8/20/2012

வலைச்சரம் தரும் வரம் எதுவோ!..

இலைமறை காய்போல்  எங்கோ
தழைத்திடும் ஆக்கமும் இங்கே
வளம்பெற வாழ்த்திடும் நல்
உறவுகள் தரும் விருதுகளும்
கருத்துரை மழைகளும்
நற்கவனமும் அன்பும் பெருகிட பெருகிட
புது சந்தங்கள் நெஞ்சில் வந்தாடுதே!....
இந்த சொந்தங்கள் வேண்டும் எந்நாளுமே
வளர் சிந்தையைத்  தூண்டும் பொன் போலிதே!..
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க

செந்தமிழ் ஊற்றினில்  நாம் மிதப்போம்
பல சிந்துகள் பாடியே தமிழ் வளர்ப்போம்
அன்பெனும் சோலைக்குள் சாலை அமைத்து
என்றுமே சேர்ந்திங்கு நாமிருப்போம்!.....


சந்தணக் காற்றாய்  மணம் பரப்பும்
சங்கதி எல்லாம் நாம் உரைப்போம்
வந்திடும் துயரைத் தீர்த்திடுவோம் வலைத்தள
சொந்தங்கள் என்றே எமை நாம் நினைப்போம்!...

டிஸ்கி :வலைச்சரத்தில் தினந்தோறும் அறிமுகமாகும் 
                அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் 
                இதுவரை அதில் ஆசிரியப்பணியை நிகழ்த்தி பலரையும் 
                சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்த சகல 
                வலைத்தள சொந்தங்களுக்கும் என் நன்றியையும் மனம் 
                நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் நான் மிகவும் 
                மகிழ்ச்சியடைகின்றேன்.....
                                             
                                    எனக்கும் விருது தந்து மகிழ்வித்தமைக்கு நான் 
என் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்  .
                 
                 
                                             முனைவர் இரா .குணசீலன்

                                         
                                             திரு .நிலாவன்பன்
                                           
                                           
                                             திருமதி .லக்ஸ்மி அம்மா

                                           
                                                திரு .வை .கோபாலகிருஸ்ணன் ஐயா

                                               
இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
 நன்றிகள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி உறவுகளே
உங்கள் வரவுக்கும் இனிய நற்கருத்துக்களுக்கும் .

                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/16/2012

கொன்றால் தீருமோ உயர் சாதி வெறி!....



கொடியிடை நெளிந்தாட
ஒரு நொடிதனில் மனம் அலை பாய
இது என்ன மோகம்!............
இரு விழிகளின் தாபம்!!!.....

அவளில்லையேல் இங்கு நான் இல்லை
நான் இல்லையேல் அங்கு அவள் இல்லை என
இரு மனங்களும் சதிராட அந்த
இறைவனும் படைத்தானே!.............

இது என்ன இறைவனின்  தவறா!...
இல்லை இயற்கையின் தவறா!...
உலகமே மயங்குது விடை தெரியாமல் இதில்
உனக்கென்ன கோவம் ஏதும் அறியாமல்!...

தலைகளைக் கொய்திடும்  மனிதனே
உன் தவறினை ஒரு கணம் நினையாயோ!!....
பிற உயிர்களை வதைத்திட நினைப்பவனே
அதன் அருமையும் பெருமையும் அறிவாயோ!...

இன வெறி மத வெறி கொண்டலையும்
உனக்கிங்கு அன்பு கிடையாது
விழிகளில் ஓடும் நீராலும் உன் மனம் அது
இளகிடும் என்பதும் பெரும் தவறாகும் !!!.....

உனக்கென வந்து பிறந்தாளே
உன் உதிரத்தில் உடலை  வளர்த்தாளே
எதற்கென நீயும் நினைத்தாயோ
இன்னலைத் தந்து உயிர் பறிப்பவனே!....

இரு மனங்களை மனங்கள் ஆதரித்தால்
இயற்கையும் அதற்க்கு வழி விடுமே
பிணம் தின்னும் ஆசை உனக்கெதற்கு
மனிதன் பிறப்பது என்பதே இங்கு வாழ்வதற்கு.

சாதிகள் இரண்டேதான் இங்கிருக்கு
உன் சங்கடம் எல்லாம் அயலவரே
யார் எவர் என்ன நினைப்பாரோ என
ஜாதகம்  பார்த்து நீ இனியும் அழியாதே!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/14/2012

ஜெயஹிந்த்!......


வாழ்க்கை என்னும் படகினை
வளமாய் ஓட்டிச் சென்றிட
நம்  நாட்டின் சுதந்திரம் என்பது
நலமாய் இருத்தல் வேண்டுமே !...

கூட்டம் போட்டு தினம் தினம்
கொள்ளை அடிக்கும் அரசியல்
நாட்டம் மிகுந்து போனால் அங்கு
நாட்டின் வளங்கள் செளிக்குமோ!....

பண்டைக் காலம் முதற் தொட்டு
படை எடுக்கும் வரலாறு அது
இன்றும் தொடர்ந்து வந்தாலே
நாடு இரண்டுங் கெட்டான் ஆகாதா!...

சொந்த மண்ணில் அடிமைகளாய்
சுறணை கெட்டு வாழ்வதற்கு
எந்த உயிரும் விரும்பாதே
இந்த நிலையது முதல் மாறாதா!!!....

