10/13/2012

இப்படியும் ஓர் ஆசை !!..(தொடர் கதை பாகம் -2 )

அப்பா பிளீஸ் அப்பா ...நீங்க என்னதான் சொன்னாலும் வெளிநாட்டு மாப்பிளைய என்னால கலியாணம் செய்துகொள்ள முடியாதுப்பா  .ராணி இப்புடி அடம் பிடிச்சா எப்புடியம்மா ?...அப்பா நான் உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன் பேசாம இந்தக் கலியாணத்துக்கு ஒத்துக்கோ .அம்மா பாருங்கம்மா நான் வேணாம் வேணாம் எண்டு சொல்லவும் அப்பா ஒரேபிடியா அந்த மாப்பிளையத்தான் நான் கலியாணம் செய்ய வேணும் எண்டு நிக்குறார் நீயாவது சொல்லம்மா இந்தக் கலியாணம் வேணாம் எண்டு .என்னங்க நீங்க அவதான் வேணாம் எண்டு சொல்லுறா இல்ல .பின்ன எதுக்குங்க நீங்க அவள இந்தப் பாடு படுத்துறீங்க ?...கெளரி நீ சும்மா இரு .அவனமாதிரி மாப்பிள இவளுக்கு வேற எங்கடி கிடைப்பான் ?..அம்மாவும் மக்களுமா சேர்ந்து வலிய வாற சீதேவிய தட்டிக் கழிக்க பிளான் பண்ணாதீங்க சொல்லிப்போட்டன் .அது இல்லப்பா தங்கச்சியையும் ,உங்களையும் ,அம்மாவையும் இங்க விட்டிற்று நான் மட்டும் கண் காணாத தேசத்தில போய் என்ன சுகத்தக் காணப் போறன் ?...இதுக்குத்தான் நீங்க என்ன இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வளத்தீங்களா ?....நான் ஏன்னப்பா உங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு வாழ வேணும்?....எவ்வளவுதான் பணம் காசு இருந்தாலும் செத்துப் போனவங்கள உங்களால திருப்பிக் கொண்டு வர முடியுமா ?....இந்தப் பிரிவும் எனக்கு அப்புடித்தானப்பா புரியுது!...அளதடா செல்லாம் இதெல்லாம் பாத்தா ஒரு நல்ல வாழ்க்கைத் துணய தேட முடியுமா!....கண்ணத் துடைச்சுக்கொண்டு வெளிக்கிடு மாப்பிள வீடுக்காரர் வர்ற நேரம் ஆச்சு .கெளரி இந்தாடி நம்ம பொண்ண மகாலட்சுமி மாதிரி வெளிக்கிடுத்திக் கொண்டு வா .போம்மா போ ....
சரி அப்பா . 
                            அப்பா ...அப்பா ...மாப்பிள வீட்டுக்காரர்   வந்தாச்சு .சரி போம்மா ஜோதி நீ போ ..போ... போய்ச் சீக்கிரமா  அம்மாட்ட சொல்லு மாப்பிளை வீட்டுக்காரர் வந்தாச்செண்டு .அடடே வாங்க வாங்க உள்ள வாங்க இருக்கட்டும் இருக்கட்டும்.... எல்லாரும்  உக்காருங்க .நாங்க உக்கார்றது இருக்கட்டும்  முதல்ல பொண்ணக் கூப்புடுங்க !..மாமனாரே ஏன் அவசரப் படுகுறீங்க பொண்ணு வரும் .அதுக்கு முதல்ல பேச வேண்டிய சீர்வரிசையைப் பற்றி பேசுவம் .அவ்வளவுதானே பேசினாப் போச்சு .அது சரி இந்தப் பலகாரம் கிலகாரம் இதெல்லாம் தர மாட்டீங்களா ?....உங்களுக்கில்லாததா ?...:) பெரியப்பா பெரியப்பா ..உங்களுக்கு சுகர் இருக்குது!!!...ஏய் குட்டிச் சாத்தான் இத சத்தம் போட்டுச்  சொல்லாதடி காப்பியிலகூட சுகர் இல்லாம தந்திரப் போறாங்கள் ஹா ..ஹா ...ஹா சிரிக்காதடி செல்லம்.. அப்புறம் உன்ர கண்ணு முழிய தோண்டீருவன் .சீ போ நான் உன்னோட டூ .....

                   ஹாய் ..பொண்ணு வந்தாச்சு ...பெரியப்பா பொண்ணு வந்தாச்சு வாம்மா வந்து எல்லாருக்கும் காப்பியக் குடு .பொண்ணப் பாத்துக்கோங்க சம்மந்தி நாளைக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ .ஸ் ...மருமகளா இல்ல; சம்மந்தி மகளா ....பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கிறா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு !..கேட்டுக்கோம்மா உங்க மாமியாரே சொல்லியாச்சு இனியென்ன தட்ட மாத்திக்கொள்ள வேண்டியதுதானே ?...சம்மந்தி மாப்பிளைய ஒரு வாத்த கேக்க வேணாமா ?...மாப்பிளைய என்ன கேக்குறது கட்டடா  தாலிய எண்டா கட்டீற்றுப் போறான் ஏன்டா டேய் ....மாப்பிள வெக்கப் படுகிறத பாத்தாலே தெரிய இல்லயா!..கலியாண தேதிய கையோட குறிக்கச் சொல்லுற மாதிரி இல்ல ஹா ...ஹா ...ஹா ....எல்லாரும் சிரிச்சது போதும் நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னால வாப்பா தட்ட மாத்திக்கோ அதெப்புடி சீர் வரிசையப் பத்தி ஒண்டுமே பேச இல்லையே ?...யாராவது இங்க சீர்வரிசையைப் பற்றி பேசினீங்க  துலைச்சுக் கட்டிப் போடுவன் ஆமா!....இந்த மாதிரி பொண்ணு எங்க வீட்டுக்கு காலடி எடுத்து வைக்குறதுக்கு நாங்க தானையா சீர்வரிசை குடுக்க வேணும்.. மாணிக்கம் தட்ட வாங்கிக்கோ உன்னோட பொண்ணு எங்க வீட்டுக்கு உடுத்த சேலையோட வந்தா  அது போதும் !..ரொம்ப சந்தோசம் சம்மந்தி !!!..போம்மா போய் பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ .நல்லா இரும்மா ..நல்லா இரு!!!!...

அப்புறம் என்ன கலியாண தேதியையும் கையோட நிட்சயம் பண்ணிட வேண்டியதுதானே ?...! ஐயரே சீக்கிரமா ஒரு நல்ல நாளாப் பாத்துச் சொல்லுங்க .சரி சரி பாத்துடுறன் ம்ம்ம்ம் ...வாற ஆவணி மாசம் பதினாறாம் திகதி நாள் நல்ல நாளாய் இருக்கு அந்த நாள்ளயே காலியாண திகதிய நிட்சயம் பண்ணிரலாம் .எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க  இதில எல்லாருக்கும் சம்மதம்தானே !....என்ன சம்மந்தி மாப்பிள வீட்டுக்காரர் எங்களுக்கு இதில பூரண சம்மதம் .உங்களுக்கும் சம்மதம்தானே ?..நீங்களே சொல்லீற்ரீங்க இதில நான் என்ன சொல்லப் போறன் !..எங்களுக்கும் இதில பூரண சம்மதம்தான் சம்மந்தி .அப்புறம் என்ன அடுத்த வாரமே கலியாணத்துக்கு தேவையான எல்லா அலுவலையும் செய்திட வேண்டியதுதான்  .அப்போ  எல்லாருக்கும் வணக்கம் .நாங்க போயிற்று வரப்போறம் .போயிற்று வாறம் சம்மந்தி ...சம்மந்தி அம்மா போயிற்று வாறம் ரொம்ப சந்தோசம்!!!!..கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடியா நடக்கட்டுக்கும் ......
                                                            தொடரும் ......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

பகவத் கீதையே வாழ்வுக்குகந்த பாதை.



பாற் கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அழகைக் கண்டு
பார் புகழும் தென்றல் காற்றே
பாடாயோ கவிதை ஒன்று !.....

நீல மலர் மாலை கோர்த்து என்
நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும்
ஏழு மலை தாண்டி வந்தும்  இதை
அந்த இறைவனுக்கே சூடி விடு !....

கால நேரம் அவன் கையில்
கணம் பொழுதும் சுத்துகையில்
எம்மை ஆதரிக்கும் பெருமானுக்கு
இந்த அர்ச்சனைகள் மிகவும் நன்று !..

அவதாரம் பத்தெடுத்து உலகில்
எமை ஆளப் பிறந்த இறைவனைத்தான்
மனதாரப் பாடி இங்கு வாயார வாழ்துரைத்தால்
கனியாதோ எந்நாளும் கனிவான பொன்னாளாய்!...

துதி பாடு கண்ணனை எண்ணித்
துயில்கின்ற வேளையிலும் உனக்கு
இனிதான கனவு மெய்ப்படவே
எழுந்தருள்வான் எம் பெருமான் அங்கும்!.....

அரிதாரம் பூசாத அழகு மேனியான்
ஒளிக் கீற்று வீசத்தான் கண் விழித்து
இறைவா வா என் முன்னே என்று நீயும்
எழுந்தாடும் வண்ணம் இன்பம் தந்து

கலையாத சிந்தனை ஊற்றுக்குள்ளே
செங் கதிராக எந்நாளும் அமர்ந்திடுவான்
இவன் பாதம் தொழுதேற்றும் வரம் பெற்றால் பின்
அது போதும் உனக்கிங்கு வேறு என்ன வேண்டும்!....


