7/16/2013

பிறந்தநாள் வாழ்த்து எனக்கே எனக்கா :)


அழைத்த அழைப்பிதற்கு ஓடோடி வந்த
அன்பு நெஞ்சங்களே வருக வருக ..........
இன்பத்திலும் துன்பத்திலும் கலந்திருக்கும்
இணையற்ற வலைத்தள உறவுகளே வருக வருக....
                                                   
வகை வகையாய் உணவு செய்து
வற்றாத அன்பு கலந்து
நான் பிறந்த நாளிதனில்
நன்றி சொல்லவே காத்திருந்தேன்

தேன்கொளிக்கும் கருத்து மழையைத்
தேடி வந்து பொழிந்தவர்களே
நான் கொடுக்கும் விருந்திதனை
நாள் முழுதும் சுவைத்திடுவீர் :)))






மச்சம் உண்டு சைவம் உண்டு
மனதிற்கேற்ப வகையில் உண்டு
மிச்சமின்றி உண்டுடுவீர்
மிருதுவான மனம் படைத்தவர்களே ...

அச்சம் வேண்டாம் எண்ணெய்யில்லை
அளவு கடந்த கொளுப்பும்மில்லை
இன்றுமட்டும் எனக்காகவே
இயன்றவரைக்கும்  உண்டு களிப்பீர் .....
                                               

தேனும் பாலும் கலந்து நல்ல
தித்திக்கும் பலகாரமும் உண்டு
போகும் போதும் எடுத்துச் சென்றால்
புன்னகை பூக்கும் என் மனதினில் இன்று ....



பார்த்துப் பார்த்து வாங்கி வைத்த
பலவகை இனிப்பு வகைகளும் கொஞ்சம்
ஈற்றில் சிறுவர்கள் வீட்டினில் இருந்தால்
இதையும் எனக்காக எடுத்துச் செல்லுங்கள் :)


பாக்கு வெற்றிலை  போடும் பழக்கம்
இருந்தால் இதையும் எடுத்துக் கொள்ளுங்கள்
பழங்களுண்டு தண்ணியுமுண்டு
பழரசம் வேண்டுமா கேட்டு வாங்குங்கள் .....:))



குளிர்களி வேண்டுமா தேனீர் வேண்டுமா ?..
குடிக்கத் தண்ணி ஏதேனும் வேண்டுமா?...
பாட்டுத் தொடர்ந்து கேட்க்கப் பிடிக்குதா ?..
நாஞ்சில் மனோ அண்ணா பாட்டுப் பாடுங்க :)


வாழ்த்துச் சொல்ல வந்த உறவுகளே
வந்தவரைக்கும் நன்றி சொல்லுவேன்
கூட்டம் கலையும் நேரமிப்போ
கொண்டு வந்த பரிசைப் பார்ப்போம் !!:......


ஆஹா அத்தனையும் பாடலா !!!!....
தித்திக்கும் பாடல் நூறு
தெய்வீகக் கதைகள் பாரு !!!!...
எத்திக்கில் நான் சென்றாலுமே
எட்டாத பரிசு இது !!!!...........
                                                         


டிஸ்கி : கற்பனையிலேனும் இப்படியொரு விருந்துபசாரம்
                 செய்த திருப்தி எனக்கு :) சாப்பாடு எப்படி என்று இனி
                 உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் ?...............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/14/2013

என் தெய்வம் நேரில் வந்தாலே...



என் தெய்வம் நேரில் வந்தாலே
இன்பங்கள் பொங்கும் தன்னாலே
விதி போகும் பாதை ஓரம்
விடை தேடும் கானல் நீர் நான்

உனக்காகப் பாடும் பாடல்
உயிர் வாழும் வாழும் இங்கே
எனக்கே எனக்காய் பிறந்தவள் உன்னை
எங்கே காண்பேனோ ?

மலர் போன்ற பாதம் அம்மா அதை
மறவாது என் நெஞ்சம் அம்மா
நிலையாய் இங்கே நீ வந்தாலே
நின்மதி பெறுவேனே!

திருக்கோவில் சிற்பங்கூட
சிரிக்காமல் சிரிக்கும் போது
உனக்காக ஏங்கும் உள்ளம்
ஏன் ஊமையாகாது!
                                     
உருவத்தால் குமரி என்னை
உள்ளத்தால் குழந்தை என்பாய்- உன்றன்
மடியைத் தேடி அலையும் போது
மறைந்தே சென்றாய் ஏன்?