லஞ்ச ஊழல் செய்வோரும்
சுய லாபம் கருதி வாழ்வோரும்
எந்த அரச தொழிலிலும் இனி
இருக்கும் பதவி இழந்தால்தான்
அன்று பெற்ற சுதந்திரம் இனி
அழகாய் மலரும் இந்நாளில்
துயர் வென்று பகைமை தீர்ந்தொரு
சுமூக நிலைமை தோன்றட்டும்

பஞ்சம் பட்டினி என்பதே ஒரு
பழைய கதையாய் போகட்டும்
இனி எஞ்சி உள்ள யீவன்களுக்கு செல்வம்
இரண்டு மடங்காய் பெருகட்டும் !.......

சட்டம் ஒழுங்கு நாட்டினிலே
சமத்துவமாய் தொடரட்டும்
குற்றம் குறைகள் தவிர்த்தே நல்ல
குடும்பம் போல நாடு தழைக்கட்டும்!....

பாரத மாதா மடிதனிலே இங்கு
பாவிகள் யாரும் இல்லை என்று
கூடியே நாட்டியம் ஆடிடுவோம் அந்த
குலமகள் நெற்றியில் சுதந்திர பொட்டணிவோம்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/13/2012

தாமதம் ஏன் வாருங்கள் உறவுகளே.


இறந்தும் இறவா நல் வாழ்வுபெற
இறைவன் கொடுத்த வரம் இதனை
இரங்கி நீயும் கொடுத்துப் பார்
இன்னல் நிறைந்த தருணம் அதில்

உயிர்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியால்
உள்ளம் மகிழும் தன்னாலே அதை
உகர்ந்து நீயும் ஏற்றுக்கொண்டால்
உனக்கும் மனதில் மாற்றம் வரும்!...

பரந்த உலகில் எம் கனவுகளை
பலிக்கச் செய்யும் நோக்குடனே
பகலும் இரவும் பாடுபட்டு நாம்
பட்ட துன்பம் மறந்திடவே

சின்னச் சின்ன தானங்களை
சிறப்பாய் நீயும் செய்து வந்தால்
சிறந்த மனிதனாய் மட்டும் அல்ல
சிந்தை குளிர்வாய் ஓர் நாளில்!!!...

மரணம் என்பது இயல்பாகும்
மண்ணில் பிறந்த உயிர்களுக்கு
மனதில் ஆசையை தூண்டிவிக்கும் கண்
மறைந்தும் மறையா வாழ்வு பெற

இறக்கும் முன்னே ஓர் சாசனம்
இன்றே எழுது உன் மனம்போலே
இருக்கும் இதயம் அதைத் தந்தும்
இறைவன் ஆவாய் எந்நாளும்!!!.....

எரியப் போகும் உடல் இதனில்
எந்த தானம் செய்தோமோ அதை
எட்ட இந்த உலகத்திலே
எதுவும் இல்லை அதை நாம் அறிவோம்!...

பகட்டு வாழ்க்கை வாழ்ந்து இங்கே
பட்டுப் போகும் முன்னாலே
பலரின் உயிரை வாழ வைத்த
பண்பால் நாமும் உயர்வோமே!!....


வறட்டுக் கெளரவம் தோல்விகளால்
வலிமைகொண்டு உயிர் துறக்கும்
வந்த பயனை அறியாத நாமும் இங்கே
வலி மறந்து நல் வாழ்வளிப்போம்!....

தவிக்கும் உயிர்கள் நன்மை கருதி
தரணி எங்கும் பரந்து  வாழும்
தன்னலம் அற்ற உறவுகளே
தயவு செய்து தோள்கொடுங்கள்!....

உயிர்க்கு உயிர் செய்யும் தானம்
உயிருள்ளவரை மறவாதே இதை
உணர்ந்த நாமும் முடிந்தவரை பிறர்
உணரச் செய்வதும் எம் கடன்தானே!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/11/2012

வரிவுடை நாயகியே ...

வரிவுடை நாயகியே நல்
வரம் தரும் தாயே உன்
அருள் இல்லையேல்
மண்ணில் நற் பொருளேது !...........
கொடியவர் மனங்களில்
தினம் ஒரு நினைவலை
அது தரும் துயர் இங்கு
அறுபட  வழி ஏது !!!...........

விடை கொடு தாயே
உயிர் விடு படும் முன்னே
ஒரு கணமேனும்
நீதி நிலைத்திடவே
உறையுது ரெத்தம் இது
உயிர் விடும் யுத்தம்
துடைத்தெறி களங்கம்
என் தூயவளே!.................

எரியுது எரியுது
நல் மனங்கள் இங்கே!!!....
இடரது கொடியென
தொடர்வதென்ன!.....
மலைகளைக் கடந்து 
நதியென வருவாய் 
தீய விதி இதை முடித்து 
உன் அருள்மழை பொழிவாய் 
இரு கரம் தொழுதேன் வா முன்னே 
துயிர் படும் துயரது  அறிபவளே 
அறமது பாடி முடித்துவிட்டேன்
 இனி உன் திருவடி சேர
 ஒரு வரம் அருள்வாய்.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2012

வாழ்க பல்லாண்டு!.....

