலர் கருகும் நேரம் 
இன்றும்   உனது தாகம்
அதை அறிய வேண்டும் நீ தானே!
ஒரு மெழுகைப் போல 
உருகி உருகி உன்னால் இங்கு 
கவிதை வடித்தேன்
நான் தானே 
                                   
அன்பை ரசித்து மகிழ்ந்து நீ 
என்னுள்  இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது   
அன்பே வா அன்பே வா ......

நீ வரும் வழியைப் பார்த்து 
இந்த விழிகள் பூத்திருக்கும்  
என் உயின் கீதமென 
அன்பே வா  அன்பே வா  

                                       (உயிரே என் உயிரின்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/20/2013

உயிரே என் உயிரின் உயிரே...


உயிரே.....என் உயிரின் உயிரே
உணர்வும் நீயே வந்து விடு
நீயே வந்து விடு ........
இந்தத் தனிமை கொடுமை
கொடுமை இதனைக் கொன்று விடு
நீயே கொன்று விடு ...............

ஏழிசையில்  கலந்து
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ
வந்ததென்ன ...¨

அந்த உறவைக் கலைத்து நம்
உயிரைப் பிரித்து
விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன !.....
அன்பே சென்றதென்ன .....

                        (உயிரே என் உயிரின் உயிரே...)

மலர் கருகும் நேரம்
இன்றும் உனது தாகம் அதை
அறிய வேண்டும் அன்பே வா ....
ஒரு மெழுகைப்போல
 நீ உருகிப் போக
என்னுள்ளம் பதறிப் போகும்
அன்பே வா ..........

அன்பை ரசித்து மகிழ்ந்து நீ
என்னுள் இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது
அன்பே வா ...............

                              (உயிரே என் உயிரின் உயிரே...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2013

சிவ சிவ என்றிட சிந்தையும் மகிழ்ந்திடும்


எண்ணிக் கழிக்கும் நாட்களுக்கிடையில்
இத்தனை துன்பம் ஏன் இறைவா ?.....!!!!!
இந்த மண்ணில் பிறந்த உயிகளுக்கெல்லாம்
மகிழ்ச்சியை என்றும் தா இறைவா .......

தண்ணிப் பஞ்சம் தாவரப் பஞ்சம்
தரையை வாட்டி வதைப்பதனால்
உயிர்களைக் கொல்லும் வெப்பம் உலகம் எங்கும்
உக்கிரமாதைத் தடுத்தருள்வாய்...........

வெள்ளிப் பனி மலை உருகிக் கடலை
தரையைத் தாவி வந்தென்றும்
உயிர்களை அள்ளிக் கொலை வெறி
ஆடும் ஆட்டம் அடங்கிட இங்கே அருள்புரிவாய்

மண்ணில் நல் வளம் மகிழ்வாய் பொங்கிட
மா தவத்தைத் துறந்து நீ வருவாய் என்றும்
கண்ணின் மணியென கருணைக் கடலென நற்
கருத்தில் உறைந்த பக்தருக்காய் 

பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........ 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.