10/15/2012

இப்படியும் ஓர் ஆசை!..(தொடர் கதை பாகம் -3)

யேய் ...ஜோதி உங்கட  அக்காவோட கலியாணத்தத்தான்  சும்மா அந்த மாதிரி சிறப்பா நடத்தி முடிச்சிற்றாங்களே...நீ எப்படீ .... கலியாணம் கட்டிகொள்ளப் போற?....சீ போடி .....அட்றா சக்க எண்டானாம் கலியாணம் எண்டதும்  வெக்கத்தப் பாரு !.....ஹா ...ஹா ..ஹா...அது சரீடி உங்க அக்காவும் அத்தானும் எப்படி லண்டனுக்கு போகினம் ?....அது தெரிய இல்லையடி அப்பா ..ஆனா எனக்கு மட்டும் எங்க அக்காவ விட்டுப்  பிரியிறத நினைச்சாத்தான் ரொம்பக் கவலையா இருக்குடி.  அப்போ நான் ஒண்டு செய்யட்டுமாடி ?...!..என்னது ?...உங்கட அப்பாட்ட சொல்லி உனக்கும் லண்டன்லையே மாப்பிளைய பாக்கச் சொல்லட்டா?....என்ன கிண்டலா ?...இல்லடி .எனக்கே உன்னப் பாத்தா நான் ஆம்பிளையா பிறந்திருக்கக் கூடாதா  எண்டு கவலையா இருக்குடி...யூ ராஸ்கோல்!....இருடி வாறன் இண்டைக்கு உனக்கு  ....ஜோதி விடடி...பிளீஸ்டீ ....பிளீஸ்டீ ....விடடி என்ன ...அதோ உங்க அப்பா வாறாருடீ ....ஏமாந்திற்றியா !....ஹா ..ஹா ....ஹா ........ சீ போடி நான் உன்னோட இனிமேல் கதைக்கவே  மாட்டன் .கோவிச்சுக் கொள்ளாதடி செல்லம்.. நீ கதைக்க இல்லையெண்டா நான் இனிமேல் யாரோடையும் பகுடி விட மாட்டன்டி அப்பா ..ஐயையோ அத மட்டும் நிறுத்தீராதடி அப்புறம் எங்கட பள்ளிக்கூடமே இருண்டு போயிரும்டி ஹா ஹா..ஹா....சரி வாடி  காப்பி குடிச்சிற்று போகலாம் .

                      அடடே!...வாம்மா மீரா .எப்ப வந்த ?..இப்பதான் ஆன்ரி.வீட்டில எல்லாரும் எப்புடி இருக்குறாங்கள் ?...ம்..எல்லாரும் நல்லா இருக்குறாங்கள் ஆன்ரி .நீங்க எப்புடி இருக்குறீங்க ?....எனக்கென்னடி அம்மா நான் நல்லாத்தான் இருக்குறன் .ஒரு மாதிரி மூத்த பொண்ணோட கலியாணம் முடிஞ்சுது .இனி ஜோதிக்கும் ஒரு நல்ல இடமாப் பாத்துக் கட்டிக் குடுத்திற்ரா எங்கயோ ஒரு மூலையில சிவனே எண்டு போய்க் குந்தீரலாம் .கேட்டுக்கோடி உங்க அம்மா சொல்லுறத ....பாருங்கம்மா இவள !..வந்த நேரத்தில இருந்தே  ஏதொ சொல்லி வச்சமாதிரி என்னோட கல்யாணத்தப் பற்றியே பேசீற்று இருக்குறாள் அதுக்கில்லடி அவளுக்கும் உனக்கும் இருக்கிற நட்புக்கு இடையில வேற யாராவது வந்திரப் போறாங்களோ  எண்டு பயப்படுகிறாள் போல. யாருக்கு தெரியும் !....இறைவன் யார் யாருக்கு இன்னார் எண்டு எழுதி வச்சிருக்கிறத !.....
எனக்கு தெரியுமே ஆன்ரி .நம்ம ஜோதிக்கு எங்க அண்ணனையேதான் இறைவன் நிச்சயிச்சு இருக்கிறார் .இனி நீங்கதான் ஆன்ரி அத முடிச்சு வைக்கணும் .ஓ!!!....விசயம் அப்புடி போகுதா ?....அச்சச்சச்சச்சோ  அவங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிற உண்மைய நான் உங்களிட்ட  சொல்லவே  மாட்டன் ஆன்ரி ...அதுதான் சொல்லீற்றியேடி அம்மா...!!! ஹா ...ஹா ...ஹா...சொல்லீற்றனா ஆன்ரி ?...!!!! போச்சுடா இப்ப நான் என்னடி  பண்ணுறது சொல்லுடி என் தோழி  .....சீ ....போடீ பாருங்க ஆன்ரி என்னப் போச்சொல்லீற்று அவ வெக்கப் படுகிறத ஹா ஹா ...ஹா ....ஹா .....

என்ன இங்க ஒரே சிரிப்பா இருக்கு ?.....அது ஒண்டும் இல்லங்க எல்லாம் நல்ல விசயம்தான் நீங்களும் நானும் ஆசப்பட்ட மாதிரியே உங்க செல்லப் பொண்ணு ஜோதி ஜோதிக்கு என்ன?...அவளுக்கு ஒண்டும் இல்லங்க .அவ நம்ம ரவி தம்பியக் காதலிக்கிறாளாம் .காதலிக்குறாளா ????....யாரக் கேட்டு இவ காதலிக்குறாளாம் ?....நீங்க யாரக் கேட்டு என்னக் காதலிச்சுக் கலியாணம் செய்தீங்களோ அவங்களக் கேட்டுத் தானுங்க .அப்புடியா விசயம் !...    ஆமாங்க அப்புடி எண்டா சரீடி .இந்தக் கலியாணத்தயும்  ஜாம் ஜாம் எண்டு செய்து முடிச்சிர வேண்டியதுதான் .எங்கடி என்ர செல்லப் பொண்ணு ?...ரொம்பவே தேடாதீங்க அங்கிள் .அப்புடியே அந்தக் கண்ணாடியப் பாருங்க!....  நம்ம நிலா அழகா சிரிக்குறத..... ஆமா இல்ல ஹா ...ஹா ஹா ...ஹா ...வெக்கப் பட்டது போதும் வாம்மா இங்க .அப்பா என்ன ஆசீர்வதியுங்கப்பா ..தீர்க்க சுமங்கலியா இரும்மா போ ..போய் உங்க அம்மா கால்லையும் விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ அம்மா நீயும் என்ன ஆசீர்வதியம்மா என் கண்ணு ஆயுசுக்கும் நல்லா இரடியம்மா ......
                                               தொடரும் ......            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. நல்ல தோழி தான் காதலை சொல்ல இப்படி ஒரு தோழி கிடைத்த நிம்மதியில் ஜோதி.

    தொடருங்கள்.

    ReplyDelete
  2. தொடருங்கள...

    நான் பிறகு வந்து முழுவதையும் படித்துவிடுகிறேன்.

    ReplyDelete
  3. ஆமா நல்ல தோழி கிடைக்கவும் ஒரு கொடுப்பினை வேனும்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........