உடல் கூனிப் போனாலும்
உழைப்பேதான் தெய்வமட
என இங்கு வாழ்வதற்கு
என்ன புண்ணியம் செய்தனரோ!!!....

முதுமையிலும் இளமை பொங்கும்
முக மலர்ச்சி அதை என்ன சொல்ல!....
பழங்கால வாழ்வு முறைதான் இதோ
பார் பெண்ணே கண் குளிர!!!...........

பச்சைக் காய் கறிவகைகளும்
பாலோடு நிறை  கனிகளும்
முட்டைக்குள் நல்லெண்ணையும்
முடிந்தவரை தானியங்களும்

உணவுண்ண ஏற்ற நேரமும்
ஒழுங்கான உடற் பயிற்சியும்
மனம் விட்டு பேசும் தன்மையும்
மகத்தான வாழ்க்கைத் தத்துவத்தை

தினம்தோறும் கடைப்பிடித்தார்
நம் முன்னோர்கள் அவர்களுக்கு
நோயில்லை பிணியும் இல்லை
மனம் நோகின்ற நிலையும் இல்லை!...

வாழ்கின்ற காலம் எல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்தார் அன்று!...
எம்  காலத்தின் நியதி பாரு!!!.....
மிகு கஸ்ரம்தான் வாழ்வில் இன்று!...

சோறாக்க விறகும் இல்லை
சோம்பலுக்கும் எல்லை இல்லை
குளிரூட்டிய பெட்டிக்குள்தான்
கூட்டிக் கழித்து எம் வாழ்வின் எல்லை!..

அளந்து அளந்து பார்த்தே தினமும்
அமைதி குலைது போச்சுதிங்கே
வளர்த்துவரும் தொப்பை இதனால்
வலுவிழந்த மனிதர் ஆனோம்!.........

சுதந்திரமாய் உணவு உண்ணும்
சூழ்நிலையும் எமக்கு இல்லை
இதுவே நிரந்தரம் என நினைத்தால்
அதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை!..

பரந்த உலகம் சுருங்கியதுவேன்
இறைவன் படைத்த இயற்க்கையை
மனிதன் அழித்ததுவும் ஏன்!!!........
சிறந்த பதிலைத் தந்திடுவீர் என்றும் 
மரங்கள் இன்றி நல் வளங்கள் ஏது?....
மறைந்து போகும் உயிர் திரும்பாது 
சிறந்த இயற்க்கை வளத்தால்தானே 
சிந்தை மகிழும் எந்நாளும்!........... 

இருந்த இடத்தில் இருந்துகொண்டே 
நாம் இரசிக்கும் இவ் உலகம் நிலைக்காது 
பரந்த நோக்கம் எமக்கிருந்தால்
நற்  பயிர் செழிக்க உதவிடுவோம்

வளைந்து குனிந்து வேலை செய்தால்
எமை வாட்டும் நோய்கள் நெருங்காது  
இரந்து கேட்க்கும் பிச்சையை விடவும் 
எந்தத் தொழிலும் சிறப்பாகும்!............

அடுத்து வரும் எம் சந்ததிக்கே 
எடுத்துக்காட்டு எம் வாழ்க்கையடா 
இதை நினைத்துப்பார்த்து நீயும்கூட
மன நிறைவோடு பயிரிடவும்  பழகு!!!....     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/08/2012

காலனைத் தொழும் கரங்கள்!....


தூண்டிலில் மாட்டிய புழுப்போலே
துடியாய் துடிக்கும் யீவன்களுக்கு
வேண்டிய வரமது அளிப்பதற்கு
நீ தான் என்றும் விதிவிலக்கு!:......

கேட்டவர் மனதை வதைக்கின்றாய்
கேளாத உயிரைப் பறிக்கின்றாய்
நாற்பதும் பத்தும் உனக்கில்லை
நல்லதும் கெட்டதும் உனக்கில்லை 

மின்னல் போலே வருகின்றாய்  
மிதமாய் துயரைத் தருகின்றாய் 
சொன்ன தேதியில் உன் கடமை 
அதை சுயமாய் முடித்துச் செல்கின்றாய்!... 

கல்லுக்குள்ளே மறைந்தாலும் 
காலன் கணக்குத் தப்பாது !........
மண்ணில் வந்து பிறந்துவிட்டோம் 
நாம் மடியும் காலம் எப்போது !...


முதுமையில் வரும் துயர் புரிகிறதா !!....
அவர்கள் முகங்களில் சோகம் தெரிகிறதா!...
அருமையாய் எம்மை ஈன்றெடுத்த 
அன்னை தந்தையோ பெரும் பாரம் இங்கே!.....

ஒரு வழி அற்றுத் தவிக்கின்றார் 
தம் உரிமையை நினைத்து துடிக்கின்றார்!....
இவர்கள் பொறுமையை நாமும் சோதித்தால் 
புண்ணியம் என்பதுதான் வருமோ !!!........ 

கடமையை மறந்து நாம் சென்றால் 
வரும் காலம் எம்மை வாட்டிடுமே 
நிலைமையை உணர்ந்து ஆதரிப்போம் 
அவர்களை நின்மதியாக வாழ வைப்போம்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/07/2012

இப்படி இருந்தால் எப்படி!.....