நிலை அல்லவே உலகில் என்றும் நீ காண்பவை
தன் நிகரற்ற இறைவன் பாதம் தொழுமின்
உனைத் தேடி வரும் என்றும் வாழ்வுக்குகந்தவை
இதை உணராத மனிதர்க்கே வாழ்க்கை என்பது பெரும் சுமை!!!!........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/11/2012

இப்படியும் ஓர் ஆசை !!!!....(தொடர் கதை)

அடடடடா....என்ன அழகு !....என்ன அழகு !.....சுப்புரமணி நீ வாழ்க்கையில செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானய்யா ....டேய் சும்மா இருடா எனக்கு முன்னாலையே அப்பாவப் போய் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு போடா டேய் .அப்போ உனக்கு பின்னால நிண்டு கூப்பிடலாமா மீனாட்சி ?....ஹா... ஹா... ஹா ....என்னங்க நீங்க அவனோட சேந்து சிரிக்குறீங்க ?.........வேற என்னத்த எடி செய்யலாம் சொல்லு ?....எங்களுக்கெண்டு இருக்குறது இவன் ஒரே ஒரு பிள்ளதான். அவன் சந்தோசம்தானேடி எங்களுக்கு பெரிசு .அது இல்லங்க .....என்ன அது இல்லங்க ?..பாக்குறவங்க என்ன நினைப்பாங்க எண்டு சொல்ல வாற அப்புடித்தானே ?...மரியாத மனசில இருந்தா போதும் .ஏன்டா  ரகு உனக்கு இந்தப் பெண்ண புடிச்சிருக்கா ?...     அப்பா நீங்க பாத்த பொண்ணு எப்புடி அப்பா பிடிக்காமல் போகும் ?....சரீடா  வாற தை மாசத்திலயே ஒரு நல்ல நாளாய்  பாத்திர வேண்டியதுதான் .சீ போங்கப்பா எனக்கு வெக்கமா இருக்கு ...மீனாட்சி பாரு பாரு உன்ர மகன் வெக்கப்படுறத ......ஆமா!!!.. இல்ல ......ஹா ....ஹா ....ஹா....வேணாம் ..பிறகு அழுதிருவன் .யேய் அழுதிருவானாமடி !...சரி விடுங்க புளைச்சு போகட்டுக்கும் .என்ர அம்மா எண்டா அம்மாதான் .ம்ம்ம்ம் ...இந்தப் பசங்களே இப்புடித்தான் சமயம் பாத்துக் கால வாரீருவாங்கள் .டேய் கண்ணா நீ கவலப் படதயடா உங்க அப்பா அவரையும் சேத்துத்தான் சொன்னாரு.ஹா ...ஹா ...ஹா ..சபாஸ் சரியான போட்டி ....

      சுப்புரமணி ....டேய் டேய் உங்க தாத்தா குரல் கேக்குது ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதடா  .ஏனம்மா அவர் எங்கட தாத்தாதானே?.. எதுக்கம்மா இப்புடி பயப்புடுற ?..டேய் அவர் என்ர மாமனாரடா .மாமனார் எண்டா பயப்புடணுமா?..அது இல்லடா நீ சின்ன வயதிலயே வெளிநாட்டில போய் இருந்திற்ற அதனால உனக்கு இது ஒண்டுமே புரியாது .அப்புறமா சொல்லுறண்டா விடுடா கைய.. மீனாட்சி ......இதோ வந்திற்ரன் மாமா ......மாமா என்னங்க மாமா சாப்பிடுறீங்க?...எனக்கு கொஞ்சம் தண்ணி தா பிள்ள .சரி மாமா ...அடடே ரகு வாய்யா ....எப்புடியப்பா இருக்கிற ?...ஆளே பெரியாளா வளந்திற்ற!!......நான் நல்லா இருக்குறன் தாத்தா .நீங்க எப்புடி இருக்குறீங்க தாத்தா ?...எனக்கென்னப்பா போற கட்ட ஏதொ இருக்குறன் .அது சரி.. இந்தக்  காதில தோடு ,கழுத்தில அரக்கிலோவில ஒரு  சங்கிலி, கையில நட்டுவ மேளம் அடிக்கிற ஆக்கள்மாதிரி நகை அதுகள் ஒண்டும் நீ போட மாட்டியா ?...அட போங்க தாத்தா ...வெளிநாட்டில இருக்கிறதால அதெல்லாம் போட வேணும் எண்டு அவசியம் இல்ல .நான் உங்கட பேரன் தாத்தா .ம்ம்ம் இப்ப தாண்ட நீ என்ர  பேரன் .இந்தாடா  தாத்தா உனக்காகக் கொண்டந்தது .என்ன தாத்தா இது ?...பிரிச்சுத்தான் பாரன் ...ஆஹா ...எள்ளுருண்டை !!!..தாத்தா நீ அத இன்னுமா மறக்க இல்ல ?..அத எப்புடியடா மறப்பன்?...  எள்ளுருண்டை  தந்தால்தான் என்னட்ட தேவாரம் படிக்க வருவன் எண்டு அடம் பிடிச்ச ஆள்த்தானே நீ ...போங்க தாத்தா எனக்கு இப்ப ஒரே கவலையா இருக்கு .இத்தின வருசமா நான் உங்களோட வாழக் குடுத்து வைக்க இல்லையே தாத்தா ....டேய் என்னடா இது சின்னக் குழந்தை மாதிரி அழுகுற?....!! அது ஒண்டும் இல்லத் தாத்தா ....புரியுது!....நீ என்னடா செய்வ பாவம் நம்மளோட தலை எழுத்து  இப்புடியாப் போச்சு ...கண்ணத் துடைச்சுக்கோ .ரகு ...அம்மா கூப்புடுறா போய் என்னெண்டு கேள் .
                                      ஈஸ்வரா .....இந்தக் காலம் எப்பதான் மாறுமோ !!...என்னப்பா உங்கட பேரன் என்னவாம்?...சுப்புரமணி நீ குடுத்து வச்சவன்ரா.அருமையான பிள்ளைய கடவுள் உனக்கு மகனா தந்திருக்கிறான் .கெதியில அவனுக்கொரு நல்ல பெண்ணாப் பாத்து கலியாணத்தையும் செய்து வச்சிரு .ஆமாப்பா அது விசயமா பேசத்தான் அவன இங்க வரச் சொன்னன் .நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல விசயத்த தள்ளிப் போடாத .அது சரி பொண்ணு ஆரு ?....அது வேற யாரும் இல்லயப்பா உங்கட பாலிய நண்பர் சொக்கலிங்கம் பிள்ளையின்ர பேத்தி ராணிதான் .அட அந்த இளவரசியா ?...! ஆமாப்பா ..அருமையான சோடிப் பொருத்தம் .அந்தப் பெண்ணுக்கும் இதில சம்மதம்தானே ?.......
                                                 
                                                                                  தொடரும் .....
                                         
         (  இக் கதையில் வரும் கதா பாத்திரங்களும் கதையும் கற்பனையே .)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2012

அப்பு வளர்த்த நாய்!... (இறுதித் தொடர் )





மஞ்சள் வெய்யில் மனதை மயக்க மகிழ்வாய் மலர்ந்தது இன்னொரு பொழுது வண்ண மலர்கள் கண்ணைச் சிமிட்ட வட்டமிடும் வண்டினங்கள் ஒரு புறம் பசும் புல்லின் மேலே பனித்துளி படர்ந்து பொட்டு வைத்த காட்சி மறுபுறம் எல்லை இல்லா இந்த இயற்க்கை அழகை இரசித்தபடியே இறைவனின் சந்நிதி நாடி இணைந்து சென்றனர் வள்ளியமையும் அவளது கணவர் (கிராம சேவகர் மக்கள் தொண்டன் ,இறை பக்தன் ,எங்கள்  தாத்தா என்று மக்கள் மனதிலும் இடம்பிடித்த) நாகலிங்க அப்புவும் .கோவில் வாசலை நெருங்கியபோதே அப்புவின் விழிகளில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க .நல்லூர் கந்தனே தன் எதிரில் வந்து காட்சி தந்ததுபோல் பக்திப் பரவசத்துடன் வழக்கம்போல அவரது தேனிலும் இனிய குரலோசையினால் கந்தன் துதி பாடியபடியே கோவிலினுள் நுழைந்தார் .மக்களும் அவரது வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வழி விடவே அந்த நல்லூர் கந்தனை தரிசித்து விட்டு மண்டபத்தில் சற்று அமர்ந்து தன் தியானத்தை முடித்துவிட்டு கண் விழித்தபோது அவரைச் சுற்றி இளைஞர்கள் அணி ஒன்று அணி திரண்டு நிற்பதைக் கண்டார் கண்டதும்

என்ன விசயம் பிள்ளையள்?.... நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேணுமோ? என்று கேட்டார் .அதற்கு அங்கு நின்ற இளைஞன் ஒருவன் இல்லைத்  தாத்தா நீங்க இவ்வளவு காலமும் இந்த கிராமத்து மக்களுக்காக ஆற்றிய தொண்டினைப் பாராட்டி உங்களைப் போன்றவர்ளுக்காக ஒரு விழா எடுக்கப் போகிறோம் அதில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றான் .விழாவா !...எங்கள் சேவையைப் பாராட்டி எங்களுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்துள்ளீர்களா ?...இதுவரை காலமும்  அப்படி ஒரு விழாவை யாரும் செய்ததை நான் கேள்விப்படவே இல்லையே  !..உங்களது இந்த நல்லெண்ணத்தைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரிய  இ ல்லையடா  பிள்ளையள் !!!........அது சரி விழாவ எப்ப தம்பி வச்சிருக்கிறியள்   ?...வாற தை மாதம் பதினைந்தாம் திகதி தாத்தா .நீங்க பத்து மணிக்கு இந்த இடத்துக்கே வந்திருங்க நாங்க வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறோம் .சரி பிள்ளையள் உங்க விருப்பம்போலவே நடக்கட்டும் .