விடியாத இரவுக்குள்
விடை தேடும் பட்டாம் பூச்சி
முடியாது முடியாதென்று
முனங்கும் ஓசை கேட்கலியா?
                                             
                                        ( என் தெய்வம் நேரில்  )                                        
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/13/2013

பஞ்ச புராணங்களை நெஞ்சில் நிறுத்துங்கள்



அடியொத்தி வாழாத வாழ்வும் நன்றோ!!!..... 
நல்லடியார்கள் அருளிச்சென்ற பாக்கள் தன்னை
மனமொத்த வாழ்விற்கு மருந்தாகுமே அவை 
மறு ஜென்மம் எடுத்தாலும் விருந்தாகுமே 
திருஞான சம்பந்தர் அருளிச் செய்த 
தேவாரப் பதிகத்தை நாம் பாடிட 
இளகாத மனமும் தான் இளகுமிங்கே
இருள் சூழ்ந்த வானத்தில் நிலவைப் போல

ஒளியூட்டும் புராணங்கள் ஐந்தே வகை
இதை ஓதாதார் மனதிற்கே ஒல்கும் பகை
இறைஞான சக்திக்கு வித்தாய் நின்ற
அடியார் தம் அடியார்க்கும் அடியேன் நானே
வினை முற்றி நின்றாடும் வேளை தன்னில்  
ஊழ்வினையாலே வருகின்ற வலிகள் தீர
மனதாரப் பாடாத நாட்கள் இல்லை
மலர்கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே

துதி பாடும் நாவுக்குத் துன்பமில்லை
துளை போட்ட (புல்லாங்)குழலுக்கு மனம் இணையாகுமே
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நின்றாடிடும்
இறைவன் தம் இதயத்தில் குடிகொள்ளவும்
பஞ்ச புராணங்கள் எப்போதும் துணையாகுமே
பகலென்ன இரவென்ன மனமே ஓது ...
பலி கொண்டுழல்கின்ற மனதை வெல்லப்
படைத்தாரே நால்வர் தம் அருளால் அன்று !!!!..

இடர் வந்த போதெல்லாம் இன்பம் ஊட்டும்
இல்லாதார் எனும் சொல்லை மாற்றிக் காட்டும்
பகை நீங்கும் பற்றேதான் வாழ்வில் உயரும்
பரந்தாமன் அருளுக்கே மனமும் ஏங்கும்
துணிவேதான் துணை என்று உணரத் தோன்றும்
துயிலாதார் வாழ்விற்கும் நல் வழியைக் காட்டும்
அறிவாற்றல் புகழெல்லாம் வந்தே சேரும்
அகத் தூய்மை புறத் தூய்மை அனைத்தும் காக்கும் .

(16  ஆம் திகதியே என் பிறந்தநாள் :) )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/12/2013

பொய்யாய் போலியாய் வாழும் மனிதர்கள் முன்னே


பொய்யாய் போலியாய்
வாழும் மனிதர்கள் முன்னே
பொறுமை இழந்து போகுதே
ஐயா உனக்கிது புரியாதா ?...!!!!
நல் ஆறுதல் நீயென்று தெரியாதா ....

வண்ணமயில் ஏறி
வந்து விடு நீயும்
எங்களுயிர்  வாடும்
கந்தனுனைத் தேடும்

மண் மணக்குதே
மண் மணக்குதே
கந்தன் உன்றன் பாதம்
மண்ணில் பதிக்கயிலே !....

எண்ணமெல்லாம் இருப்பது
கந்தன் கவசம் இதை
ஏழ்பிறப்பும் மறவாமல்
நெஞ்சில் பதிப்போம் ......

துன்பம் வரும் வேளையில்
சேர்ந்து துதிப்போம் உன்றன்
தூய திருவடி அதனால்
நன்மை அடைவோம்.....

ஔவைக்கருள் புரிந்தவனே என்றும்
ஆனை முகத்தானுக்கு இளையவனே
வள்ளி தெய்வானை மணவாளனே நாம்
வேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ....

                                                   (பொய்யாய் போலியாய் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/06/2013

உயிரே...... என் உயிரின் உயிரே..........


உயிரே! என் உயிரின்  உயிரே
உணர்வும் நீயே 
வந்து விடு 
நீயே வந்து விடு 

இந்தத் தனிமை 
கொடுமை கொடுமை 
இதனைக் கொன்று விடு 
நீயே.. கொன்று விடு 
                                             உயிரே...... என்  
ஏழிசையில்  கலந்து 
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ நின்றதென்ன! 
அந்த உறவைக் கலைத்து எம் 
உயிரைப் பிரித்து 
விதி சதியை வளர்திங்கு  சென்றதென்ன! 
அன்பே சென்றதென்ன!

மலர் கருகும் நேரம் 
இன்றும்   உனது தாகம்
அதை அறிய வேண்டும் நீ தானே!
ஒரு மெழுகைப் போல 
உருகி உருகி உன்னால் இங்கு 
கவிதை வடித்தேன்
நான் தானே 
                                   
அன்பை ரசித்து மகிழ்ந்து நீ 
என்னுள்  இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது   
அன்பே வா அன்பே வா ......