மதி கெட்டு விதியை நம்பி
மனம் நொந்து உலகை மறந்து
இருளுக்கு  அடிமையாகி
இது என்ன வாழ்வு என்றால்

மனச் சோர்வு உடலைத் தாக்கும்
மழைத் துளியும் பாரமாகும்
உறவெல்லாம் தூக்கி ஏறிந்து
ஒரு மூலையில் முடங்கச் சொல்லும்!...

இதற்காகவா நாம் பிறந்தோம்
பின் எதற்க்காக நாம் பிறந்தோம்
கொஞ்சம் விரிவாகச் சிந்தித்தாலே
வாழ்க்கை வியப்பாக அமையும்
                                                          இவர்போல்!... 
உலகுக்கு நன்மை செய்து
உளதார வரும் அன்பை ஏற்று
பல ஜென்மம் போற்றும் வகையில்
பண்போடு வாழ்ந்தால் என்ன!!!.......

தரை மீது தூங்கும் போதும் இன்பம்
தானாக நெஞ்சில் பொங்கும்
நிலை இல்லா செல்வம் மறந்து
நிலையான அன்பை அடைந்தால்!...

திருக்கோவில் தெய்வம் நீயே
என்றும் பிறருக்காக வாழும்போது
உனக்கென்ன கவலை இங்கே
உன்னை நீயே கேட்டுப் பாரு!....
யாரை நம்பி நீ பிறந்தாய்!....
இங்கு யாரை நம்பி நீ வளர்ந்தாய்
நாம் வாழும் இந்த உலகத்திலே
எந்நாளும் வேண்டும் நல் இதயம் அன்பே!:....

உயிரின் தாகம் தீர்க்கத் தண்ணி உண்டு
உள்ளம் மகிழ இயற்க்கை உண்டு
எண்ணம் முழுதும் தெளிவானால்
இதமாய் வாழ நல் வழியும் உண்டு

சின்னச் சின்ன ஏக்கங்களால்
சிதைந்து போகும் நல் மனங்களுக்கு
இன்னும்  உலகில் புதுமை உண்டு
இதை ஏற்றுக்கொண்டால் மாற்றம் உண்டு!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/05/2012

நிலவுக்கு களங்கம் யார் சொன்னது!...


அரிய நற் குணங்கள் நிறைந்திருப்பினும் 
அழகிய சிந்தனை ஊற்றெடுப்பினும்
விதியதன் வலிமைதனை எங்கும் 
வென்றவர் உண்டோ கொங்கணவா!...

மதிதனை இழக்கா மானிடனும் 
சதி வலையதனில் வீழ்ந்த பின்னால் 
உதவிடும் கரங்களை அறியாமல் 
உயிரதை இழக்கும் நிலை வருமே!...

இதனால் தவறிய பூக்கள் தரைதனிலே 
அதன் தரம்தனை ஏதும் குன்றாமல் 
பலரது பாதம் நசிக்கிடவே பாவம் 
பகலவன் உயிரைப் பறிப்பதும் ஏன்!....

அரை குறை உண்மையில் தெளிவுண்டோ!..
அடுத்தவர் குண நலன் வகுப்பதற்கு!......
நிறை குடம் என்றே எமை  நினைப்போம் 
நீதி அறிந்த பின்னாலேதான் வருந்தி நிற்போம்

மனிதனின் இயல்பு இது ஒரு புறம் இருக்க 
மழுங்கிய மானம் என்றும் வளர்ந்திடுமோ!...
கரு முகில் வார்த்த கண்ணீரில் 
கலியுகம் மலருது பார் எந்நாளும் !!!......

ஒருவரை ஒருவர் குறை கூற 
உண்மையின் ஆழம் தெரிந்திடல் வேண்டும் 
நிலைமையை உணரா வர்ணனைகள் இதனால் 
நீதிக்குத்  தண்டணைதான் எந்நாளும்......

(கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் 
பொய் தீர விசாரிப்பதே மெய்!!!!................. )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/31/2012

பூமித் தாயே கலங்காதே

பூமித் தாயே கலங்காதே
பெரும் பூகம்பத்தை விரும்பாதே!
பல உயிர்கள்  உண்டு உன் மீது
பாவம் அவை நீ பண் பாடு!

கோரத் தாண்டவம் ஆடிடும்
கொடிய மனிதர் செயல் கண்டு
தீப்பிழம்பைக் கக்காதே
தீர்ந்து போகும் இவ்வுலகே!


ஆத்திரத்தில் அம்மா நீ
அசையும்போது இடர் வந்து
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்
சிதைந்து போகுதே  கண் முன்னாலே!

நேற்றா இன்றா நீ பொறுத்தாய்!...
நித்தம் இடியைத் தாங்குபவள்
நீ வாட்டம் கொண்டால் வளம் ஏது!
வறண்ட நிலத்தில் உயிர் நிலைக்காது!

காற்றும் மனிதன் செயலாலே
கலைந்தே போகுது தழுவாமல்!
வேத்துக் கொட்டும் உடலுக்கு இனி
வெப்பம் தணிக்க மரம் ஏது !

