5/19/2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா !


மலரிலும் மெல்லிய
மனமிது தழைத்திட
நற் குணநலன் பெற்றிங்கு என்
குலமகள் வாழ்ந்திட
கலைகளைப் பயின்றிட நற்
கடமைகள் புரிந்திட
அறிவுசார் செல்வமும்
அன்பொடு தன்னடக்கமும்
தெளிவுறப் பெற்ற ஞானமும்
சிந்தையில் நல்லுணர்வும்
தித்திக்கும் வாழ்வதனில்
திசை எட்டும் போற்றும் வண்ணம்
எத்திக்கிலும் இடரின்றி


இவள் வாழ்வு நலன் பெறவே
வாழ்த்துங்கள் உறவுகளே
அந்த வாழ்த்தொன்றே போதுமிங்கே !!















தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/18/2013

சிவபுராணம் சொல்லச் சொல்ல சிந்தை மகிழும் தன்னாலே !


உறங்கும் போதும் உன் நாமம்
விழிக்கும் போதும் உன் நாமம்
எமக்குத் தெரிந்தது அதுவொன்றே
நாம்  என்ன செய்வோம் இறைவா சொல் !..

மறக்க முயன்றால் முடியாது
மனதின் சுமைகளும் குறையாது
நாம்  தொடுக்கும் காரியம் அத்தனையும்
துலங்கும் உன்றன் அருளாலே!...........

விரித்த சடை முடியோனே
நால் வேதமும் போற்றும் நாயகனே
துடிக்கும் மனமிதை அறிவாயோ
மேவிடும் துயர்களைப் போக்க வருவாயோ

சிவ சிவ சிவ என்று சிந்திப்போம்
சிந்தையில் நல்லதை நாம் நினைப்போம்
அவனருளாலே வரும் நன்மைகளை
அவனியில் என்றும் நாமடைவோம்

தேவர்கள்  படும் துயர் தீர்த்தவனை
எம்மைத் தேடியே நன்மைகள் அருள்பவனை
எந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/03/2013

கவச குண்டலங்கள்....


கவச குண்டலங்கள்
இழந்து மண்டலத்தில்
குழந்தை போலே நானுறங்க
அதில் படரும்
கொடி போல்
எனது தலைவா
காட்டு உன்றன் கைவரிசை !


உயிரில் பிரியமில்லை
என்னுடலில் எதுவுமில்லை
உணர்வில் மட்டும் நீ கலக்க
நல்ல  தருணம் இதுவே
சரணம் எனதே
காட்டு உன்றன் கைவரிசை!

மெழுகில்  திரியைப் போல
என் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை!

மலரில் மணமும் உண்டு
உன் மனதில் இடமும் உண்டு
என் நினைவை மட்டும்
ஏன் மறந்தாய்?
இரு கரங்கள் தொடுத்து
வரங்கள் கொடுத்தவனே
காட்டு உன்றன் கைவரிசை

                          (கவச குண்டலங்கள்)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/28/2013

தேர்ந்தெடுக்கும் நீங்கள் தான் தெளிவு பெற வேண்டும் !



குப்பைக்குள்தான் கிடக்கிறது
குண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !

அப்பப்பா பொழுதெல்லாம் ஆனந்தத்திலே
அவரவர்க்கு வேண்டியது கிடைத்தனாலே
தப்பாத்தான் போகிறது அரசியலும் இங்கே
தவிக்கின்ற மக்களுக்கு நீதி சொல்வதாரு!

ஒப்பற்ற விலை உயர்வு ஏழை மக்களை
ஒடுக்கித்தான் வைக்கிறது எந்நாளும் இங்கே
கற்கின்ற கல்விக்கேனும் காமராசர் போல்
கை கொடுக்கும் தெய்வம் இங்கு யாரும் இல்லையா!..

