அன்பைப் பொழியும் மனத்தாலே
அறிவை ஊட்டி வளர்த்த பிதா !
இன்பம் காண எந்நாளும்
இனிய நல் வாழ்த்து உரைபீரே !
தந்தை என்றோர் தெய்வத்தைத்
தரணியில் பெற்று நாம் மகிழ்ந்தோம்
இன்றோ டெண் பத் தொன்றாமே !
இனிய நல் ஆண்டுகள் பெருகட்டும் ...
பொங்கும் தமிழின் ஆர்வலரை
பொறுமை நிறைந்த பொக்கிசத்தை
எங்கள் உயிரை உணர்வலையை
என்றும் இறைவன் காக்கட்டும் !
விண்ணும் மதியும் வாழ்த்திடவே
விரும்பும் சுகங்கள் கிட்டட்டும்
கண்ணும் கருத்துமாய் வந்திங்கே
கருணை வெள்ளம் காக்கட்டும் !
எண்ணும் பொழுதினில் துயர் நீங்கி
எல்லா நலனும் தங்கட்டும்
உண்ணும் உணவிலும் நல்லுணர்வை
ஊட்டி வளர்த்த பிதா மகிழ !
வாழ்த்துச் சொல்ல வாருங்கள்
வலுவாய் நிற்கும் உறவுகளே !
பூத்துக் குலுங்கும் மனப் பந்தல்
பூப்போல் இங்கு சிரித்திடவே ....
இவ்வளவு இனிப்பு வகையும் எங்களுக்கா ???!....
இவை அனைத்தும் என்
வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் தான் :)))))))

















.jpg)



.jpg)
.jpg)


%2B(1).jpg)