பூத்துக் குலுங்கிய பூமியம்மா உன் மீது
பொலியும் கட்டிடம் இது கொடுமையம்மா!
உனைத் தேற்ற மனிதன் நினைக்கவில்லை
அவன் தவறை உணர்த்த வழியும் இல்லை!
அடைக்கலம் ஆனோம் உன் மடி மீது
அம்மா உன்போல் ஒரு தெய்வம் ஏது!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

காற்றாக நான் மாறவா!...

காற்றாக நான் மாறவா!...
கடல் அலையாக நான் மாறவா!... 
தண்ணீர் ஊற்றாக நான் மாறவா!.... 
தாமரைப் பூவாக நான் மாறவா !... 

தணியாத தாகம் என்னுள்ளே 
ஏனிந்த மோகம்!!!!.......... 
உனைப் பாடும் பாடல் அதைத்  
தினம் கேட்க்கும்போது!............

எரிகின்ற தீ மேல் 
மெல்ல விழுகின்ற நீர் போல் 
சுகம் பொங்குதே!!!........என் 
மனம் ஏங்குதே!!!.......

உன்னை நினைந்தாடவே 
தவிக்கின்றதே  உடல் துடிக்கின்றதே  
முன்னொரு போதும் இல்லாத பரவசம் 
என்னுள் உருவானதே அது எனை மீறுதே!!!....

உன்னிரு கரம் கொண்டு அணைக்க 
எனக்கொரு வரம் வேண்டுதே!!!...... 
உள்ளம் நதி போல் துள்ளிடத் துள்ளிட 
எண்ணம் முழுதும் கவிதை வெள்ளம்
பொங்குது பொங்குது பாரம்மா!!!..... 

இன்னல் தீர்க்கும் தாயே 
என்னுள் இருப்பவள் நீயே!!..... 
உன்னைத் தாங்கும் என் இதயம் 
இந்த உலகை மறக்க வேண்டும்!... 

எண்ணம் முழுதும் உனக்காக
உயிர் ஒளி தீபம் ஏற்ற வேண்டும்!..... 
அன்னை உந்தன் பாதம் அடியவள் 
தொழும் வரம் ஒன்றே போதும்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/30/2012

தெய்வம் இருப்பது எங்கே.....

பணம் படைத்தவன் தேடுகின்றான்
நல்ல குணம் படைத்தவனை அது
தேடி ஓடுகின்றது !!!!.................
தன்நலன் மறந்து தாயானாள் உயர்
தாகம் தீர்க்கும் நீர் போலானாள்
அன்னை இவள்போல் வாழ்வதற்கு
எண்ணம் கொண்டால் போதும். இனி நீ யார்?.....
                                                                                                 
இளமை தனிலே முதுமை கேட்டாள்
இறைவனிடத்தில் மனத்தைக் கொடுத்தாள்
உலக நன்மை கருதியே என்றும்
ஓயாது நன்னெறி பாடல் இசைத்தாள்!.....


குறுகத் தந்த குறளதனால்
கோடி நன்மை இவ்வுலகம் பெறும்
அறிவுச் சுடராய் விளங்கிய மனிதர்
ஆற்றிய தொண்டுக்கோர் எல்லை இல்லை!....


காந்தித் தாத்தா என்றாலே
கண்கள் வியந்து  நின்றாரே !..........
மாண்டும் இவர் புகழ் உலகமெல்லாம்
மங்க்காதிருப்பது எதனாலே ?......!!
                                   

நீண்டுகொண்டே போகும் இந்தத்
தேடல் என்பது தொடர் கதைபோல்
இனியும் வேண்டும் என்றே கேட்க்கும் கேள்வி
வீணே என்று நாம் உணர்வோம்!!!....... 
                                       

களவும் பொய்யும் நிறைந்த உலகில்
கடவுளைக் காண்பதும் பொய்தானே 
அதை உணரும் வகையில் உணர்ந்துகொண்டால் 
உள்ளது என்பதும் மெய்தானே ?.........!!


அறிவுச் சுடரை ஏற்றி வைத்து 
அன்பைத் தினமும் ஊட்டிவிட்டு 
மனிதநேயம் காத்து நிற்கும்  
மறைந்தும் மறையா  மா மனிதர்கள் எவரோ 


இவர்கள்தான் தெய்வம் என்று 
உணர்ந்தால் வாழ்வில் நன்மை உண்டு 
சினம் கொள்ளும் விவாதம் ஏனோ!...
உலகம் சீர்கெட்டுப் போன பின்னும்!!...

மனம் என்னும் கோவில் தன்னில்
மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
குணம் என்னும் பண்பே தெய்வம்
இது குறைந்தால் வாழ்வில் ஏது  இன்பம்!...


                                                    கடவுள் இருக்கிறாரா இல்லையா 
                                                    சொல்லு ?..சொல்லு?...சொல்லு???...
                                                     அட ச்சீ......இவங்க தொல்ல  
                                                     தாங்க முடியியல சாமி.....:):)                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/28/2012

தித்திக்கும் பாடல் நூறு .....





தித்திக்கும் பாடல் நூறு 
தீட்டாதோ என் கைகள் என்றும் 
எத்திக்கும் நிறைந்திருக்கும் 
என் தெய்வம் அருளால் இங்கு 

பக்திக்கோர் எல்லை இல்லை 
என் பாமாலை உன்னைச் சேர 
வித்தைக்கு அதிபதியே நீ 
வா வா வா ....எந்தன் முன்னே!....