பிற்போக்கு வாதிகளாய் நாமிருப்பதால்
பின்தங்கிப் போகாதோ நன் நாட்டின் வளம்!
நற் போக்கு நமக்குள்ளே வேண்டும் என்றால்
நல்லவர்களே  அரசியலில்  இருந்தாக வேண்டும்

கற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
காலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!

தன் மான உணர்வு உள்ளது ஏழைகளிடத்திலே
தயங்காமல் அவர்கள் பெயரை முன் மொழியுங்கள்
எம் மானம் காப்பதற்கு உரிய தலைமைக்கு
எவன் மனிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/26/2013

உள்ளம் அது ஒளி வெள்ளம் என...


உள்ளம் அது
ஒளி வெள்ளம் என
துள்ளும் நிலை
அது போதும் இங்கே
இது தான் வாழ்க்கை
அன்பே கேளு!

சொல்லித் தரவா
பள்ளிப் பாடம்?
அதில் இல்லை இது போல்
இன்பம் ஏதுவும்!

முத்தம்  மழையாகும்
இங்கு உயிர் மூச்சில்
சுகம் சேர்க்கும்
சித்தம் தடு மாறாமல்
இன்பத் தேனை
அது வார்க்கும்

அன்பால் பொங்கும்
இன்பம் நூறு அதை
ஏற்றுக் கொண்டால்
துன்பம் ஏது!
உன்னில் எனைக்  காண
அட என்னில் உனைக்  காண
வண்ணக் கவி பாடும்
என் எண்ணம் உனதாகும்!

கண்ணே கதை கேளு
கனியாத மனம் ஏது?
விண்ணே குடையாகும்
ஆனந்த விழிநீர் மழையாகும்

பொன்னின் நிற மானே!
அதைச் சொன்னால் புரியாதே!
அள்ளிக் கொள்ள வா ...
என்  அன்பைப் பொழிவேனே ....

                                        (  உள்ளம் அது ஒளி.....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/21/2013

தமிழனுக்கு தேவை இங்கு தமிழீழம் மட்டும் தான் .



கொன்று குவித்த
பிண வாடை நடிவினிலும்
நின்று சிரிக்குது தனக்கான
சமரசத்தை ஏந்திய வண்ணம் அநீதி!

பச்சைக் கம்பளம் விரித்தது போல்
இயற்க்கை எட்டுத் திக்கிலும்
கொட்டி வைத்த பசுமை இன்றும்
தமிழனின் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறதே!

கண்கள் இருந்துமா இக்
காட்சிகள் புரியவில்லை!
சுதந்திரப் பறவைகளும் இங்குதான்
சுயமாகப் பறக்கவில்லை!

கை கட்டி வாய் பொத்தி
உயிர்ப் பிச்சை போதும் என்று சில
உணர்வுகளைக் கொன்ற தமிழனிடம் அல்லவா
வாய்ப்பாடும்  கையளிக்கப் படுகிறது!

சமரசப் பேச்சு என்பதே சிறு துளியும்
சமரசம் அற்று இருக்கையில்
நீதிக்கு இங்கு என்ன  வேலை
நீர் மேல் எழுத்துப்  போல்!

கருவறை கிழித்த கைகளாலும்  தமிழனை
அழித்து ஒழித்த விழிகளாலும்  இன்னும்
அடங்கி ஒடுங்கிப் போவதற்க்காகவா  எம்
ஆருயிர்கள் மண்ணினில் புதைந்தார்கள்!

சொகுசு வாகனக் காரர்கள் சும்மா
சுத்தித் திரிந்து பார்த்த காட்சிகள்
உண்மை இல்லை என்று தெரிந்த பின்னும்
நீதியைக் காக்க இன்னும் என்ன தடை!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2013

கருணைக் கடலே கண் திறவாயோ...

அசல்  இங்கே
நகல்  அங்கே
நகலை  நம்பும் மக்களுக்கு
அசலை  நம்ப வைப்பதாரு!....

பகலென்ன இரவும் என்ன
படுத்துறங்கும் வேளையிலும்
இறைவா உன் காலடிதான்
எனக்குள்ளே தெரிகிறது !.....