என்னங்க யாரிந்தப் பிள்ளையள் ?...இளைஞர் அணியாம் பிள்ள என்னப் போல சமூக சேவை செய்த முதியோர்களைக் கௌரவிச்சு ஏதோ விழா எடுக்கக் கூப்பிட்டாங்கள் சரி நானும் வாறன் எண்டு சொல்லி அனுப்பீற்ரன் ஏன் பிள்ள இதைப்பற்றி நீ என்ன நினைக்கிற ?...நல்ல விசயம் தானுங்க .இந்த நிகழ்சியை பார்க்க வாற சின்னஞ்ச் சிறுசுக மனதிலையும்  நாளைக்கு நாம வளர்ந்தும் இப்புடி நாலு பேர் பாராட்டுற மாதிரி  நாலு நல்லத செய்ய வேணும் எண்டு ஒரு எண்ணம் இந்த வயசிலயே வரும் இல்லையா சொல்லுங்க ?..சரியாச் சொன்ன நான் என்னத்த நினைச்சனோ அதையேதான் நீயும் நினச்சிருக்குற !...இல்லையா பின்ன!.. .இத்தன வருசமா உங்களோட குடித்தனம் பண்ணின எனக்கு எப்புடி இதுமட்டும் புரியாமல் போகும் .அது சரி உன்ன நான் பெண் பார்க்க வந்த உடனுமே தீர்மானிச்சு போட்டனே நீதான் என்ர பொஞ்சாதி எண்டு .வள்ளியம்ம உனக்கொண்டு தெரியுமா!.. ஒரு ஆணும் பெண்ணும் கலியாணம் செய்து கொள்ளுறது வேற ஒண்டுக்கும் இல்லடி. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு கொண்டு சந்தோசமாய் வாழுறதுக்குத் தான். அந்த வகையில நான் புண்ணியம் செய்திருக்க வேணுமடி உன்ன என் பொண்டாட்டியா அடைஞ்சதுக்கு .நான் மட்டும் என்னவாம் உங்களை அடைய புண்ணியம் செய்ய இல்லையோ சாமி ?....அடி கழுத நக்கலா பண்ணுற ஹா ...ஹா ...ஹா.....போதும் போதும் சிரிச்சது .நடவுங்க வீட்டுக்கு போகலாம் ......என்னங்க விளையாடினது போதும் எழும்புங்க வீட்ட போகலாம் ......என்னங்க!... என்னங்க!!!!!!:.... என்னங்க ஆச்சு உங்களுக்கு ????????............!!!!! என்னங்க !!!!!........
                                                         

  அம்மா !.....ஐயா !.....எழுந்திருங்க !!!!!..........பூசாரி ஐயா ......இங்க ஓடி வாங்கையா !!!..........இங்க பாருங்கையா !!!!....இந்த அம்மாவுக்கும்  ஐயாவுக்கும் என்னமோ நடந்திற்று பாருங்கையா !!!!.......அழாதப்பா அவங்களுக்கு ஒண்டுமே ஆகயில்ல .எந்தப் பெருமானுக்கு இந்த அம்மாவும் ஐயாவும் அவங்கட காலம் பூராவும் சேவை செய்ய வேணும் எண்டு நினைச்சாங்களோ அந்தப் பெருமானுடைய சந்நிதானத்திலையே இந்தப் புண்ணிய யீவன்கழுக்கு அவன் அடைக்கலம் கொடுத்திற்றான் நீ அழாதடா குழந்த!!...என்று சொல்லிக்கொண்டே இதுவரை  காலமும்  கையில் கொடுத்த தீர்த்தத்தை அவர்கள் உடல் முழுவதும் நனையும்படியாக கண்ணில் இருந்து வாத்து ஊத்தியபடியே ஊரைக் கூட்டி இருவரது உடலையும் தகனம் செய்து வைத்தார் பூசாரி. தன் எஜமான் ஐயாவும் எஜமானி அம்மாவும் இறந்து போன துக்கத்தைத்  தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த வாயில்லாத்த  யீவன் அந்தக் கோவிலைச் சுற்றி சுற்றி அங்கும் இங்குமாக ஓடிய படியே  அது விட்ட கண்ணீர், அது பட்ட துன்பம் பெத்த பிள்ளைகள்கூட இவ்வளவு தூரம் துன்பப் பட மாட்டார்கள் என்பது போல்  உணர்ந்த மக்கள் இது அப்பு வளர்த்த நாய், அப்பு வளர்த்த நாய் என்று கோவிலுக்கு வரும்போதெல்லாம் அந்த நாய் மீது தங்கள் அன்பையும் தனிப்பட்ட கவனத்தையும் எடுத்துக்கொண்டனர். அந்த நாயும் அவர்கள் இறந்த அந்த இடத்திலேயே இன்னும் அவர்களின்  நினைவுகள் சுமந்தபடி தன் வாழ்நாளைக் கழித்து வருகின்றது !!!!.......
                                     
               இந்தக் கதையில் வந்த பெயர்கள் 
சம்பவங்கள் யாவுமே வெறும் கற்பனைகள்தான் 

                                                                             நன்றி வணக்கம் உறவுகளே .

                                                 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/09/2012

அப்பு வளர்த்த நாய் (தொடர் கதை பாகம் -2 )



பாட்டி பாட்டி அந்தக் கம்பளம் வித்தவர் எங்க வீட்டுக்கு  வந்து இருக்குறார் அம்மா உங்கள அவசரமா கையோட கூட்டிக்கொண்டு வரச் சொன்னாங்க வாங்க பாட்டி போகலாம்.இருடி மீனாக் குட்டி தாத்தா சந்தைக்கு போக முன்னால எங்க வீமனுக்கு இந்தக் கறிய ஆக்கி வைக்கச் சொல்லீற்று போனார் .இதோ அத நான் இறக்கி வச்சிற்று வாறன்.நீ கொஞ்சம் இடியப்பம் தாறன் சாப்பிடுறீயா ?....சரி பாட்டி நான் வேணாம் எண்டா நீ என்ன விடவா போற .தா தா நான் சாப்பிடுறன் .பாத்துக்கோடி அம்மா மெதுவா சாப்பிடு!.. புரை ஏறிடப் போகுது .சரி பாட்டி. பாட்டி நீ சாப்பிட்டியா ?...உங்க தாத்தா சாப்பிடாமல்  நான் எப்படி சாப்பிட்டு இருக்குறன் ?..   நான் அவர் வந்தா பிறகு சாப்பிடுறன் நீ சாப்பிட்டுக்கோ .பாட்டி தாத்தா வாற சத்தம் கேக்குது... நல்ல வேள நான் சாப்பிட்டிற்று வீட்டுக்கு போறன் நீ சாப்பாட்டு அலுவல முடிச்சிற்றே வீட்ட வா .
              
             வள்ளியம்மா....வள்ளியம்மா ....  இதோ வந்திற்றேங்க!..என்னங்க இதெல்லாம் ?...உங்களுக்குத்தான் உடம்புக்கு முடியாமல் இருக்குறீங்களே அதுக்குள்ள இவ்வளவு பாரத்த சுமக்கணுமா ?....அது ஒண்டும் இல்லடி உனக்குத்தான் பாரதியார் கவிதைகள் எண்றால் நிறையப் பிடிக்குமே அதனாலதான் இதையெல்லாம் உனக்காக வாங்கிக் கொண்டு வந்தன் .அப்ப உங்களுக்கு ஒண்டுமே வாங்க இல்லையா ?...எனக்கு என்னடி வேணும்?.. நீதான் எனக்கு எந்தக் குறையும் இல்லாமல் பாத்துக் கொள்ளுறியே அது போதாதா ?...அது சரி எங்க எங்கட  வீமன் ஐயா ?...வெளியில உலாத்தப் போயிற்றாறோ?....! இல்லங்க இண்டைக்கும் வழக்கம்  போல தான் அவர் உண்ணா விரதம் .

       அட வடுவா ராஸ்கோல் நான் ஒண்டு சொன்ன உடன கவலை   வந்திரும் அவருக்கு .நீ எத்தின தடவ பேசி இருப்ப?.. !..அதுக்கெல்லாம் வருத்தப் பட  மாட்டார். ஆனா நான் ஒண்டு சொன்னாப் போச்சு .மூஞ்சியத் தூக்கி வச்சுக்கொண்டு இருப்பார். வாட இங்க. கிட்ட வாடா!...அட இன்னும் கொஞ்சம் கிட்ட வாடா!....வெளியில போய்த் திரியிற போது உனக்கு யாராவது கல்லால அடிசுக் காயம் வந்திரக் கூடாது எண்டு தானே உன்னத் திட்டினன் .அதுக்குப் போய் இவ்வளவு கவலப் படுகிறியே!..இவ்வளவு பாசம் வச்சிருக்குற நீ நான் செத்தா என்னடா செய்வ?.....ம்ம் ...என்னங்க நீங்க திரும்பத் திரும்ப ஒரே சாவப் பத்தி பேசீற்றே  இருக்குறீங்க ?..உங்களுக்கு என்ன ஆச்சு ???....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்க இல்லைங்க .
                                                       
                                          வள்ளியம்மா அது ஒண்டும் இல்லடி. வயசு ஆக ஆக எல்லா மனுசருக்கும் இந்த நினைப்பு தன்னால வாரம் வந்திரும் போல அதுக்கு இல்லங்க!... நாம ஒண்டையே திரும்பத் திரும்ப சொன்னா அதுவே நடக்குறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் எண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க?...ஒ ....நீ அத நினைச்சுத்தான் பயப்படுறியா ?..ஆமாங்க எதுக்கும் இந்த வாரம் எங்க குல தெய்வத்துக்கு ஒரு அருச்சினை செய்திற்று வருவம் நீங்களும் வாங்க .இன்னும் உனக்கு இந்தக் கடவுள் மேல இருக்குற பக்தி கொஞ்சம் கூட குறையவே இல்லப் பாத்தியா ?....அது எப்புடியுங்க குறையும் ?...காலம் காலமா எங்கட  கஸ்ரத்தப் போக்குற கடவுள நம்பித்தானே எங்க காலமும் நல்ல முறையில ஓடிற்று இருக்குது  ம்ம்ம் ...ஆனா இப்பெல்லாம் சனங்கள் அப்புடி இல்லப் பாத்தியாடி ?..! ஆமாங்க நீங்க சொன்னதுதான் சரி .ஒரு காலத்தில கோயில் குளம் எண்டு தவம் கிடந்து ,நினச்சதெல்லாம் நடந்ததால காணிக்கை காணிக்கையா அள்ளி அள்ளிக் கொடுத்த சனங்கள் இப்பெல்லாம் வருவாயும் வசதி வாய்ப்புகளும் ஏன் மூளையும் கொஞ்சம் அளவுக்கு அதிகமானதால பழசை எல்லாம் மறந்து அனாவசியமா தெய்வத்தக்  குத்தம் சொல்லுறதையே ஒரு புழைப்பா நினைச்சு வாழ்ந்திற்று இருக்குதுகள். எனக்கென்னமோ இதெல்லாம் அழிவு காலத்துக்கு எண்டுதானுங்க  படுகுது!...