நீ வரும் வழியைப் பார்த்து 
இந்த விழிகள் பூத்திருக்கும்  
என் உயின் கீதமென 
அன்பே வா  அன்பே வா  

                                       (உயிரே என் உயிரின்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/20/2013

உயிரே என் உயிரின் உயிரே...


உயிரே.....என் உயிரின் உயிரே
உணர்வும் நீயே வந்து விடு
நீயே வந்து விடு ........
இந்தத் தனிமை கொடுமை
கொடுமை இதனைக் கொன்று விடு
நீயே கொன்று விடு ...............

ஏழிசையில்  கலந்து
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ
வந்ததென்ன ...¨

அந்த உறவைக் கலைத்து நம்
உயிரைப் பிரித்து
விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன !.....
அன்பே சென்றதென்ன .....

                        (உயிரே என் உயிரின் உயிரே...)

மலர் கருகும் நேரம்
இன்றும் உனது தாகம் அதை
அறிய வேண்டும் அன்பே வா ....
ஒரு மெழுகைப்போல
 நீ உருகிப் போக
என்னுள்ளம் பதறிப் போகும்
அன்பே வா ..........

அன்பை ரசித்து மகிழ்ந்து நீ
என்னுள் இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது
அன்பே வா ...............

                              (உயிரே என் உயிரின் உயிரே...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2013

சிவ சிவ என்றிட சிந்தையும் மகிழ்ந்திடும்


எண்ணிக் கழிக்கும் நாட்களுக்கிடையில்
இத்தனை துன்பம் ஏன் இறைவா ?.....!!!!!
இந்த மண்ணில் பிறந்த உயிகளுக்கெல்லாம்
மகிழ்ச்சியை என்றும் தா இறைவா .......

தண்ணிப் பஞ்சம் தாவரப் பஞ்சம்
தரையை வாட்டி வதைப்பதனால்
உயிர்களைக் கொல்லும் வெப்பம் உலகம் எங்கும்
உக்கிரமாதைத் தடுத்தருள்வாய்...........

வெள்ளிப் பனி மலை உருகிக் கடலை
தரையைத் தாவி வந்தென்றும்
உயிர்களை அள்ளிக் கொலை வெறி
ஆடும் ஆட்டம் அடங்கிட இங்கே அருள்புரிவாய்

மண்ணில் நல் வளம் மகிழ்வாய் பொங்கிட
மா தவத்தைத் துறந்து நீ வருவாய் என்றும்
கண்ணின் மணியென கருணைக் கடலென நற்
கருத்தில் உறைந்த பக்தருக்காய் 

பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........ 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/26/2013

மறக்க முடியாத நினைவு


மறக்க முடியாத நினைவு இதை
மறந்து தானாக வேண்டும்
பிரிக்க முடியாத உறவு இதைப்
பிரிந்து தானாக வேண்டும் என
எடுக்கும் முடிவால்
இதயம் வலிக்கும்
இதையும் அறிவார் யாரோ!
பொருள் கொடுத்து வாங்கு
பணம் கொடுத்து வாங்கு என்றும்
உயிரை வாங்காதே!

                         ( மறக்க முடியாத நினைவு..)

மனதின் நினைவை
அழிக்கும் போது
மலர்கள் தாங்காது!
உயிர் துடிக்கும் துடிப்பில்
உனது நினைப்பும் பெருகும் ஓயாது!

அழுது புலம்பும்
இதயம் அதற்க்கு
அமைதி இருக்காது
அது எடுக்கும் முடிவில்
துயரம் இருக்கும்
எதையும் நினைக்காது !

                        ( மறக்க முடியாத நினைவு)
கடலின் ஆழம்
உனக்குத் தெரியும்
உன் கணக்குப் பிழைக்காது!
அட இவளின் மனதை உணரத் தெரிந்தால்
இதுவும் நடக்காது!

உயிர் உயிரை வதைக்கும்
கொடிய நோயே
காதல் தான் இங்கே
இந்த விதியின் சதியை
உலகம் உணர்ந்தால்
மோதல் ஏனிங்கே ?
                             
                       ( மறக்க முடியாத நினைவு)
                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/19/2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா !


மலரிலும் மெல்லிய
மனமிது தழைத்திட
நற் குணநலன் பெற்றிங்கு என்
குலமகள் வாழ்ந்திட
கலைகளைப் பயின்றிட நற்
கடமைகள் புரிந்திட
அறிவுசார் செல்வமும்
அன்பொடு தன்னடக்கமும்
தெளிவுறப் பெற்ற ஞானமும்
சிந்தையில் நல்லுணர்வும்
தித்திக்கும் வாழ்வதனில்
திசை எட்டும் போற்றும் வண்ணம்
எத்திக்கிலும் இடரின்றி


இவள் வாழ்வு நலன் பெறவே
வாழ்த்துங்கள் உறவுகளே
அந்த வாழ்த்தொன்றே போதுமிங்கே !!















தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/18/2013

சிவபுராணம் சொல்லச் சொல்ல சிந்தை மகிழும் தன்னாலே !


உறங்கும் போதும் உன் நாமம்
விழிக்கும் போதும் உன் நாமம்
எமக்குத் தெரிந்தது அதுவொன்றே
நாம்  என்ன செய்வோம் இறைவா சொல் !..

மறக்க முயன்றால் முடியாது
மனதின் சுமைகளும் குறையாது
நாம்  தொடுக்கும் காரியம் அத்தனையும்
துலங்கும் உன்றன் அருளாலே!...........

விரித்த சடை முடியோனே
நால் வேதமும் போற்றும் நாயகனே
துடிக்கும் மனமிதை அறிவாயோ
மேவிடும் துயர்களைப் போக்க வருவாயோ

சிவ சிவ சிவ என்று சிந்திப்போம்
சிந்தையில் நல்லதை நாம் நினைப்போம்
அவனருளாலே வரும் நன்மைகளை
அவனியில் என்றும் நாமடைவோம்

தேவர்கள்  படும் துயர் தீர்த்தவனை
எம்மைத் தேடியே நன்மைகள் அருள்பவனை
எந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/03/2013

கவச குண்டலங்கள்....


கவச குண்டலங்கள்
இழந்து மண்டலத்தில்
குழந்தை போலே நானுறங்க
அதில் படரும்
கொடி போல்
எனது தலைவா
காட்டு உன்றன் கைவரிசை !


உயிரில் பிரியமில்லை
என்னுடலில் எதுவுமில்லை
உணர்வில் மட்டும் நீ கலக்க
நல்ல  தருணம் இதுவே
சரணம் எனதே
காட்டு உன்றன் கைவரிசை!

மெழுகில்  திரியைப் போல
என் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை!

மலரில் மணமும் உண்டு
உன் மனதில் இடமும் உண்டு
என் நினைவை மட்டும்
ஏன் மறந்தாய்?
இரு கரங்கள் தொடுத்து
வரங்கள் கொடுத்தவனே
காட்டு உன்றன் கைவரிசை

                          (கவச குண்டலங்கள்)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/28/2013

தேர்ந்தெடுக்கும் நீங்கள் தான் தெளிவு பெற வேண்டும் !



குப்பைக்குள்தான் கிடக்கிறது
குண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !

அப்பப்பா பொழுதெல்லாம் ஆனந்தத்திலே
அவரவர்க்கு வேண்டியது கிடைத்தனாலே
தப்பாத்தான் போகிறது அரசியலும் இங்கே
தவிக்கின்ற மக்களுக்கு நீதி சொல்வதாரு!

ஒப்பற்ற விலை உயர்வு ஏழை மக்களை
ஒடுக்கித்தான் வைக்கிறது எந்நாளும் இங்கே
கற்கின்ற கல்விக்கேனும் காமராசர் போல்
கை கொடுக்கும் தெய்வம் இங்கு யாரும் இல்லையா!..

பிற்போக்கு வாதிகளாய் நாமிருப்பதால்
பின்தங்கிப் போகாதோ நன் நாட்டின் வளம்!
நற் போக்கு நமக்குள்ளே வேண்டும் என்றால்
நல்லவர்களே  அரசியலில்  இருந்தாக வேண்டும்

கற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
காலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!

தன் மான உணர்வு உள்ளது ஏழைகளிடத்திலே
தயங்காமல் அவர்கள் பெயரை முன் மொழியுங்கள்
எம் மானம் காப்பதற்கு உரிய தலைமைக்கு
எவன் மனிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/26/2013

உள்ளம் அது ஒளி வெள்ளம் என...


உள்ளம் அது
ஒளி வெள்ளம் என
துள்ளும் நிலை
அது போதும் இங்கே
இது தான் வாழ்க்கை
அன்பே கேளு!

சொல்லித் தரவா
பள்ளிப் பாடம்?
அதில் இல்லை இது போல்
இன்பம் ஏதுவும்!

முத்தம்  மழையாகும்
இங்கு உயிர் மூச்சில்
சுகம் சேர்க்கும்
சித்தம் தடு மாறாமல்
இன்பத் தேனை
அது வார்க்கும்

அன்பால் பொங்கும்
இன்பம் நூறு அதை
ஏற்றுக் கொண்டால்
துன்பம் ஏது!
உன்னில் எனைக்  காண
அட என்னில் உனைக்  காண
வண்ணக் கவி பாடும்
என் எண்ணம் உனதாகும்!

கண்ணே கதை கேளு
கனியாத மனம் ஏது?
விண்ணே குடையாகும்
ஆனந்த விழிநீர் மழையாகும்

பொன்னின் நிற மானே!
அதைச் சொன்னால் புரியாதே!
அள்ளிக் கொள்ள வா ...
என்  அன்பைப் பொழிவேனே ....