இது நீதி என்றுரைக்க
எழுந்தருள நீ மறந்தால்
உ(ன்)னை நம்பும் பக்தர்க்கு
உயிர் மூச்சு நின்றுவிடும்

பரிகாரம் ஏதும் இல்லை
பரந்தாமா உன் அருளே எல்லை
விழி நீரை நெய்யாக்கி
விடை தேடி அலைகின்றோம்...

விதி வரைந்த கைகளினால்
விடை எழுதிச் சென்று விடு
மதி மயங்கி நிற்போர்க்கும் 
மன அமைதி தந்து விடு

ஓர் உயிரை ஈருடலில்
ஒருங்கிணைக்க முடியாது
நீ எழுதும் தீர்ப்பினில் தான் இனி
நீதி என்றும் நிலைத்திருக்கும் !...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/15/2013

செய்வன திருந்தச் செய் அதையே துணிந்தும் செய்!



உப்புக் கல்லை வைரம் என்று
ஒப்புக் கொள்ளச் சொல்வார்!- அதையே
ஒப்புக்கொள்ள மறுப்போரிடத்தில்
மேலும் ஒழுக்கக்கேடாய் நடப்பார்!

சிலர் கற்றுக் கொண்ட அறிவை மறந்து
கயமை உணர்வுடன் இருப்பார்!- இந்தச்
சுற்றம் சூழல் பெரிதென நினைத்தால்
வரும் சுமைகளை இங்கே யார் சுமப்பார்!

பட்டிக் காட்டு மனிதர்கள் இவர்களைப்
பகைத்தால் துயரம் என்றே  நீயும்
கட்டுக்கடங்கிப்  போவாயானால் பின்னர்
வாழ்க்கை என்றும்  கசக்கும்!

கற்றுக் கொள்வாய்  வாழ்வில் இனியும்
எம்மைக் காக்கும் சிலரே  போதும் என்று!
விட்டுத் தள்ளு ஏனையவை எல்லாம் வீண்
விரக்தியை ஊட்டும் பதர்கள் என்று!

எதிலும் குற்றங் கண்டே  பிழைப்பவரிடத்தில்
கூர்மையாக நின்றிடுவீர்!
பயபக்தியோடும் பாசத்தோடும் பழகும்
உறவுகளை வென்றிடுவீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/11/2013

உன்னோடு தான் உறவாடினேன்


உன்னோடு தான்
உறவாடினேன்
உனக்காகத்தான்
உயிர்  வாழ்கிறேன்
மண்ணோடு கலந்தாலும்
மறையாத நேசம்
என் வாழ்வில் ஏன் தந்தாய்
இது போல் ஓர் ஏக்கம்

கண்ணா நான் அழைக்கின்றேன்
கவி பாடிக் களைக்கின்றேன்
சும்மா ஏன் வெறுக்கின்றாய்
சோகத்தில் குளிக்கின்றாய்

தள்ளாடித் தள்ளாடி
மனம் ஏங்குதே!
தலையணையோடு கதை பேசி
விழி வாடுதே!
உன்னோடு நான் சேர
வழியில்லையா?
உயிர் அற்ற பிணம்
வாழ முடியாதைடா

என் சீவன்  உன் சீவன்  என்றான பின்
இதயத்தின்  ஓசைகள் வேறாகுமா?
நீ கொண்டாடும் இடம் வேறு என்றானதால்
அன்றாடம் என் வாழ்க்கை திண்டாட்டத்தில்

கண்ணாடிப் பொருள்மீது கல் பட்டாலும்
கல் மீது கண்ணாடி தான் பட்டாலும்
கண்ணாடி தான் இங்கு உடையுமடா
உன்னாலென் உயிர் போகக் கூடாதடா ....

                                     (  உன்னோடு தான் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/07/2013

வாருங்கள் உறவுகளே ஒன்று சேருங்கள்!...