முத்துக்கள் போல வார்த்தை 
முரண் அற்று முழுமை சேர 
என் சித்தத்துள் தெளிவு தந்து 
தேவியே நின் அருளைக் காட்டு!...

மொத்தத்தில் என்னில் உன்னை 
நான் முழுதாக உணரும் தன்மை 
சித்திக்க நல் வழிதான் என்ன!.....
உன் சீரான திருவடிக்கீழ் என்றும் 

சக்கரம்போல் சுத்துகின்றேன் 
என் சங்கடங்கள் தீர்த்தருள்வாய் 
செந்தமிழால் கவி பாடி இறைவன் 
அவன் சிந்தனையில் நிதம் வாழ 

எந்தன் உயிர் ஏங்குதடி !...........
இனி ஏழ் பிறப்பும் இது போதும் 
போதும் போதும் என்றே மனம் 
துதி பாடும் வகை அருள் தருவாய் தாயே!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/27/2012

அவளின்றி அணுவும் அசையாது!..

ஆடி வெள்ளி தேடி வந்து
அம்மன் அருளது பொலியட்டும்!......
உலகில் வாடி வதங்கும் உயிர்களுக்கு
செல்வம் அதனை வாரி வாரி வழங்கட்டும்!...

கோடி நன்மை அருளும் சக்தி
நற் குலத்தை நோக்கி நகரட்டும்
அவளைத்  தேடிச் சென்று கேட்ட வரத்தை
ஆசை தீரும் வரைக்கும் வழங்கட்டும்!.......
                                         
பாடித் துதிக்கும் பக்தர் கூட்டம்
இன்று பரவசத்தில் மூழ்கட்டும்
அவர்கள் நாடி நரம்பு அத்தனையிலும்
அட்ட சக்தியும் வந்து அமரட்டும்!........

திருவோடுகூடத் தங்கம் ஆகும்
அன்னை இவளை நம்பி இருந்தால்
அறிவோடு பண்பும் நல் ஆசி தந்து
என்றும் எம்மைக் காத்தருள்வாள்!.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/23/2012

அத்திப் பூ மணம் மணக்க

அத்திப் பூ மணம் மணக்க
என் அத்த மக உன் நினைப்பு
தித்திக்குது நெஞ்சுக்குள்ளே 
தேன் கொடுக்க நீ வருவாயா?

கத்தரித் தோட்டத்திலே  
கட்டி வைத்த பொம்மை போல 
நித்தம் உந்தன் நினைப்பில் நான் 
நிக்குறேனடி தன்னாலே!

பட்டு உடல் தொட்டணைக்க 
பரிசம் நான் போட்டிடவா?
கெட்டி மேளம் கொட்டிடவே 
தாலி அதைக்  கட்டிடவா?

மொட்டு விட்ட மலரே உன்றன்  
முக அழகைக் காட்டாதே!
எட்டி நிலா பார்த்தால் போதும் 
வெக்கத்தால் வாடுமெடி

தத்தித் தத்தி ஓடும் பெண்ணே 
தரையில் மானைக் கண்டாயா?
வெட்டி வெட்டி விளிக்கும் விழியால் 
வீரக் கதைகள் சொன்னாயா?

கட்டழகுப்  பெட்டகமே உன் 
கன்னம் இரண்டும் தேன் கிண்ணமெடி  
காட்டுக்குள்ளே நீ நடந்தால் 
கனிகள் கூட ங்குமடி 

உன் தோட்டக்காரன் நான்தானே 
ஒரு தூது சொல்லடி செந்தேனே 
காத்திருக்குது என் உசிரு  உன்னைக் 
கவர்ந்து செல்ல நான்  வருவேனே.....  

                                     (  அத்திப் பூ மணம் மணக்க....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/17/2012

தன்னையே தந்த தலைவா......

 தன்னையே தந்த தலைவா
இன்று என்னை நீ மறந்ததேனோ?
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்!
நெஞ்சிலே பொங்கும் துன்பம்
அது கண்களில் கங்கை ஆகும்

                                      (தன்னையே தந்த ....)

உன்னிரு விழியும் தேடி
என்னுடல்  வாடும் போது
தன்னிலை மறக்கலாமோ!
தென்றலே சொல் சொல் சொல்?
மஞ்சள்  குங்குமமும்
மண மாலை தோரணமும்
கண்டாலே போதும் போதும்
ஆனந்தக் கண்ணீரில் நெஞ்சம் மோதும்!

என்னுயிர் தாங்கும் உடல் நீ
உன்னை நான் இழக்கலாமோ!
பொன் பொருள் ஏதும் வேண்டாம்
உன் புன்னகை ஒன்றே போதும்
அன்று நீ சொன்ன வார்த்தை
நெஞ்சினில் நின்றாடுதே
இந்த வன்முறை ஏனோ
சொல் சொல் சொல்?

கண்ணீரை மையாக்கிக்
கவிதை நான் வரைந்தேனே
உன்னை இது   சேராதோ?
என் உள்ளமதைக் கூறாதா?
வாடுதே என் மனம் 
உன்னைத் தேடுதே அனு தினம்!
தூது சொல் மன்னவா
என்னுயிர் நீ அல்லவா...