                                        (  உள்ளம் அது ஒளி.....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/21/2013

தமிழனுக்கு தேவை இங்கு தமிழீழம் மட்டும் தான் .



கொன்று குவித்த
பிண வாடை நடிவினிலும்
நின்று சிரிக்குது தனக்கான
சமரசத்தை ஏந்திய வண்ணம் அநீதி!

பச்சைக் கம்பளம் விரித்தது போல்
இயற்க்கை எட்டுத் திக்கிலும்
கொட்டி வைத்த பசுமை இன்றும்
தமிழனின் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறதே!

கண்கள் இருந்துமா இக்
காட்சிகள் புரியவில்லை!
சுதந்திரப் பறவைகளும் இங்குதான்
சுயமாகப் பறக்கவில்லை!

கை கட்டி வாய் பொத்தி
உயிர்ப் பிச்சை போதும் என்று சில
உணர்வுகளைக் கொன்ற தமிழனிடம் அல்லவா
வாய்ப்பாடும்  கையளிக்கப் படுகிறது!

சமரசப் பேச்சு என்பதே சிறு துளியும்
சமரசம் அற்று இருக்கையில்
நீதிக்கு இங்கு என்ன  வேலை
நீர் மேல் எழுத்துப்  போல்!

கருவறை கிழித்த கைகளாலும்  தமிழனை
அழித்து ஒழித்த விழிகளாலும்  இன்னும்
அடங்கி ஒடுங்கிப் போவதற்க்காகவா  எம்
ஆருயிர்கள் மண்ணினில் புதைந்தார்கள்!

சொகுசு வாகனக் காரர்கள் சும்மா
சுத்தித் திரிந்து பார்த்த காட்சிகள்
உண்மை இல்லை என்று தெரிந்த பின்னும்
நீதியைக் காக்க இன்னும் என்ன தடை!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2013

கருணைக் கடலே கண் திறவாயோ...

அசல்  இங்கே
நகல்  அங்கே
நகலை  நம்பும் மக்களுக்கு
அசலை  நம்ப வைப்பதாரு!....

பகலென்ன இரவும் என்ன
படுத்துறங்கும் வேளையிலும்
இறைவா உன் காலடிதான்
எனக்குள்ளே தெரிகிறது !.....

இது நீதி என்றுரைக்க
எழுந்தருள நீ மறந்தால்
உ(ன்)னை நம்பும் பக்தர்க்கு
உயிர் மூச்சு நின்றுவிடும்

பரிகாரம் ஏதும் இல்லை
பரந்தாமா உன் அருளே எல்லை
விழி நீரை நெய்யாக்கி
விடை தேடி அலைகின்றோம்...

விதி வரைந்த கைகளினால்
விடை எழுதிச் சென்று விடு
மதி மயங்கி நிற்போர்க்கும் 
மன அமைதி தந்து விடு

ஓர் உயிரை ஈருடலில்
ஒருங்கிணைக்க முடியாது
நீ எழுதும் தீர்ப்பினில் தான் இனி
நீதி என்றும் நிலைத்திருக்கும் !...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/15/2013

செய்வன திருந்தச் செய் அதையே துணிந்தும் செய்!



உப்புக் கல்லை வைரம் என்று
ஒப்புக் கொள்ளச் சொல்வார்!- அதையே
ஒப்புக்கொள்ள மறுப்போரிடத்தில்
மேலும் ஒழுக்கக்கேடாய் நடப்பார்!

சிலர் கற்றுக் கொண்ட அறிவை மறந்து
கயமை உணர்வுடன் இருப்பார்!- இந்தச்
சுற்றம் சூழல் பெரிதென நினைத்தால்
வரும் சுமைகளை இங்கே யார் சுமப்பார்!

பட்டிக் காட்டு மனிதர்கள் இவர்களைப்
பகைத்தால் துயரம் என்றே  நீயும்
கட்டுக்கடங்கிப்  போவாயானால் பின்னர்
வாழ்க்கை என்றும்  கசக்கும்!

கற்றுக் கொள்வாய்  வாழ்வில் இனியும்
எம்மைக் காக்கும் சிலரே  போதும் என்று!
விட்டுத் தள்ளு ஏனையவை எல்லாம் வீண்
விரக்தியை ஊட்டும் பதர்கள் என்று!