ஈழத் திரு நாட்டில்
எம் தமிழர் தாய் நாட்டில்
மானம் காக்கப் பிறந்த
மறத் தமிழனடா உன் அப்பன்!...

ஏரைப் பிடித்த கரமும்
எடுத்துரைக்கும்  சுதந்திரத்தின்
வேரை ஊன்றியவன்
வெற்றிப் பாதைகளில்
சாதனைச் சுவடுகள் பதித்தவன்

அன்னை திரு நாட்டின்
அடிமை விலங்குடைக்கத்
தன்னைத் தந்து தாயாக நின்றவன்
உன்னை மட்டும் நினைத்திருந்தால்
உலகில் தமிழன் என்றோ தோத்திருப்பான் :(((
உனக்கும் வாழ்வு வந்திருக்கும்!......

பொன்னில் வடித்த சிலை போல
பரந்த மார்பில் குண்டேற
என்ன துடி துடித்தாயோ
இரக்கம் அற்ற அரக்கர்கள் முன்னால்!...:((((

வண்டு காதில் துளைத்தாலே
வருந்தும் மழலை உன் மார்பினிலே பல
குண்டுகள்  துளைக்கும் அளவுக்கு
கொடுமை என்ன நீ செய்தாய்
இதை இன்று கேட்க்க நாம் தவறினால்
ஈனத் தமிழன் என்றாவோம் !.........
                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

இப்போது சொல் உன் வாழ்த்துரைகளை !

நிலவென்று சொல்லாதே
இருள் சூழ்ந்த வாழ்விற்குள்
இன்னமும் ஒளியற்றுக் கிடக்கும்
பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம்!

மலர் என்று சொல்லாதே
மணம் வீசி நின்றாலும்
மதியாதோர் கால்களுக்குள்
மிதிபட்டுப் போகும் பெண்ணினம் தான்
ஏராளம்! ஏராளம்!

என் உயிர் என்று சொல்லாதே
உரிமையைக் கொடுத்து விட்டு
இன்னமும் உயிரற்ற பிணமாக
அலையும் பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மான் என்று சொல்லாதே அவள்
மயக்கத்தில் இருக்கும் போதே
வீணாக்கப் பட்டு வீசி எறியப்பட்ட
பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மயில் என்று சொல்லாதே
குயில் என்று சொல்லாதே
அடக்குமுறைக்குள் இன்னமும்
அடங்கிக் கிடக்கும் பெண்ணினம்தான்
ஏராளம்..ஏராளம்!

விழியிரண்டும் கெண்டை மீனா!
நீ விரட்டி அடிக்கும் போதெல்லாம்
கடல் நீரைக் கூட கடன் கேட்டாளே!
எதற்கு இத்தனை உவமைகள்!

பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்போம்!
பெண்ணை பெண்ணாகவே  மதிப்போம்!
பெண்ணுக்கென்றே உள்ள உரிமைகளைப்
பெண்ணிடமே விட்டு விடுவோம்!

                                                                அம்பாளடியாள் 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/04/2013

வெக்கித் தவித்தேன் வேதனை தீரவில்லை



வெக்கித் தவித்தேன்
வேதனை தீரவில்லை
நான் வெந்து மடிந்தேன்
உன் ஞாபகம் போகவில்லை
கட்டழகு கட்டிக் கரும்போ  உன்
கண்களிலே தவழும் நிலவோ!
முத்தமிட்ட கன்னங்களில்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
சித்தரிக்க வார்த்தை இன்றி
சிந்தனைகள் வாடுதடா!

                          (வெக்கித் தவித்தேன் )

பள்ளியறைப் பாடம் சொல்லி
என்னுயிரில் நீ கலந்தாய்
தள்ளி வைத்துத் தாளம் போட
இன்னும் என்ன வேண்டுமடா?
கல்லில் முள்ளில் தூக்கம் என்ன .
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
என்றன்  உயிர் வேகுதடா

பெண்ணின் துயர் கேட்பதாரு
பேச்சு நின்று போச்சுதடா!
உள்ளத்திலே உள்ள சோகம்
ஊமை நெஞ்சை கொல்லுதடா!
பாடல் தந்த தலைவனுக்கு
நான் பாடும் பாடல் கேட்கிறதா...
வீறாப்பு ஏன் உனக்கு இன்னும்
வேண்டாமே தப்புக் கணக்கு .......