                     அது சரீடி..... காலம் காலமா அழிவுகள் வந்தாலும் கடவுள் நம்பிக்கையை யாரும் கைவிடாததாலதானேடி   இத்தின தலங்களும் வரலாற்றுக் கதைகளும் மனுஷன் நினைசுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமா உலகமெல்லாம் வியாபித்துக் கிடக்குது  .இதனால ஆருக்கு என்ன நட்டம் வந்திச்சு சொல்லு ?...! .எல்லாரும் ஏதோ ஒரு வழியில ஒரு சின்ன நன்மையைக் கூடவா அனுபவிக்கயில்ல?..அதுக்கு விட்டிற்று சனங்கள் கடவுள சில நாட்டில இருக்குற கொலைகார தலைவர்களை பாக்குரமாதிரி எல்லோடி  பாக்குதுகள் !...உண்ம தானுங்க அதையும் விட மோசமாத்தானுங்க இப்பெல்லாம் பாக்குதுகள்.சரி விடடி .  இப்ப ஒரு உதாராணத்துக்கு எனக்கு ஒரு ஆற்ற முடியாத கோவம் வந்தா நான் என்ன சொல்லுவன்?....  அவன் செயலுக்கு கடவுளாப் பாத்து ஒரு நல்ல தண்டணை கொடுப்பார். அப்ப அவனுக்கு புரியும். அவன் செய்த தவறு என்ன  எண்டு. வந்த கோவத்தை எல்லாம் இப்புடி நாங்க  தணிச்சதால தானே   எங்களால  ஒரு உயிருக்கும் எந்தத் தீங்கும்  நடக்காமல் போகுது .அந்த வழியில என்டாலும் இந்த மூட நம்பிக்கை நன்மையைத்  தானேடி செய்யுது ?..இதச் சொன்னாக் கூட  அந்தக் காலத்தில இருந்தவைக்கு ஒண்டும் தெரியாது எண்டுதான் சொல்லி எங்கட வாயப் பொத்த வைக்குதுகள் .இதுக்கு மேல என்னத்தத்தான் பேச முடியும்!..

இப்பெல்லாம் உண்மைக்கு மட்டும்தான் காலம் சரி இல்லடி .அதனாலதான் நல்லவங்கள் நாயை விடவும் கேவலமா கஸ்ரப் பட வேண்டி இருக்கு .சரி சரி இந்தா  மல்லிகைப் பூ வாங்கியந்து வச்சிருக்கிறன் நீ போய் மாலையைக் கட்டு முடிஞ்சா நாளைக்கும் உன்னோட நானும் கோயிலுக்கு வாறன் .இந்த நாரிப் பிடிப்பு வந்ததில இருந்து மனுசனுக்கு விடிஞ்சதும் எழும்பிக் குளிக்கக்  கஸ்ரமா இருக்குடி . இல்லை எண்டா உன்னோட நானும் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வருவன் .இத விட சந்தோசம் வேற என்னடி இருக்கு எங்களுக்கு .சரி விடுங்க உங்க நல்ல மனச  அந்த கடவுளுக்கும் தெரியும் .கவலப் படாதீங்க .இப்ப சாப்பிட வாங்க .வீமா நீயும் வாடா..... ஐயாவோட சேர்ந்து சாப்பிடலாம் இண்டைக்கு உனக்கு பிடிச்ச கறி... உங்க ஐயாதான் வாங்கி வந்தாரு சந்தோசத்தப் பாரு !...சிரித்தபடியே வள்ளியம்மை  சாப்பாடு பரிமாறிக் கொண்டாள் .
                                   தொடரும் ........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/08/2012

ஏக்கம் ....


ஆழிப் பேரலையே நீ 
அடங்கிப் போனதென்ன!
வாழிய நீ வாழிய என்று எம்மை 
வாழ்த்த இங்கு யார் வருவார்!

ஏழைக் குமரிகளோ நாம்
இருக்கும் இடம் முள் வேலி!
காலில் முள்ளுத் தைத்தால் 
கண்களிலே கண்ணீர் வரும்!

எம் தோழில் முள்ளுத் தைத்தும் 
துவண்டு விழாத ரோஜா மலர்கள் 
வாழும் தகுதி அற்று இங்கு நாம் 
வாழ்ந்தென்ன பயன் நீயே  சொல்?

ஊளைச் சதை பெருக எம் 
உள்ளம் தினமும்  கருக 
நாமும் படும் துயரை 
எந்நாளும் உரைப்பதெங்கே!

காலம் பனித்துளி போல் 
கரையும்  பொழுதினிலே 
வீணாய் எம் வயதும் 
விரைந்தே பெருகியதேன்!

பாழும் எம்  குடிசை 
பணிந்தே போவதனால் 
ஆளுக்கொரு சுகத்தை 
அடையத் துடிப்பாரிங்கே!

வாலை ஆட்டும் தெரு நாய்க்கும்
வசமாய் போகும் எம் வாழ்வு
இனி நீரில் கரைந்தால் என்ன!
நெருப்பில் எரிந்தால் என்ன!

கேள்விக் குறிகளுக்கே  வெறும்
கேலிக் குறியானவர்கள் எம்மை
நீயும் அணைக்காவிடில் இக் கடலை
நாம் நீந்திக் கடப்பதெப்படி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/07/2012

கவிஞர் .கி .பாரதிதாசன் கவிதைகளா இவைகள் !!!!.....


குறை ஏதும்  இன்றித் தமிழினை எழுதிட
நாம் அறிந்திட வேண்டிய தளம் இதுவே !
மனம் கவர் கவிதை எம் மனங்களில் நிறைய
ஒரு தரம்  வாரீர்  உறவுகளே!

இனியது இனியது என மனம் புகழ்ந்திடும்
இவர்களின் ஆக்கம் அதைக்  கண்டு!
வியந்த என் விழிகள் பகிர்ந்திடத் துடிக்கும்
காரணம் எதுவென உணர்ந்திடுவீர்!

சிறகுகள் விரித்துச்  சிந்தையும்  பறக்கும்
அத்தனை ஆனந்தம் நெஞ்சினிலே!
படர் கொடியென இங்குப்  படர்ந்திடும் கவிதையைச்
சுவைத்திட இன்பம் பெருகிடுமே!


நாம் எழுதிடும் கவிதையின் தரம் அதைக் கூட
உயர்த்திட முடியும்  படிப்பதனால்
நான் அறிந்ததை பலரும்  அறிந்திட வேண்டும்
இதுதான் இன்றைய நோக்கம்  உறவுகளே!

வணக்கம்!
கி .பாரதிதாசன்  ஐயா அவர்களின்  ஆக்கங்களைக்  கண்டு 
மகிழ்ந்த என் கண்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதன் 
மூலமாக பெரும்  மகிழ்ச்சி அடைகின்றது! வாழ்த்துக்கள்
தங்கள் கவிதைகளையும் சிறந்த ஆக்கங்களையும் அனைத்து 
வலைத்தள உறவுகளும் ,கண்டு  மகிழும் வாய்ப்புப் 
பெருகட்டும்! .மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு  .வாழ்க தமிழ்!
http://bharathidasanfrance.blogspot.ch/2012/10/blog-post_6.html
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/04/2012

மழைத் துளி சொட்டச் சொட்ட .....


மழைத் துளி சொட்டச் சொட்ட
மனதில் ஆசை முட்ட முட்ட
உனக்காகக்  கவிதை நூறு
அரங்கேறும் நேரம் இது
வளைந்தாடும் பெண்ணே உன்றன்
வளையோசை கேட்டால் என்ன!

தடுமாறும் நெஞ்சம் இங்கே
என்னைத் தாலாட்டும் கைகள் எங்கே?
மலைக் கோவில் மண்டபத்தில்
சிலையாகிப் போனதன்றோ!.
என் இசை கேட்டுத் தென்றல் காற்றாய்
எனக்குள்ளே வா வா பெண்ணே!

சுக ராகம் உன்னால்தானே
உருவாகும் எனக்குள் என்றும்
அறியாத பெண்ணா நீயும்
அடி போடி பைத்தியக்காரி
மனதுக்குள் தீயை மூட்டி
மறைவாக படகை ஒட்டி
விளையாட நினைக்கும் பெண்ணே
விடுவேனா உன்னை நானும்?

அழைக்காமல் வந்தால் என்ன?
அலைபோலே நீயும் அன்பே
இதமாக என்னைத் தீண்ட
இது போதும் சொர்க்கம் காண
வழி வேறு உண்டோ  சொல்லு?
என் அழகிய  செல்லக்  கண்ணே!

கவி வர்மன் ஏங்குகின்றேன்!
காதலைத்தான் வேண்டுகின்றேன்
ஒரு முத்தம் அதில் யுத்தம்
நித்தம் நித்தம்  தொடரட்டும்
அதில் சந்தம் தரும் ஆனந்தம் இது
போதுமடி பெண்ணே நீ வா வா என் முன்னே!

                                                            (  மழைத் துளி சொட்டச் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/03/2012

பூமித்தாய் இங்கு சிரிப்பாளா!.....


காலம் பார்த்து பயிர் செய்து
கவலையின்றி வாழ்ந்த இனம்
எந்நாளும் படும் துயரம் இங்கு
எவர்தான் அறிவார் செண்பகமே!...

பூமி வறண்டு போயாச்சு !....
பெய்த மழையும் ஒஞ்சாச்சு
இதில் சாமி குத்தம் ஏதுமில்லை
எங்கள் சங்கடத்தைப் பார்த்தாயா!....

வரப்பு மூடி வளரும் பயிர்
வாடி இங்கு  நிக்குறது அதற்க்கு
உரம் வாங்கப் போனால்
அடுப்பில் பூனை தூங்குகிறது!...

அடித்துக் கட்டி வேலை செய்து
அலுத்துப் போன உடம்பு ஆறும்  முன்னே
அடுத்த போகமும் வந்து விடும்
அப்போதும் எம் கை வெறுங் கைதானே!...