எதிலும் குற்றங் கண்டே  பிழைப்பவரிடத்தில்
கூர்மையாக நின்றிடுவீர்!
பயபக்தியோடும் பாசத்தோடும் பழகும்
உறவுகளை வென்றிடுவீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/11/2013

உன்னோடு தான் உறவாடினேன்


உன்னோடு தான்
உறவாடினேன்
உனக்காகத்தான்
உயிர்  வாழ்கிறேன்
மண்ணோடு கலந்தாலும்
மறையாத நேசம்
என் வாழ்வில் ஏன் தந்தாய்
இது போல் ஓர் ஏக்கம்

கண்ணா நான் அழைக்கின்றேன்
கவி பாடிக் களைக்கின்றேன்
சும்மா ஏன் வெறுக்கின்றாய்
சோகத்தில் குளிக்கின்றாய்

தள்ளாடித் தள்ளாடி
மனம் ஏங்குதே!
தலையணையோடு கதை பேசி
விழி வாடுதே!
உன்னோடு நான் சேர
வழியில்லையா?
உயிர் அற்ற பிணம்
வாழ முடியாதைடா

என் சீவன்  உன் சீவன்  என்றான பின்
இதயத்தின்  ஓசைகள் வேறாகுமா?
நீ கொண்டாடும் இடம் வேறு என்றானதால்
அன்றாடம் என் வாழ்க்கை திண்டாட்டத்தில்

கண்ணாடிப் பொருள்மீது கல் பட்டாலும்
கல் மீது கண்ணாடி தான் பட்டாலும்
கண்ணாடி தான் இங்கு உடையுமடா
உன்னாலென் உயிர் போகக் கூடாதடா ....

                                     (  உன்னோடு தான் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/07/2013

வாருங்கள் உறவுகளே ஒன்று சேருங்கள்!...

ஈழத் திரு நாட்டில்
எம் தமிழர் தாய் நாட்டில்
மானம் காக்கப் பிறந்த
மறத் தமிழனடா உன் அப்பன்!...

ஏரைப் பிடித்த கரமும்
எடுத்துரைக்கும்  சுதந்திரத்தின்
வேரை ஊன்றியவன்
வெற்றிப் பாதைகளில்
சாதனைச் சுவடுகள் பதித்தவன்

அன்னை திரு நாட்டின்
அடிமை விலங்குடைக்கத்
தன்னைத் தந்து தாயாக நின்றவன்
உன்னை மட்டும் நினைத்திருந்தால்
உலகில் தமிழன் என்றோ தோத்திருப்பான் :(((
உனக்கும் வாழ்வு வந்திருக்கும்!......

பொன்னில் வடித்த சிலை போல
பரந்த மார்பில் குண்டேற
என்ன துடி துடித்தாயோ
இரக்கம் அற்ற அரக்கர்கள் முன்னால்!...:((((

வண்டு காதில் துளைத்தாலே
வருந்தும் மழலை உன் மார்பினிலே பல
குண்டுகள்  துளைக்கும் அளவுக்கு
கொடுமை என்ன நீ செய்தாய்
இதை இன்று கேட்க்க நாம் தவறினால்
ஈனத் தமிழன் என்றாவோம் !.........
                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

இப்போது சொல் உன் வாழ்த்துரைகளை !

நிலவென்று சொல்லாதே
இருள் சூழ்ந்த வாழ்விற்குள்
இன்னமும் ஒளியற்றுக் கிடக்கும்
பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம்!

மலர் என்று சொல்லாதே
மணம் வீசி நின்றாலும்
மதியாதோர் கால்களுக்குள்
மிதிபட்டுப் போகும் பெண்ணினம் தான்
ஏராளம்! ஏராளம்!

என் உயிர் என்று சொல்லாதே
உரிமையைக் கொடுத்து விட்டு
இன்னமும் உயிரற்ற பிணமாக
அலையும் பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மான் என்று சொல்லாதே அவள்
மயக்கத்தில் இருக்கும் போதே
வீணாக்கப் பட்டு வீசி எறியப்பட்ட
பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மயில் என்று சொல்லாதே
குயில் என்று சொல்லாதே
அடக்குமுறைக்குள் இன்னமும்
அடங்கிக் கிடக்கும் பெண்ணினம்தான்
ஏராளம்..ஏராளம்!

விழியிரண்டும் கெண்டை மீனா!
நீ விரட்டி அடிக்கும் போதெல்லாம்
கடல் நீரைக் கூட கடன் கேட்டாளே!
எதற்கு இத்தனை உவமைகள்!

பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்போம்!
பெண்ணை பெண்ணாகவே  மதிப்போம்!
பெண்ணுக்கென்றே உள்ள உரிமைகளைப்
பெண்ணிடமே விட்டு விடுவோம்!

                                                                அம்பாளடியாள் 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/04/2013

வெக்கித் தவித்தேன் வேதனை தீரவில்லை



வெக்கித் தவித்தேன்
வேதனை தீரவில்லை
நான் வெந்து மடிந்தேன்
உன் ஞாபகம் போகவில்லை
கட்டழகு கட்டிக் கரும்போ  உன்
கண்களிலே தவழும் நிலவோ!
முத்தமிட்ட கன்னங்களில்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
சித்தரிக்க வார்த்தை இன்றி
சிந்தனைகள் வாடுதடா!