                                                (தன்னையே தந்த ....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/15/2012

நீயின்றி நல் வாழ்வேது!...




ஒற்றை ரூபாய் மடிப்பிலே
ஓராயிரம் ஆசைகள் நினைப்பிலே
பெற்ற தாயின் தவிப்பினை
பிறர்தான் அறிய முடியுமா!!!.....

சற்றும் சோர்வு கொள்ளாமல்
தன் சுகத்தை மட்டும் தேடாமல்
முற்று முழுதாய் எமக்காக
முதுகு கோண உழைத்தாளே!!!....

குப்பை மேட்டில் அவள் கனவு
குலைந்து போகத் தனிமையிலே
செற்ற உடலைத் தாங்கியபடி அவள்
சீவன் உலாவுது எதனாலே!!......

உற்றார் உறவினர் யாவருமே
உயிராய் பழகி வந்தாலும்
பெற்ற தாய்க்கு இணையாக
பூமியில் எமக்கு யாருண்டோ

நித்தம்  வரும் நினைப்பிதனால்
தன் நின்மதியை இழப்பவள்  தாய்
அவள் கற்றுத் தரும்  நன்னெறியைக்
காக்க மறந்தால் நல் வாழ்வுண்டோ!....

பல்கிப் பெருகும் கலாச்சாரம் எமை
பாதை தவற அழைத்தாலும்
கல்லில் பொறித்த எழுத்தாகக்
காலம் முழுதும் வாழ்வோம் நாம்

உன்னைத் தொழுதால் போதும் அம்மா
உலகில் யாவும் இனிதாகும் இங்கு
கண்ணைத் திறந்து பேசும் தெய்வம்
உன் காலடி பட்ட மண்ணும் கவி பாடும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/10/2012

மனமே மயங்காதிரு!...

அன்னம் தண்ணி ஏதுமின்றி
அவதியுறும்  யீவன்கள் பல இருக்க 
இன்னும் இன்னும் வேண்டும் என்று
எதை எதையோ தேடி அலைகின்றோமே!..

என்ன புண்ணியம் செய்தோம் இங்கே
இத்தனை சுகங்கள் பெறுவதற்கு என 
எண்ணும் உணர்வு பெற்றால் போதும்
இதயத்தில் சுமைகள் குறைவதற்கு 


மனக் கண்ணில் தோன்றும் வாழ்க்கை என்பது 
எம் மனம் போல் என்றும் அமையாது இதைச்
சொன்னால் கேட்க்க மறுக்கும் குணத்தால்
வாழ்வில் சோதனைகள் குறையாது!...

கல்லில் முள்ளில் நடந்து வரினும்
கௌரவங்கள் குறையாது  பிறர் 
தொல்லைப் படுத்தும் அளவு கடனைப் பெற்றால் 
துன்பம்  என்றுமே தொடராகும்!!...


வெள்ளை மனமும் பிள்ளை குணமும் 
எல்லை இல்லா ஆனந்தம் தரும்!.. 
இது இல்லை என்றால்  போதும் உன்னிடம் 
இருப்பதெல்லாம் பொய்யாகும்


என்னை உன்னை உயர்த்திக் காட்ட 
என்ன வேண்டுமோ "நிஜ" வாழ்வினிலே 
அதை என்றும் தேடிக் கற்றால் போதும்
இந்த உலகம் உன்னைப் போற்றிடுமே!...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/29/2012

உனக்கொரு தாஜ்மகால்


உனக்கொரு தாஜ்மகால்
உள்ளத்தில இருக்குது
அதை உள்ளபடி காட்டிட
என் உள்ளம் இங்கே தவிக்குது!...

நீயொருத்தி இல்லை என்றால்
நெஞ்சமதைத் தாங்குமோ
நீ நடக்கும் பாதை தாண்டி
நான் நடக்கல் ஆகுமோ!.....

                                      (உனக்கொரு)

வான் பரப்பில் நிலவுபோல்
வந்துபோகும் தேவதை அடி
நீ கொடுக்கும் ஒளியில்தான்
நான் மின்னுகின்ற தாரகை

ஏழ் பிறப்பும் நீ வேண்டும்
என்னுடனே வந்துவிடு
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
உன்னொளியில் வாழவிடு...

எனக்கெனப் பிறந்தவளே
என் எண்ணங்களில் தவழ்பவளே
உனக்கென வாழும் என்னை
உன் மனதில் தைத்து விடு ..
                                         
பெண் :

மனதினில் துயர் எதற்கு?..
என் மன்னவனே வந்துவிடு
இருவிழி காண்பதென்றும்
தனித் தனியாவதுண்டா ?.....

என் கனவினில் நினைவினில் உன்னை
எந்தன் காலமெல்லாம் சுமப்பேனே
உன் மடிதனில் தவழ்ந்திடவே
எனக்கொரு ஆணையிடு!

ஆண் :

அடி பெண்ணே இது
நீதானா நீதானா நீதானா!
உன் இரு விழி சொல்லும் வார்த்தை
அது நிஜம்தானா?
நிஜம்தானா`?   நிஜம்தானா?
உன்னால் இன்பம்
வந்தது வந்தது வந்ததிங்கே
உள்ளத்தில் ஆனந்தம்
பொங்குது பொங்குது
பொங்குதிங்கே...