கொடுத்து வைத்தவன் கமக்காரன்
என்ற கோசம் அடங்கிப் போனதிப்போ
அடுத்த வேளை சோற்றுக்கும்
அவலப்படும் எங்களைப் பார் !!!!!......

பன்னக்காரன் பெண்டில்
பணியக் கிடந்து செத்தாளாம்..
பரியாரி பெண்டில்
புழுத்துக்  கிடந்து செத்தாளாம்!!!!!.......

எங்கள் கதையும்  இதுதானே!....
வேறென்ன சொல்வேன் செண்பகமே !....
உன்னைப் பெத்த அப்பனுக்கு
உழைக்க வேறு வழி என்னதான் இருக்கு!!!!.......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/02/2012

மலர்கொண்டு பூஜித்தாலும் மகிழ்வான நாள்தான் இன்று!...



அகிம்சையின் வழியில் வாங்கிய சுதந்திரம்
அடடா கிடக்குது காலுக்கடியினிலே¨!!!....
இதை வாங்கித் தந்த காந்தித் தாத்தா அழகாய்
சிரிக்கிறார் பார் ரூபாய் நோட்டினிலே !!!.....

இனி இவர் போலொரு மனிதரை இந்தப்
பாரதம் பெறுமோ எந்தநாளினிலும் !......
இவர் எழுதிய சத்திய சோதனை படித்தால்
இதயம் மூழ்கும் கண்நீரினிலே !...........

மனிதருள் சிறந்த மாணிக்கம் இவரை
மதித்தென்றும் உலகமே போற்றுகையில் இவர்
அருமையும் பெருமையும் தெரிந்த  மண்ணில்
அன்றாடம் நடக்கும் கூத்தினைப் பார் !!!!......

அரசியல் மோகம் அடிதடி இன்றி
எவருமே இங்கு ஆட்சி செய்யவில்லை
வறுமையின் சின்னம் அதைத் தகர்த்திட இங்கே
காந்திபோல் ஓர் குணம் எவர்க்கும் இல்லை !......

எளியதோர் தோற்றம் என்றுமே விரும்பிய
காந்தியின் உள்ளம் ஓர் தேன்கிண்ணம்
இதில் இனியவை மட்டும் பிறந்தன அதனால்
இவரைப் போற்றிட மனம் ஏங்கும் !..........

காந்தி பிறந்த நாள்  இன்றேனும் அந்தக்
கடவுள் சொன்னதைக் கேட்டு நட
நீ வாங்கிடும் லஞ்சப் பணத்தினில் கூட
வருவார் உன் கண் முன் எந்நாளும் !!!!........
ஏன் இவர் இப்படி உழைத்தாரோ அவை
எல்லாம் மக்கள் நன்மைக்கே !..........
யார் மதிக்கின்றார் இவர் கருத்தை
யாவையும் இன்று பொய்தானே !!!!.....

காந்தியின் உருவப் படம் அது  மட்டும்
அரச காரிய அறைகளில் தொங்குமடா
ஏன் இதை இங்கு  வைத்தனர் என்று
எவருமே சிந்திக்கத் தவறுகின்றார் !!!!.....

ஊழலில் சிறந்த நாடென்று இனியும்
உலகம் பழிக்கும் நிலை இருந்தால்
காந்தியின் பெயரும் மங்கிவிடும் அதனால்
களவுகள் என்றுமே செய்யாதே!.....
ஆயிரம் துன்பம் அனுபவித்தே அன்று
அடிமை விலங்கை உடைத்தெறிந்தார்
அந்த நீதிமான் வாங்கிய சுதந்திர பூமியை
இனியேனும் நின்மதியாக வாழவிடு!...

தாயிலும் சிறந்த பண்பினில் உயர்ந்த ஒரு
புண்ணிய ஜீவன் பிறந்த நாள் இதனை
பாரினில் உள்ள மக்கள் எல்லாம்
பகிர்ந்திட்டால் மனதினில் இன்பம் பொங்கிடுமே!!!... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/01/2012

கோவப்படாதே பெண்ணே நீ என்னைக் கண்டு ....



மாவைப் பிசைந்த கையாலே என்
மனதைப் பிசைந்து போனவளே  கொஞ்சம்
தேனை ஊற்றிப் பிசைந்தால் என்ன!......
உன் தீந்தமிழ்போல் நான் வளர!....

ஆவின் பாலுக்கிணையான  உன்
அன்பைத் தானே நான் கேட்டேன்
கோவப் பட்டுப் பார்க்காதே உன் முன்
குழந்தை போல நிற்கும் என்னை  !......

பாலர் பள்ளிக் கூடத்தில் நான்
படிக்கச் சென்ற முதல் நாள் போல்
ஏனோ உன்னைக் கண்டதுமே
எதுவும் பேச முடியவில்லை !!!!......

வீரம் கொண்ட பெண்ணே  உந்தன்
விருப்பம் என்ன சொல்லு நீயும்
காலை மாலை எந்நேரமும் இங்கு
காத்துக் கிடக்கின்றேன் உனக்காக!...

ஓலை ஒன்று எழுதி அதை
உன்னிடத்தில் நான் கொடுக்க
நீ கிழித்து எறியக் கண்டால் என்
நெஞ்சுக் குழியில் நீர் வற்றிப் போகும் !...

பின் ஆளை வைத்து அடிப்பாயோ
இல்லை அன்பைத் தந்து மகிழ்வாயோ என
ஏதும் இங்கு தெரியாமல் பெரும்
ஏக்கம் எனக்குள் உள்ளதெடி பெண்ணே !...

காரணம் நீ தமிழிச்சி உந்தன்
கண்ணில் தீப்பொறி கண்டாச்சு!..
ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எனக்கு நீதான் இளவரசி !!!!..........

மாலை மாற்றும் அந்நாளில்தான்
மண மகனைப் பார்க்கும் கூட்டம் !...
உன் தாய்வழி வம்சமும்  அறிந்தவன் நான்
அதனால் என்னைக் கண்டு முறைக்காதே!...

ஏழைப் பக்தன் உன்னையே எந்தன்
இடது புறத்தில் அமர்த்தி வைக்க
அந்தக் காலம் தொட்டு இன்று வரை
அழகிய கற்பனை சுமந்து வந்தேன் !...

இது வீணோ சொல்லடி என் தோழி
உன் விருப்பம் போல நான் நடப்பேன்
ஆணும் பெண்ணும் மணம் முடிப்பது
அன்பைப் பகிர்ந்து வாழ்வதற்கே !......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/30/2012

நேற்றைய பொழுது நினைவில் இல்லையே...


                                              ஞாபகசக்தியே உயிர்களின் சக்தி!..... 
                                                 
நேற்றைய பொழுது நினைவில் இல்லையே
இன்றைய பொழுதும் அரையும் குறையும்தான்
நாளைய பொழுது என்ன ஆகுமோ அதை
நினைத்தால் நெஞ்சில் பயமோ  !!!!...........

பார்த்துப் பழகுங்கள் உறவுகளே....
மனம் சிறைப் பட்டால் அதுவும் துயரே!...
இசை மீட்டிடத் துடிக்கும் வீணையின் நரம்பு
அறுந்தால் துன்பம் தாங்காது !......

நேற்றில்லை இன்றில்லை என்றுமே
மன நின்மதி வேண்டும் வாழ்விலே!..
நாம் ஏற்றிடும் துயரோ...  எந்நாளும்
இறுதியில் தரும் நோய் இதுதானே !....

வீக்க தூக்கம் பார்க்க வேண்டாம் நீ
விட்டுத் தள்ளு வரும் துயரை என்றும் 
ஏற்ற காலம் வரும் வரைக்கும் இதில்
எந்த நினைப்பும் உனக்கு வேண்டாம்!.....

போட்டியில் போகுது உலகமிங்கே
நீ எது சொன்னாலும் புரியப் போவதில்லை
உன்னை வாட்டிடும் செயலே அதிகமாகுமே
வருந்துவதால் இங்கு பயன் என்ன !.........

கூட்டிக் கழித்து நன்மை அறிவாய்
கொண்ட கொள்கை தாண்டி நீயும்
இதய சுகத்தில் நலனைக் காட்டு
இதை நீ தாண்டினால் சுடுகாடே !....

நாம் ஆட்டம் போடும் காலம் கொஞ்சம்
அடையும் இன்பம் அதிலும் கொஞ்சம்
வாட்டம் ஏன்தான் வாழ்வில் எமக்கு
வந்தவரைக்கும் அமைதி கொள்ளு !....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/29/2012

அபி நீ இன்னுமா தூங்கவில்லை !.....



கணனித் திரையில் முகம் புதைத்து
தினமும் காணும் காட்சி கண்ணுக்கு
இயமனாய் முடியுது பாரிங்கே !!!!......
இது தொடர்ந்தால் வாழ்க்கை என்னாகும் !.....

இளமை இருக்க முதியவர்போல்
இது என்ன கண்ணுக்கு கண்ணாடி!...
சிரமம்தானே வாழ்நாளில் இதைத்
தாங்கிச் செல்லும் சிறுவர்கழுக்கு !.....

முகத்தைப் பாரு வறண்ட தோற்றம்
முற்றிலும் கண்ணில் கருவளையம்!....
எதற்கும் ஒரு அளவு இருக்கு இது என்ன
இரவு பகலாய் கணணி முன்னே!...

அடக்க மறந்தால் பிள்ளைகளை
அடக்கி வைக்கும் பல நோய்கள்
குறுக்க குறுக்க பேசுகின்றாள் பார்!....
குறைகள் ஏதும் இல்லை என்று !!!!....

கூனி இருக்க முதுகு வலியும்  பெரும்
கொடைதான் பின்னே வேறேது !...
ஊதிப் பெருகும் உடல் குறைக்க
இவளை ஓட விடு தெருவினிலே !...

நாலு பேரு பார்க்கும் போது இதெல்லாம்
நல்லாய்த் தாண்டி இருக்கும் உனக்கு !...
வேற வேலை என்ன இருக்கு ............
வீட்டில் நடக்கும் கூத்தைப் பாரு !...

