மதி கெட்டு விதியை நம்பி
மனம் நொந்து உலகை மறந்து
இருளுக்கு அடிமையாகி
இது என்ன வாழ்வு என்றால்
மனச் சோர்வு உடலைத் தாக்கும்
மழைத் துளியும் பாரமாகும்
உறவெல்லாம் தூக்கி ஏறிந்து
ஒரு மூலையில் முடங்கச் சொல்லும்!...
இதற்காகவா நாம் பிறந்தோம்
பின் எதற்க்காக நாம் பிறந்தோம்
கொஞ்சம் விரிவாகச் சிந்தித்தாலே
வாழ்க்கை வியப்பாக அமையும்
இவர்போல்!...
உலகுக்கு நன்மை செய்து
உளதார வரும் அன்பை ஏற்று
பல ஜென்மம் போற்றும் வகையில்
பண்போடு வாழ்ந்தால் என்ன!!!.......
தரை மீது தூங்கும் போதும் இன்பம்
தானாக நெஞ்சில் பொங்கும்
நிலை இல்லா செல்வம் மறந்து
நிலையான அன்பை அடைந்தால்!...
திருக்கோவில் தெய்வம் நீயே
என்றும் பிறருக்காக வாழும்போது
உனக்கென்ன கவலை இங்கே
உன்னை நீயே கேட்டுப் பாரு!....
யாரை நம்பி நீ பிறந்தாய்!....
இங்கு யாரை நம்பி நீ வளர்ந்தாய்
நாம் வாழும் இந்த உலகத்திலே
எந்நாளும் வேண்டும் நல் இதயம் அன்பே!:....
உயிரின் தாகம் தீர்க்கத் தண்ணி உண்டு
உள்ளம் மகிழ இயற்க்கை உண்டு
எண்ணம் முழுதும் தெளிவானால்
இதமாய் வாழ நல் வழியும் உண்டு
சின்னச் சின்ன ஏக்கங்களால்
சிதைந்து போகும் நல் மனங்களுக்கு
இன்னும் உலகில் புதுமை உண்டு
இதை ஏற்றுக்கொண்டால் மாற்றம் உண்டு!...

























IMG_8379-Hans.jpg)