                             (வெக்கித் தவித்தேன் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/02/2013

பூங்காற்றே பூங்காற்றே இந்தப் பூவை இனியும் தீண்டாதே



பூங்காற்றே பூங்காற்றே
இந்தப் பூவை இனியும் தீண்டாதே
ஏங்காத ஏக்கம் இல்லை
என் வாழ்வில் தூக்கம் இல்லை

ஊமத்தம் பூவின் சொந்தம்
உள்ளூரத் தந்த துன்பம்
நீ வந்து தீண்டும் போதும்
என் நெஞ்சைக் கொல்லும் கொல்லும்

ஆராரோ ஆரிரரோ
நான் பாடக் காத்திருந்தேன்
யார் யாரோ சொந்தம் என்று
என் வாழ்வைக் கொன்றதாரு!

வானத்தைப் பூமி தொடுமா?
வடக்கைத்தான் தெற்கும் தொடுமா?
காலத்தின் கேள்வி இதற்க்கு
கண்ணீரே பதிலானதே ..

மானத்தில் சிறந்த மங்கை
இவள் மனதுக்குள் ஓடும் கங்கை
இனிச் சேராத இடத்தைச் சேர்ந்து
செறாகிப் போனால் தகுமா!


வாழத்தான் வாழ்க்கை என்றாய்
வடிவாகப் பேசிச் சென்றாய்
நான் உந்தன் சொந்தம் என்று
சொன்ன நாவும்தான் போனதெங்கே!


                   ( பூங்காற்றே பூங்காற்றே)
                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/28/2013

கற்றார்க்கே சென்ற இடமெல்லாம் சிறப்பு !..


அடக்கு முறைக்குள்
சிக்குண்டு தவிக்கும் எம்
நாவுக்கு விடுதலை கொடுத்துப் பார்
உன் படை பலம் தோற்கும் !

கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் எதனையும் வென்று காட்ட
புத்தியுள்ள மனிதர்களுக்கு
சக்தி கிடைத்தால் போதுமிங்கே!

குத்திக் குத்தி உடல்களைக் கிழித்து
அச்சம் ஊட்டி வென்ற வெற்றி
எச் சமயத்திலும் தோற்க்கும்
தோற்றால் உன்றன்  நிலைமை என்ன!

காட்டு மிராண்டித் தனத்திற்கும்
இந்தக்  கையாலாகத் தனத்திற்கும்
வேட்டு வைக்க  ஒரு நாள் வரும்
வரும் வரைத்தான் இத்துன்பம்!

மாட்டைப் போல சொன்னது கேட்டு
மடியில் இருப்பதை உன்னிடம் தந்தும்
ஏன் நாம் ஏட்டுக் கல்வியைத் தொடர வேண்டும்
இதுதான் இறுதியில் வெல்லும் பார்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/26/2013

நீதி செத்துப் போனதா இங்கே!....



வாரங்கள் நான்கிலும்
வருந்தித்தான் பிழைக்கின்றோம்
ஏனம்மா எமைப் படைத்தாய்
ஏக்கம் கொண்டு வாழ்வதற்க்கா!

சாவுக்கே சாவு மணி
சர்ச்சை இன்றி நாம் அடிப்போம்
நீ வந்து துணை நின்றால்
நீங்காதோ எத் துயரும் !

கோரப் பல் முகம் காட்டி
கொடியவர்கள் ஆட்சி செய்ய
நீதிக்குத்  தண்டணையை
நெஞ்சமிங்கே ஏற்றிடுமா!

போருக்கு அழைத்தவர்களும்
போகுகின்றனரே  பாராளுமன்றம்
போர்க் குற்றவாளி என்று எம்மைப்
போகும் இடம் எல்லாம் சொல்லிவிட்டு!