பாலும் தேனும் கலந்து முகத்தில்
பத்துப் போடு இந்த வரட்சி போக
ஆளப் பாரு அலங்கோலமாய்......!
அவளைக் கொஞ்சம் தூங்கப் பழக்கு !....

போற போக்கில் புத்தகங்கள்
பூச்சிகள்  உறங்கும் நல் மாடம் ஆகும்
ஆளுக்காளு கணணி இன்றி
நாட்டை ஆழ முடியாதென்றால்

தேடிப் பார்க்க நன் நூலதனை
என்ன தேவை இருக்கு கணணி இருக்க!!!..........
போற பொழுதும்  இதனில் போகும் இன்று
பிள்ளைகள் வளரும் முறையும் இதுதானே!!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உன்னைத் தேடிடும் கண்கள் இங்கே!....


நெஞ்சைத்  தொடும் இராகங்கள்
இவை கேட்டால் என்றும் மோகம்தான்
இன்னும் இன்னும் வேண்டும் என்று
இதயம் மகிழ்ந்து கேட்க்கும் இதையே!!....

தந்தாய் இன்ப வெள்ளத்தில்
தவழ்ந்தோம் நாமும் உன்னாலே
உந்தன் பாட்டே  எமக்கு யீவன்
என்றால் அதுவும்  மிகையாகாது !......

சின்னச் சின்ன மெட்டெடுத்து இசையில்
பெரும் சிகரம் என  நிற்கும் ஐயா
உன்னைக் காணும் ஆவல் எமக்கு
உள்ளத் திரையில் தினமும் ஓடுதிங்கே....

இந்தக் கங்கை நதியின் அடையாளம்
உன் கண்ணில் பட்டால் அது யோகம்
கல்லை முள்ளைத் தாண்டி வந்தும்
உன் காலைத் தொட்டால் அது போதும்!....

சொல்லுக்கிதமாய் மெட்டெடுத்து  மனம்
சொக்க வைக்கும் உன் திறனை என்றும்
வெல்ல இங்கே யாரால் முடியும் என
வியந்தே நிக்குது எம் மனமும் ஐயா!....

பையைப் பைய துயர் நீங்கும் உன்
பாட்டொலியைக்  கேட்டால் இங்கே
இந்த வரம் தந்த இறைவன் அவனை
இதயம் மகிழ்ந்து வணங்குகின்றோம்.....

இன்னும் ஜென்மம் பல நூறு
இணைந்தே வாழத் தமிழிசையோடும்
அள்ளிக் கொடுப்பாய் நல் வரமிங்கே
அதுவே போதும் எம் இறைவா வா!......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/28/2012

இதற்கொரு பதில் சொல் இறைவா !...

ஆணுக்குப் பெண்
சமம் என்று இங்கே
அழகாகத் தோன்றும்
தெய்வம்தான்  எங்கே!...

வீணுக்குப்  பகைமை
விளைகின்ற தேசம்
நாளுக்கு நாளிங்கே
முன்னேறும் போது!...

நீதிக்குத் துணையாய்
நீ இல்லை இங்கே
இந்தப்  பாதிப்புத்  தொடர்ந்தால்
உன்னைப் பாராட்டுவதெங்கே!...

கோதி பூத் தலையில்
குடிகொண்டும் என்ன
மன பாதிப்பு எமக்கு
மலை போல இருக்க!!!!.....

சோடித்த பொம்மை அவள்
சிரிக்கின்ற போது துயர்
ஓடித்தான் ஒழியும்
இதுதானே பெண்மை !.....

கூடித்தான் இகழ்வார்
கூட்டத்திற்கு அழகாய்
ஏன் எம்மைப் படைத்தாய்
பெண் என்று !!!!............

நாலுக்குள் இரண்டு என
நவில்கின்றபோதும் பலர்
காலுக்குள் சிக்கித் தவிக்கின்ற
மலர்போல் அவள் இங்கே!...

வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
இந்த ஜாதிக்குள் பேதம்
அது அகலாது என்றால்
வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/27/2012

சிறகொடித்த பறவை போல என்றும்....


ஊரு விட்டு ஊரு வந்து 
உருப்படியாய் ஒரு வேலை செய்து 
மாடி வீடு கட்டணுமாம் அவன் 
மனசுக்குள்ள போட்ட கணக்கு இது!....

யாரு பெத்த பிள்ளையோ ஒரு 
நாதியற்று அலைகிறான் என 
வேவு பார்க்கும் நிலையில் இங்கே 
வேகுது பார் அவன் உசிரு !..............

கோடி முறை சொன்னாலும் கொண்ட 
கோலம் அதில் மாற்றம் இன்றி 
தேடி இங்கே வருகின்றாரே!......
இவர்கள் திருந்துவது எக்காலம் !....

காடு வெட்டிப் பிழைத்தாலும் 
கவலை இன்றி வாழலாம் 
நம்ம நாடு போலதான் வருமா இங்கு 
நாயாய் பேயாய் அலைகின்றோம்!...

ஓலைக் குடிசை நடுவினிலும் 
உறக்கம் நெஞ்சைத் தழுவுமடா ...
அதற்கும் நாதியற்றுத் தானே நாமும் 
நடுத்தெருவில் நிற்கின்றோம் ..........

ஓடி அலுத்த கால்களும்தான்  
உள்ள பலத்தை இழந்ததிங்கே 
குளிர் நாடு தந்த பரிசு இதனால்
குனிய நிமிர முடியவில்லை.....

பாதி வயசு முடிவதற்குள் நல்ல 
பாட்டன் போல ஒரு தோற்றம் 
இதில் காதில் பூவை வைக்கும் கூட்டம் 
கண்டு தினமும்  மனதில் வாட்டம் !...

ஆறுதலைத்  தேடிப்போனால் 
யார் வருவார் எம் எதிரினிலே 
வேறு வழி இல்லையட தம்பி 
விடியும் வரை இந்தச்  சுவர்கள் 
நடுவிநிலேதான் எம்  வாழ்க்கை!!!!...........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/24/2012

விரைந்து வா நீ அது போதும் .



இரவைப் பகலாக்கினாய்
பகலை இரவாக்கினாய் என்
உணர்வில் கலந்தவளே நீ இன்று
என்னை என்ன செய்யப் போகிறாய் !....

மனதைக் குடைந்து மறுபடியும்
உன்னை நான் தேட என்னுள்
உறைந்து கிடந்து கொஞ்சம்
சந்தம் தர நீ மறுக்க நான் ஏங்கவோ!....

சொல்லில் பொருளில் மேலும்
மேலும் பிழைகள் கண்டு நான்
உன்னைத் திருத்த நீ என்னைத் திருத்த
நெஞ்சம் அலை மோதும் வலி தாங்கவோ...

சொன்னால் புரியாது நான்
உன்னால் படும் பாடு !!........
பின்னால் தொடராதே என நானே சொல்லி
உன்னை நானே அழைக்கின்றேன் !!!............

தேனும் பாலும் தெவிட்டவில்லை உன்னை
எந்நாளும் அணைக்கத் துடிக்கின்றேன் !...
இந்த வானும் மண்ணும் கூட இங்கே
இதற்காக அலைவதைப் பார்க்கின்றேன்!...

இனி போதும்  என நான் அடங்க மாட்டேன்
இளம் பூவே என்னை வாட்டாதே தினம்
நீயும் நானும் சேர்ந்திருந்தால் அதில்
திரளும் இன்பம் பல கோடிபெறும் !..........

நாம்  வாழும்போதே இந்த சுகம்
வளமாய் அமைய எந்நாளும்
இங்கு காணும் காட்சி அத்தனையும்
என் கவிதைப்  பெண்ணே   நீயாக வேண்டும் !!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2012

கண் எனத் தகும் எழுத்துக்களா இவைகள் !.......


தூங்காமல் விழித்திருந்து தினமும் 
தூசி தட்டி பல நினைவுகளை 
ஏன்தான் இங்கு எழுதுகின்றார்கள்  
எல்லாமே பயன்தரும் செய்தி என்றோ !....

நாம் பாடும் பாட்டு அது ஒரு 
நால்வகைக் கூற்று பாரிதை!!!!........
கண்டதும் கேட்டதும் கற்றதும் 
உணர்ந்து நாம் பெற்றதும் 

எத்தனைக் கெத்தனை உண்மைகள் 
இத்தனை வகையாம் எழுத்தினிலே !....
நல்லதை மட்டும் நாம் நிறைப்போம் 
அதையே நலன்பெற இங்கே எடுத்துரைப்போம்!...

சொன்னவர் பெயரும் நிலைத்திடவே 
மிகு "சுகம் தரும்" செய்திகள் பகிர்ந்திடுவோம் 
இல்லையேல் துறவு நாம் பூண்டிடுவோம் 
இனியவை தொடர்ந்திட வாழ்துரைப்போம்!...

இல்லை ஓர் குறை இங்கு உலகினிலே 
இருக்கவே இருக்கிறது பல நன்னூல்கள் 
உள்ளதைச் சொன்னால்  இவை போதும் 
மனிதன் உருப்படியாக இங்கு வாழ்வதற்கு !...

என்னமோ போங்க உறவுகளே 
எமக்கும் உள்ளது  பற்றுதான் தமிழ்மீது 
இல்லையேல் ஏன் இங்கு கிறுக்குகிறோம்!...
எம்மவர் படித்துத்  திட்டிடவா !!!!.......

தொல்லைகள் நீங்கிட பாடுபடுவோம் எதிலும் 
ஒரு தோழமையோடு செய்தி பகிர்வோம் ......
நல்லதையே என்றும் நினைத்திடுவோம் 
நாம் தமிழர் என்றே தினம் வாழ்ந்திடுவோம்!....

பொல்லாப்பு இங்கு எமக்கெதற்கு!!!!.......
புவி போற்றும் நல் வாழ்வு கூட இருக்கயிலே! ..
எல்லோரும் மகிழும் நிலை வேண்டும் 
இதற்காக எழுதுங்கள் அன்பு உறவுகளே 

கண்டதைக் கேட்டதைக்  கற்றதை மற்றதை 
அற்புதம் அற்புதம் என மனம் மகிழ்ந்து 
உங்களைப்  பிறரும்  வாழ்த்திட போற்றிட எழுதுங்கள் 
எழுதிடும் எழுத்தினைக் கண் என மதித்திங்கு..........!