                          (வெக்கித் தவித்தேன் )

பள்ளியறைப் பாடம் சொல்லி
என்னுயிரில் நீ கலந்தாய்
தள்ளி வைத்துத் தாளம் போட
இன்னும் என்ன வேண்டுமடா?
கல்லில் முள்ளில் தூக்கம் என்ன .
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
என்றன்  உயிர் வேகுதடா

பெண்ணின் துயர் கேட்பதாரு
பேச்சு நின்று போச்சுதடா!
உள்ளத்திலே உள்ள சோகம்
ஊமை நெஞ்சை கொல்லுதடா!
பாடல் தந்த தலைவனுக்கு
நான் பாடும் பாடல் கேட்கிறதா...
வீறாப்பு ஏன் உனக்கு இன்னும்
வேண்டாமே தப்புக் கணக்கு .......

                             (வெக்கித் தவித்தேன் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/02/2013

பூங்காற்றே பூங்காற்றே இந்தப் பூவை இனியும் தீண்டாதே



பூங்காற்றே பூங்காற்றே
இந்தப் பூவை இனியும் தீண்டாதே
ஏங்காத ஏக்கம் இல்லை
என் வாழ்வில் தூக்கம் இல்லை

ஊமத்தம் பூவின் சொந்தம்
உள்ளூரத் தந்த துன்பம்
நீ வந்து தீண்டும் போதும்
என் நெஞ்சைக் கொல்லும் கொல்லும்

ஆராரோ ஆரிரரோ
நான் பாடக் காத்திருந்தேன்
யார் யாரோ சொந்தம் என்று
என் வாழ்வைக் கொன்றதாரு!

வானத்தைப் பூமி தொடுமா?
வடக்கைத்தான் தெற்கும் தொடுமா?
காலத்தின் கேள்வி இதற்க்கு
கண்ணீரே பதிலானதே ..

மானத்தில் சிறந்த மங்கை
இவள் மனதுக்குள் ஓடும் கங்கை
இனிச் சேராத இடத்தைச் சேர்ந்து
செறாகிப் போனால் தகுமா!


வாழத்தான் வாழ்க்கை என்றாய்
வடிவாகப் பேசிச் சென்றாய்
நான் உந்தன் சொந்தம் என்று
சொன்ன நாவும்தான் போனதெங்கே!


                   ( பூங்காற்றே பூங்காற்றே)
                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/28/2013

கற்றார்க்கே சென்ற இடமெல்லாம் சிறப்பு !..


அடக்கு முறைக்குள்
சிக்குண்டு தவிக்கும் எம்
நாவுக்கு விடுதலை கொடுத்துப் பார்
உன் படை பலம் தோற்கும் !

கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் எதனையும் வென்று காட்ட
புத்தியுள்ள மனிதர்களுக்கு
சக்தி கிடைத்தால் போதுமிங்கே!

குத்திக் குத்தி உடல்களைக் கிழித்து
அச்சம் ஊட்டி வென்ற வெற்றி
எச் சமயத்திலும் தோற்க்கும்
தோற்றால் உன்றன்  நிலைமை என்ன!

காட்டு மிராண்டித் தனத்திற்கும்
இந்தக்  கையாலாகத் தனத்திற்கும்
வேட்டு வைக்க  ஒரு நாள் வரும்
வரும் வரைத்தான் இத்துன்பம்!

மாட்டைப் போல சொன்னது கேட்டு
மடியில் இருப்பதை உன்னிடம் தந்தும்
ஏன் நாம் ஏட்டுக் கல்வியைத் தொடர வேண்டும்
இதுதான் இறுதியில் வெல்லும் பார்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/26/2013

நீதி செத்துப் போனதா இங்கே!....



வாரங்கள் நான்கிலும்
வருந்தித்தான் பிழைக்கின்றோம்
ஏனம்மா எமைப் படைத்தாய்
ஏக்கம் கொண்டு வாழ்வதற்க்கா!

சாவுக்கே சாவு மணி
சர்ச்சை இன்றி நாம் அடிப்போம்
நீ வந்து துணை நின்றால்
நீங்காதோ எத் துயரும் !

கோரப் பல் முகம் காட்டி
கொடியவர்கள் ஆட்சி செய்ய
நீதிக்குத்  தண்டணையை
நெஞ்சமிங்கே ஏற்றிடுமா!

போருக்கு அழைத்தவர்களும்
போகுகின்றனரே  பாராளுமன்றம்
போர்க் குற்றவாளி என்று எம்மைப்
போகும் இடம் எல்லாம் சொல்லிவிட்டு!

யாருக்குத்தான் தெரியாது
யாதும் இங்கே போலியென்று பிறர் அறிய
சேதத்தை எடுத்துரைத்தும்
சேதாரம் செய்கின்றனரே அது எதற்கு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/20/2013

செய் அல்லது செத்து மடி.....