யாருக்குத்தான் தெரியாது
யாதும் இங்கே போலியென்று பிறர் அறிய
சேதத்தை எடுத்துரைத்தும்
சேதாரம் செய்கின்றனரே அது எதற்கு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/20/2013

செய் அல்லது செத்து மடி.....



குப்பைக்குள் கிடக்குதென்றும் குண்டுமணி
குப்பையோ ஏறுது பார்  கோபுரத்திலே!
அப்பப்பா உலகம் ரொம்ப மாறிப் போச்சுது
அதனால்தான்  துன்பம் எல்லை மீறிப் போச்சுது!

முகம் பார்த்து முடிவுகளைத் தானே வகுக்குறார்
மீறி முன்னேறிச் செல்வோரைப்  பின்னே இழுக்குறார்!
உறவுக்குக் கை கோர்த்து உயர்த்தி விடுகிறார் சிலர்
உட் பகையை மனதில் வைத்து ஒதுக்கி விடுகிறார் !

வளர்கின்ற சந்ததியின் வாயை அடைப்பதும்
வருமானம் பார்த்து இங்கே தலைமை ஏற்பதும்
இது நாகரீகம் என்று சிலர் ஏனோ நினைக்கின்றார்!
இதில் ஏதும் அறியாதவர்களும் இங்கே கூட்டுச் சேர்கின்றார்!

தங்க முலாம் பூசி விட்டால் அது தங்கமாகுமா!
இது  தப்பென்று தெரிந்து விட்டால் வந்த வெக்கம் போகுமா!
கருக் கலைப்புப் பாவமென்று எண்ணித் துடிக்கையில்
இப்படிக் கருக் கலைத்துச் செல்வோரை உலகம் ஏற்குமா!

உருப்படியாய்த் தகமைகளை ஊக்குவிப்பதும்
உணர்வொன்றிச்  சேவைக்கென தன்னை அர்ப்பணிப்பதும்
மிகப் பெரிய பண்புகளில் ஒன்றாகுமே இதை
உணர்ந்து  மனிதன் செயற்ப்பட்டால் நன்றாகுமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/19/2013

காவல் தெய்வம் நீ எங்கே!......



ஏழரைக் கோடி மக்களைக் கொன்ற
அரக்கனின் வாழ்வும் சிறப்புறும் போது
ஒரு பாவமும் அறியாப் பாமர மக்கள்
பயந்தென்றும் வாழும் நிலை தகுமோ!

மாவிலைத் தோரணம் ஆடவும் இல்லை
மனதினில் வந்த துயர் போகவும் இல்லை
சாவினைத் தழுவிய சந்ததி இதற்க்கு
இச் சங்கடம் மேலும்  தொடர்வது எதற்கு!

நீதியை அநீதி புறக்கணிப்பதனால்
நித்தமும் வாழ்வில் சித்திரவதைதான்
எம்மை நாடி வந்த இத் துயர் தீர்ப்பவர் யாரோ!
நன்மைகள் தினம் அருளும் எம்பிரானே!

எத்தனை சாட்சிகள் வந்தும் என்ன
மனசாட்சி அற்ற மனிதர்கள் முன்னே !
இத்தனை காலமும் பொறுத்தது போதும்
இக்கரைக்கும் அக்கரைக்குமாய்  என்ன வாழ்க்கை!

ஓடி ஓடி அலுத்த பாதங்கள்
ஓரிடத்தில் நிற்ப்பது எப்போ!
வாடிக் குரல்வளை அடங்கும் முன்னே
வையகத்தில் எமக்கொரு தீர்ப்புச் சொல்லு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/12/2013

அம்மன் பாடல்கள்!........


நலிந்து கிடக்கும் உள்ளத்தைத்
தட்டி எழுப்பிய துரதிஸ்டம்
அதன் இஸ்டம்போல ஆட்டிவித்தால்
இதயத் துடிப்பு எப்படி இருக்கும்!.....