                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2012

தேடு உனக்குள்ளேதான் அது ....



மருதாணி போடாமலே
சிவக்கின்றதே கன்னம்
ஒரு தாவணி போட்ட
அந்நாள் முதல் !!!!..........

எழிலாய் நடை பயிலக் கற்றுக்கொண்டாள்
இதமாய் பேசும் அழகைப் பெற்றாள்
ஒரு தாய் உணர்த்தும் செயலைக் கூட
எளிதில் புரியும் ஆற்றல் பெற்றாள் !....

இதுதான் பருவ மாற்றம் என்றோ ....
எனக்கும் வியப்பை ஊட்டுதிங்கே !!!...
பூனையும்  நாயும் ஏனைய யீவன்களும்
தாய்மை அடைந்தால் தங்கப் பதுமை தானோ !!!....

யார் எவர் இதனைக்
கற்றுக் கொடுத்தார்!....
யாவையும் புதுமை இறைவன்
படைப்பில் என்றும் !!!!!..............

தீது நாம் பழித்தல் இங்கே  
தெய்வம் இல்லை என்றால்
இது எதுவும் நிகழாது என
கோடிடு மனதில் நீயும்

கொண்டு வந்த செல்வம் என்ன !!....
நாம் கொண்டு போகும் செல்வம் என்ன !..
ஒன்றும் இல்லை உலகினிலே
உயிர்கள் மீது காட்டும்  அன்பைத் தவிர ...

நாம் வந்ததற்கு மூன்று சாட்சி
எம்மை வாழ வைக்கும் மன சாட்சி
என்றும் பொழுதுகள் மகிழ்வாய் இருக்க
இனியவை  பேசு நீ அது போதும் !!..........

நொந்தவர் மனதை நோகடிக்கும் மாபெரும் 
நோக்கம் இவை என்றுமே தவறென்று
வந்தவர் யாவரும் அறிந்திருந்தால்
வரும் துயர் எல்லாம் நீங்கிடுமே!!..........

சிந்தனை செய் இதை நல் மனமே
தீங்கில்லை இதனால் சுகம் வருமே!...
நிந்தனை வேண்டீர் உலகினிலே
நிஜம் இல்லை எதுவும் என்ற பின்பும் ....

சண்டைகள் வேண்டாம் எமக்கென்றும்
சமத்துவம் இருந்தால் அது போதும் என
என்றிதனை  மனிதன் உணர்கின்றானோ
அன்றுதான் உலகம் அமைதி பெறும் ....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/19/2012

அன்று போல் என்றுமே ....


என்னைப் பெத்த ராசா உனக்கு
நான் எழுதும் கவிதைப் பூக்கள் இதோ!....
இன்னும் நூறு ஜென்மம் இங்கே
உனக்கே மகளாய் பிறக்க வேண்டும் .

கண்ணுக்குள்ளே எம்மை  வைத்துக்
காத்த உன்னைக் கலங்க வைக்க
என்ன பாவம் செய்தேனோ
எனக்கும் ஒன்றும் புரியவில்லை!!!.....

பொன்னைப்போலே என்னை மதித்தாய்
பூச்சூடித்தானே நீயும் மகிழ்ந்தாய்
என் அன்னை இல்லாக் குறையைக் களைந்த
ஐயா நீயும் ஏன் நடை பிணம் ஆனாய்!!!........:(

கண்ணில்லாத உலகம் இதில் உன்
கண்மணி நானும் தனித்தேன் என்றோ
அள்ளித் துயரை நெஞ்சில் நிறைத்தாய்
ஐயோ பாவம்  நான் என்ன செய்வேன் !!!....

பெண்ணாய்ப்  பிறந்த பாவம் இதற்க்கு
இரு பொழுதும் கண்ணில் கண்ணீர் எதற்கு
உன்னைப் பிரிந்தால் இந்த உலகை வெறுக்கும்
என்னை விட்டுப் போக நினைக்காதே!!!....:(

ஒற்றையடிப் பாதையிலே உன்
பின்னால் தொடரும் இன்பம் போதும்
நீ கற்றுத் தந்த நன்னெறிகள் எனக்கு
காலம் முழுவதும் கை கொடுக்கும்!...

பிச்சை எடுத்துப் பிளைத்தாலும்
பெண் பெருமையாக வாழ்ந்திடலாம்
இச்சைக் கடிமையான மனிதர்கள்
உடன் இருந்தால் அதுவும் கறைதானே!...

விட்டுத் தள்ளு துயர்களை என்றும்
வீண் வருத்தம் உடலுக்காகாது
எம்மைப் பெற்று  வளர்த்த  தந்தை நீ அழுதால்
இந்தப் பேதை மனம் அதைத் தாங்காது !!!....

வெட்டி முறிந்து வேலை செய்து
எம் விருப்பம் போல நீ நடந்தாய்
அந்தக் கெட்டித்தனத்தில் விளைந்த முத்து
என்றும் கீழோர் தயவை நினைக்காது .....

அச்சம் ஏனோ ஐயா உனக்கு!!!............
ஆண்டவன் எம்  பக்கம் இருக்கையிலே
இடர்களைத்  துச்சமாக நினைத்தால் போதும்
கார் இருளைக் கடக்கவும் நல் வழி பிறக்கும்!....

நீ தச்சுத் தச்சு போட்ட சட்டை
தாறு மாறாய்க் கிழிந்தாலும் அவைகளை
என் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்தேன்
உன் பாசம் விட்டுப் போகாமல் !.........

இனியும் என்னைத் தட்டிக் கழித்து மேலே செல்ல
உனக்குக்  கெட்டித்தனமும் உண்டோ சொல் .......
தலையில் குட்டி வளர்த்த செல்லக் கைகள் பற்றி
நானும் கூட வருவேன் உன் பின்னாலே !!!.........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/14/2012

சந்தம் இது சந்தம் என .....



சந்தம் இது சந்தம் என
எல்லோரும் கொண்டாட வந்தேன்
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு

சிந்தும் நதி எங்கே?
கடன் வாங்கும் என் தோழி
சொன்னார் ஒரு கேலி
இதில் உண்மை என்னடி என் தோழி?
                                        (சந்தம் இது சந்தம் )
கங்கைக் கரை ஓரம்
நீ வந்தால் அது  போதும்
இன்பம் என்றும்  பொங்கும்
தன்னாலே !
விண்ணும் உடன் கை தட்டும்
கண்ணில் அங்கே நீர் சொட்டும்
நான் சொல்லும் கவி கேட்டே
மனம் கூத்தாடும்

 உன்னில் என்னைக் காண
அடி என்னில் உன்னைக் காண
சொல்லில் புது அர்த்தம்
என்றும் தனியாகும்!
புல்லுக்கிறைத்தாலும்
என்னை நெல்லுக்கிறைத்தாலும்
மண்ணில் என்றும் பயன் நான்
தருவேனே
                               
பன்னீர் மழை தூவும்
பொன் மேகம் என்னைத் தாங்கும்
இவள் இல்லை எனில் இங்கே
உயிர் வாடும் !
அல்லிக்  கொடியே நீ
என்னைத் தொடும் போது
என்னுள் சுக ராகம்
என்றும் அலை மோதும்!

கன்னித் தமிழ் இன்பம்
என் சொல்லில் குறைவா?
அது இல்லை எனில் இங்கே
நீ வர வேண்டும்
உன்னைத் தொழ நான்
நீ என்னுள் உறைவாய்
எங்கும்  கண்ணுக்களகாய்
மனம் பூத்தூவும்!
                          (சந்தம் இது சந்தம் என)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/10/2012

பாரதியார் கவிதைகள் !........

அன்னையின் திருவடி
போற்றிடும் மகாகவி
உன் எழிற்   கவிதையே
என்றும்  எம்  உயிராகும்!!!!.......

வன்முறை ஒழியவும்
வளம் பல பெருகவும்
பொன் எழுத்தாலே
புகுத்தினாய் நல் அறிவதை!!.....

இன்னமும் பாடிட
இனிக்குதே தேன்  என !!!...


என்ன உன் ஞானம் !!!!...........
எழில் வனம் தோற்றிடும் ........

செந்தமிழ் காவலா
தீந்தமிழ் உன்னதா !!!......
கொண்டதோர்  தாகம் அதனால்
கொட்டியதே கவிதைத் தேன் மழை¨.....

வென்றது வென்றது இன்றுமே
உன் பெயர் சொல்லியே
மகுடம் ஏற்குது எம் தமிழ்
கவிதைகள் கண்டீரோ!!!...

வெண் குடை நிழலில்
உன் சிலை வலம் வரும்
இன்னொரு நாளைக் கண்டிடவே
ஏங்குது எம் மனம் மகாகவியே!......

சாதிகள் ஒன்றென நீ முழங்க அன்று
வந்தது  சங்கடம் உனக்கு பல நூறு!...
ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும்
மத யானைபோல் துணிந்தங்கு நின்றாயே!!!..

மா தவம் செய்தோம் மாந்தரும் நாம்
மண்ணினில் சுதந்திரம் பெற்றிடவே
நீதியை நீ அன்று  உரைத்ததனால்
நீங்கியதே பல  அடிமை விலங்குகள் இங்கே!!!........

ஏழை எளிய மக்களுக்கும் உன்
உழைப்பால் நன்மை நீ தந்தாய்
நாளைய சந்ததி நல் வளம் பெறவே
எந்நாளும் கவிதை நீ வரைந்தாய் !!....

அதிலும் பாமர மக்களும் பயன்பெறவே
உன் பாட்டினில் புதுமையை நீ படைத்தாய்!...
அந்தத் தீவிர முயற்சியின் பயன் இன்று
திரளுது கடலலைபோல் புதுக் கவிதைகள் பார்!!....


ஆயிரம் மலர்கள் தூவியே உந்தன்
காலடியினைத்   தொழ நாம் விரும்புகின்றோம்..
எம் தேவைகள் அறிந்த மானிடனே உயர்
தீந்தமிழால் உன்னைப் பாடுகின்றோம்!!.......