குப்பைக்குள் கிடக்குதென்றும் குண்டுமணி
குப்பையோ ஏறுது பார்  கோபுரத்திலே!
அப்பப்பா உலகம் ரொம்ப மாறிப் போச்சுது
அதனால்தான்  துன்பம் எல்லை மீறிப் போச்சுது!

முகம் பார்த்து முடிவுகளைத் தானே வகுக்குறார்
மீறி முன்னேறிச் செல்வோரைப்  பின்னே இழுக்குறார்!
உறவுக்குக் கை கோர்த்து உயர்த்தி விடுகிறார் சிலர்
உட் பகையை மனதில் வைத்து ஒதுக்கி விடுகிறார் !

வளர்கின்ற சந்ததியின் வாயை அடைப்பதும்
வருமானம் பார்த்து இங்கே தலைமை ஏற்பதும்
இது நாகரீகம் என்று சிலர் ஏனோ நினைக்கின்றார்!
இதில் ஏதும் அறியாதவர்களும் இங்கே கூட்டுச் சேர்கின்றார்!

தங்க முலாம் பூசி விட்டால் அது தங்கமாகுமா!
இது  தப்பென்று தெரிந்து விட்டால் வந்த வெக்கம் போகுமா!
கருக் கலைப்புப் பாவமென்று எண்ணித் துடிக்கையில்
இப்படிக் கருக் கலைத்துச் செல்வோரை உலகம் ஏற்குமா!

உருப்படியாய்த் தகமைகளை ஊக்குவிப்பதும்
உணர்வொன்றிச்  சேவைக்கென தன்னை அர்ப்பணிப்பதும்
மிகப் பெரிய பண்புகளில் ஒன்றாகுமே இதை
உணர்ந்து  மனிதன் செயற்ப்பட்டால் நன்றாகுமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/19/2013

காவல் தெய்வம் நீ எங்கே!......



ஏழரைக் கோடி மக்களைக் கொன்ற
அரக்கனின் வாழ்வும் சிறப்புறும் போது
ஒரு பாவமும் அறியாப் பாமர மக்கள்
பயந்தென்றும் வாழும் நிலை தகுமோ!

மாவிலைத் தோரணம் ஆடவும் இல்லை
மனதினில் வந்த துயர் போகவும் இல்லை
சாவினைத் தழுவிய சந்ததி இதற்க்கு
இச் சங்கடம் மேலும்  தொடர்வது எதற்கு!

நீதியை அநீதி புறக்கணிப்பதனால்
நித்தமும் வாழ்வில் சித்திரவதைதான்
எம்மை நாடி வந்த இத் துயர் தீர்ப்பவர் யாரோ!
நன்மைகள் தினம் அருளும் எம்பிரானே!

எத்தனை சாட்சிகள் வந்தும் என்ன
மனசாட்சி அற்ற மனிதர்கள் முன்னே !
இத்தனை காலமும் பொறுத்தது போதும்
இக்கரைக்கும் அக்கரைக்குமாய்  என்ன வாழ்க்கை!

ஓடி ஓடி அலுத்த பாதங்கள்
ஓரிடத்தில் நிற்ப்பது எப்போ!
வாடிக் குரல்வளை அடங்கும் முன்னே
வையகத்தில் எமக்கொரு தீர்ப்புச் சொல்லு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/12/2013

அம்மன் பாடல்கள்!........


நலிந்து கிடக்கும் உள்ளத்தைத்
தட்டி எழுப்பிய துரதிஸ்டம்
அதன் இஸ்டம்போல ஆட்டிவித்தால்
இதயத் துடிப்பு எப்படி இருக்கும்!.....

கணக்கில் இட்டால் தாங்காது பின்
கண்கள் இரண்டும் தூங்காது வரும்
வழக்கில் மட்டும் புலனைச் செலுத்திக் கொண்டால்
வருந்தும் மனம்தான் என்ன செய்யும்.........

மறந்து போக நினைப்பதையே
மறக்க முயன்று தோற்றுப் போகும்
அவரவர் குணத்திற்கேற்ப பாதிப்புகள்
குறைந்த பட்சம் வந்தே தீரும்!......

தவிர்க்க முடியாத் தண்டணை  இதைத்
தவிர்த்துக்கொள்ள ஒரே ஒரு வழி
அம்மன் துதியே அவ்வழியாகும்
அகிலம் போற்றும் நல்வழியாகும்!.....

சொல்லும் பொருளும் மனச் சோர்வைச்
சிதைத்தே வாழ்வில் இன்பம் தரும்
இனிய இசைக்கு மயங்காத ஓர்
இதயம் உண்டோ சொல் இவ்வுலகினிலே!....

அரிய பாடல்கள்  இதைக் கேட்டே
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
உரிய முறையில் பயிற்சிகளை ஊட்டி
எம் சந்ததியையும்  வளர்த்திடுவோம்.....




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.