                                      (உனக்கொரு.....)  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/27/2012

இருகரம் அணைத்து

இருகரம் அணைத்து இறைவனின் முன்னே
இதயத்தைத் தந்த என் உறவே -அன்று
முதன் முறை பேசிய வார்த்தையைக்கூட
முழுமையாய் மறந்ததென்ன!

நான் உனக்கெனப் பிறந்தவளோ?
உந்தன் உயிரினில் கலந்தவளோ?
இதை அடிக்கடி நினைக்கிற மனதினில்
துயரை நீதான் அறிவாயோ!

                                        ( இருகரம் அணைத்து)

வெள்ளிப் பனிமலை உருகுது என்றன்
மனமது தவிக்குது உன்றன்  இரு விழி
காண ஒரு வழி இல்லையோ?
வள்ளிக் குறத்தியின் அன்புத் தலைவனே
உந்தன் இதயத்தில் இன்று நானில்லையோ!

சின்னஞ் சிறு குயில் உள்ளம் முழுவதும்
உன்றன்  நினைவது வந்து துயர் தரவே
தன்னந் தனிமையில் நீ சொன்ன கதைகளை
எண்ணி எண்ணி நெஞ்சம் துடிக்கிறதே!.....

                              
கல்லில் முள்ளில் அன்று நடந்து வந்தேன் 
இரு கண்கள் இரண்டும் சிவந்து நின்றேன் 
அல்லும் பகலும் என்னை அணைத்த கரம் 
இன்னும் தழுவ வரவில்லையே அது 
ஏன்?......ஏன்?..ஏன்?

பெண்:

என்னை என்ன செய்ய நினைத்தாயோ?
என்றன்   உயிர்த் தலைவா நான் 
வெண்ணிலவு போல்தான் இங்கு 
உன் நினைவால் தேய்கின்றேன்!

அன்னை அவள் துணையும் இல்லை 
ஓர் அன்பு செய்ய யாரும் இல்லை 
உன்னைத் தினம் தேடுகின்றேன் 
ஒரு உமைபோல பாடுகின்றேன் 
வா வா வா என் அன்பே வா...........
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/25/2012

இது நடக்கிற கதையா!...........



துலைந்தது சனியன் என்றே நாமும்
தூக்கியே எறிந்துவிட்டாலும்
குடைந்துதான் பார்க்கும்
ஒருமுறையேனும் மனக் கதவைக்
கொலை வெறி கொண்ட ஆசை!!......

நிரந்தரமாய் விட்டகன்றால்
நீ மிதப்பாய் தெப்பம் போலே
அகன்ற சனி தொடர்ந்து வந்தால் 
அதுபோல துன்பம் இல்லை.......

பிறந்தவுடன் தொற்றிய தோசம்
இது பிரியாமல் உடன் இருக்க
வருந்தும் உடல் காலம் முழுதும்
எது சொன்னாலும் கேட்காது என்றும்

தனக்கடிமை ஆக்கி எம்மைத் தினம் 
நினைத்தபடி ஆட்டிவிக்கும்
ஆசை ஒன்றே பேரெதிரியடா 
இதை அழித்துவிட்டால் பின்
வாழ்வில் ஏது துன்பம்!!!.............



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2012

உன்போல் ஏது ஒரு சொந்தம்!...


               
உன்னை என்ன சொல்லி நான் பாராட்ட 
என் உள்ளமதில் வைத்துத் தாலாட்டத் 
தோழி எந்தன் தோள்களிலே சாய வா...
விழி நீரிறைத்து நீர்க்குடமாய் நான் மாறவா....

ஒரு அன்னை இல்லை என்றேதான் 
தினம் ஆர்பரித்து நின்றேன் நான் 
இன்று உன்னைக் கண்ட பின்னாலேதான் 
என் உள்ளம் பொங்குதே தன்னாலே..........!!!!


கோழை என்னும் நிலை மாறுதடி உன்னாலே 
ஒரு கோடு போட்டுக் காட்டினாயே கண் முன்னாலே
 ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே ஓர் ஆனந்தம் 
இந்த இன்ப சுகம் என்றும் தங்க நீ வேண்டும்

வா வா அன்பே என் வாசல் தேடி -நீ 
வரும் காலம் எல்லாம் பொன்னாகும் 
நீதிக்கு நீயே என்றும் காவலடி நீரில் பூக்கா 
செந்தாமரையும் நீதாநெடி என் தோழி!..

பள்ளிக் காலம் தொட்டு வந்த இந்தப் பாசம் 
ஒரு எல்லை இன்றி என்னாளுமே வீசும் 
கல்லில் முள்ளில் சென்றால் போதும் என் பாதம் 
உன் கண்களிலே இரத்த வெள்ளம் தோன்றும்...!!!

இந்த அன்பிற்கு இணை ஏதும் இல்லை என் தோழி 
உந்தன் ஐந்து விரல் பட்டால் போதும் இந்நாளில். 
அஞ்சும் நெஞ்சில் வந்த பஞ்சம் நீங்கும்  
உந்தன் கொஞ்சும் மொழி நெஞ்சில் நின்றாடும்!.....  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.