வாடிய பயிர்கழும்  உயிர்த்தெழும் இன்று
வான்மழைபோல் உன் நினைவதனால்
கூடியே கும்மி கொட்டிடுவோம் எங்கள்
குலமது தழைக்க வழி வகுதவனே உனை நினைந்து!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/09/2012

பொன்னான வாழ்வு மண்ணாகி போமா!......

சிறகொடிந்த பறவைபோல
விழுந்து கிடக்கிறோம் நாம்
சிந்துகின்ற கண்ணீரில்தான்
தினம் குளிக்கிறோம் !!!!........

உறவிருந்தும் திரும்பிப் பார்க்க
நேரம் இல்லையே !!!............
உழைக்கும் வர்க்கம் எங்களுக்கே
வாழ்வில் உயர முடியவில்லையே !!....

பணம் படுத்தும் பாடு இங்கே
ரொம்பத் தொல்லையே !......
படுத்து உறங்க நேரம் தேடி 
மனம் அலுத்துப் போனதே !!........

பொருட்கள் விலை குறைந்தால் ஒளிய
இனி இங்கு வாழ்வு இல்லையே !!............
இந்தப் புரிதலினால் மனித வாழ்க்கை
தினமும் வெறுத்துப் போகுதே !!............

அடுத்து வரும் சந்ததியைக்
காத்துக்கொள்ளவே -கொஞ்சம்
வரும் பணத்தில் சேமித்து
காப்புறுதி செய்து கொள்வோமே !....

பணம் இருப்போர் தைரியமாய்
வீண்  செலவு செய்கிறார்!!!.........
இவர் படுக்கையிலே வீழ்ந்துவிட்டால்
குடும்பம் உய்யுமா ???................!!!


கடுகளவு சேமிப்பும் கை கொடுக்குமே !..
பின் கடவுள் இல்லை என்றெங்கும்
அவல நிலை நீங்குமே!..... ஆதலால்
ஒரு கணமேனும் இதை சிந்தியுங்கள் ....                                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/08/2012

யாருக்குத்தான் இங்கே துன்பம் இல்லை !.....


துன்பம் துன்பம் துன்பம் என்றே
துவண்டு விழுதல் நன்றோ சொல்லு !...
இன்பமான வாழ்வு அதுவும் உந்தன்
மனதில்தான் உண்டெனக் கொள்ளு !....

வம்பு தும்பு பண்ணாமல் இடர்
வாட்டும் செயலை செய்யாமல்
என்றும் வாழக் கற்றுக் கொண்டால்
இதையம் அமைதி கொள்ளும் அதனால்!...

பட்ட துன்பம் மறந்து வாழ
பகவான் நினைவே பெரிதென எண்ணி
பத்து நிமிடம் தியானம் செய்தால்
மனம் பஞ்சாய் பறப்பதை உணர்வீரே !...

கெட்ட எண்ணம் நற் குடி கெடுக்கும்
கீழோர் செயலை நினைக்காதே ........
திட்டம் போட்டு தவறு இழைத்தால்
தீமை என்றும் விலகாதே !!..............

நல்ல மனதிற்கு சோதனைகள்
எந்நாளும் வருவது துயர்தானே !...
இந்த இன்னல் தீர்க்கும் வழிகளில் ஒன்று
இன்னும் இருளில் கிடப்பவரை நினைப்பதுவே!....

                                                  சோமாலியா !!!!!!...............

                                       
                                                  இந்தியா !!!!!.............

                                             
                                               இலங்கை !!!!............

இங்கே ஆடம்பரமாய் வாழ முடியவில்லை
அழகு சேர்க்க மேலும் வழிகள் இல்லை
தேடிச் சென்ற இன்பம் கிட்டவில்லை
தீதே இந்த வாழ்க்கை என்றால்

உணவு தண்ணி இல்லாமல்
ஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....

ஒரு கச்சைத் துணியைக் கட்டிக் கொண்டும்
கஞ்சி கிடைத்தால் போதும் என்றே நல்ல
நெஞ்சம் இருந்தால் அந்த நினைப்புத் தோன்றும்
அதுவும் இல்லை என்றால் உன் துன்பம் என்றும் வீணே!..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2012

.பின்தொடர் வாழ்வு இனிக்கும்!.......


யாசிக்கும் கரங்களை நேசிக்க மறந்து
நாம் சுவாசிக்கும் காற்றிலே இங்கு
இருந்தென்ன  பயனோ !..........என
யோசிக்க வைக்கும் மனிதர்கள் இவர்கள் !...

கால் பட்ட மண்ணும் பொன்னாகும்
கை தொட்டால் துன்பம் கரைந்தோடும்
தேசத்தின் நன்மை தன் நன்மை என்றே
பெரும் தியாகத்தால் வாழ்வில் உயர்ந்தாரே!...

அறிவுக்கும் அன்புக்கும் குறைவற்ற மேதைகள்
அகங்காரம் இல்லாத ஆனந்த ஜோதிகள்  இவர்கள்
உருவத்தை மனதிலே   நிறுத்தி வைத்தாலே
உள்ளத்தில் என்றும் தெளிவு பிறக்கும் !...........

ஆங்காரம் கொண்ட சில மனிதர்களுக்கும்
வண்டின் ரீங்காரம் கூட தாங்காது என்றும்!....
நாம் வாழும் வாழ்க்கைப் பாதைகள் இங்கே
நலமாக அமைய பெரும் துணை வேண்டும் எனவே

தொடருங்கள் இனிய  நல் இதயங்களே
தூயவர் இவர்கள் பாதச் சுவடுகளை
கொடிபோல படரும் அறியாமை நீங்கும்
கொடை  வள்ளல் ஆகும் குணம் தன்னால் வளரும்!...

கண்களில் பட்ட தெய்வங்கள் இவர்கள்
கருணைக்குக் கடலென சொன்னாலும் தகும்!....
விண் போற்ற இங்கே வாழ்ந்தாலும் கூட
வீணாக புகழுக்கு கொடி ஏந்தவில்லை !!!!.....

பிறர் வாழ்த்த வாழும்
குணம் ஒன்று இருந்தால் 
பிறவிக்குப் பெருமை
தன்னாலே சேரும் !.......

மிதம் மிஞ்சும் கர்வம்
அழிவுக்கே அர்த்தம்
இதை ஏற்றுக்  கொண்டால்
வாழ்க்கை இதமாகத்  தோன்றும் !....

நிலையில்லா செல்வம்
தினந்தோறும் தேடி
அழியாது இனியும் நாம்
மனிதராய் வாழவே  இவர்களைத்தான்!!!......
                                                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/06/2012

பூந்தளிர்த் தென்றல்க் காற்றே...

பூந்தளிர்த் தென்றல்  காற்றே
பூ வாடை வீசும் பெண்ணே!
பாவாடைத்  தாவணியில் வந்ததேனோ!
குளிர் நீரோடை போல நெஞ்சைத்
தொட்டுச் சென்றதேனோ!

மானாட மயிலும் ஆட
மனம் போல நீயும் ஆட -இந்தக்
குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கிறதா?
உன்றன்  கொலுசும்தான் தாளம் போடப் பார்க்கிறதா?

முல்லைப் பூப்போல் என்றும்  சிரிக்கின்றாய்
முக அழகாலென்னை வதைக்கின்றாய் !..
பெண்ணே என்னைக் கொன்றுவிடு
இல்லை என்றால் இங்கே வந்துவிடு ......

என் எண்ணம் எங்கும் உன் விம்பமெடி
நான் ஏழை ஆனேன் என் பைங்கிளியே ...
இரு கன்னம் தொட்டு நான் மகிழ
ஒளி  மின்னல் பட்டுத் தெறிக்காதோ!

சின்னச் சின்னக் கதை பேசி
சிணுங்கும் உன்னை நான் அணைக்க
வெட்கப்பட்டு செந்தாமரைபோல்
இரு விழிகள் மூடி என்றன்
தோழில் வந்து சாய்ந்து விடு...

என் அத்தை பெத்த ரத்தினமே!
அழகு மயில் சித்திரமே !
ஒத்தையில உன் நினைப்பால்
ஒதுங்கி நிக்குதடி நித்திரைதான்.....

                                              (பூந்தளிர்த் தென்றல்....) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/01/2012

அணையைத் தாண்டுது துயரம் இங்கே



அணையைத் தாண்டுது                           
துயரம் இங்கே அம்மா வருவாளா!.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயா.... நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயா...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக!!!....

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அறியாமை அழித்திடும் நல் உயிரை....



இருப்பதை எல்லாம் எடுத்துக்கொள்
பெரும் இன்னலைத் தந்து வதைத்துக்கொள்
உருப்படியானது மனிதனுக்கு இவ்
உலகினில் என்றுமே தன் மானமடா!!....

அடுக்கிடும் நகையில் அர்த்தமில்லை...
அழகது என்றும் நிலைப்பதில்லை
எமைத் திடுக்கிட வைக்கும் உணர்வு அது
தீயவர் என்ற பெரும் பளிச்சொல்லே!!.......

குன்றினில் இட்ட தீயாக மனம்
குமுறிடும்  என்றுமே  தணியாமல்
கன்றையும் ஒதுக்கும் தாயுள்ளம்
கசிந்திட்ட   வதந் "தீ" அதனாலே!!!.......

கொன்றிடும் துயரது போக்கிடவே
தற் கொலையிலும் ஆவல் பெருகிடுமே
நன்றிதோ நமக்கு அறியாமை !!........
நல்லவர் உயிரைப் பறிக்கும் என்றால்!....

சிந்தை செய் மனமே எந்நாளும்
சிறப்புற நல் வார்த்தை பேசிடவே
கண்டதை வைத்தும்  வெறும் கற்பனையால்
களவுற எதையும் உரைக்காதே !!!.................

நொந்துதான் போவார் நல்லவர் இங்கே
வார்த்தை அம்புகள் கீறிய வடு அதனால்
குந்தகம் அற்ற செயல்த் திறன் கொண்டு
கண்டுகொள் உண்மை அது என்னவென்று!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.