கணக்கில் இட்டால் தாங்காது பின்
கண்கள் இரண்டும் தூங்காது வரும்
வழக்கில் மட்டும் புலனைச் செலுத்திக் கொண்டால்
வருந்தும் மனம்தான் என்ன செய்யும்.........

மறந்து போக நினைப்பதையே
மறக்க முயன்று தோற்றுப் போகும்
அவரவர் குணத்திற்கேற்ப பாதிப்புகள்
குறைந்த பட்சம் வந்தே தீரும்!......

தவிர்க்க முடியாத் தண்டணை  இதைத்
தவிர்த்துக்கொள்ள ஒரே ஒரு வழி
அம்மன் துதியே அவ்வழியாகும்
அகிலம் போற்றும் நல்வழியாகும்!.....

சொல்லும் பொருளும் மனச் சோர்வைச்
சிதைத்தே வாழ்வில் இன்பம் தரும்
இனிய இசைக்கு மயங்காத ஓர்
இதயம் உண்டோ சொல் இவ்வுலகினிலே!....

அரிய பாடல்கள்  இதைக் கேட்டே
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
உரிய முறையில் பயிற்சிகளை ஊட்டி
எம் சந்ததியையும்  வளர்த்திடுவோம்.....




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/20/2013

கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ளே விட்டதாரோ!....



கண்ணைக் கட்டிக்
காட்டுக்குள்ளே விட்டதாரோ!
ஏழை இவள்  எண்ணங்களை
ஒன்னொன்னாகச் சுட்டதாரோ!

உன் பெயரைச் சொல்லும் போது
உள்ளம் அழுதே!- இந்த
உள்ளத்திலே உள்ளதெல்லாம்
ஊமை நெஞ்சைக் கொல்லுதே!

மண்ணுக்குள்ளே போகும் போதும்
உன்னை நினைப்பேன் என்றும்
தன்னந் தனிமையில் நின்று நானும்
வாழ்வை  வென்று காட்டுவேன்!

பெண்ணுக்குள்ள வீரம் அதை
என்னென்று நினைத்தாய்!
இந்தப் பூவுக்குள்ளும் சோகம்
அதை ஏனோ விதைத்தாய்?

அன்னமிட்ட கைகளுக்கு வந்த விலங்கு
இது உள்ளவரை உள்ளத்திலே ஏது சிரிப்பு?..
புன்னகையை உன்னுறவால் நானும் துறந்தேன்
இந்தப் புத்தி கெட்ட சீவனுக்குப்  போதும் இதுவே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/17/2013

உன் பெயரதை எழுதி வைத்தேன் ...


உன் பெயரதை எழுதி வைத்தேன்
எவரும் அறியாமல் நான்
உனக்காகக் காத்திருந்தேன்
எதுவும் புரியாமல்

விண் தாண்டிச் சென்றாயோ!
வெண்ணிலவாய்த் தேய்ந்தாயோ!
பெண்ணே உன் ஞாபகங்கள்
என் நெஞ்சைக் கொல்கிறதே!
                                           
ஊமத்தம் பூக்கள் என்னை
உரசித்தான் பார்க்கிறதே!
நீ தொட்ட மேனி தொட்டு
புது உறவொன்றைக் கேட்கிறதே!

யாருக்குப் புரியும் அம்மா என்
ஜாதகத்தில் உள்ளதெல்லாம்!
வேர் அற்ற மரம் போல்
நானும்தான் வாடுகின்றேன்

நீதிக்குப் பின் பாசம் என்றாய்
நீ இன்றி நானா சொல்லு?
என்னை சோதிக்கும் மலரே உன்றன்
வாசத்தை ஏன் விட்டு சென்றாய்!

சோகத்தில் தள்ளாடினேன்
என் சொந்தம் அது நீயல்லவோ
ஆனந்தக் கூத்தாடி வா அன்பே
ஆருயிர் போகும்  முன்பே!

விதியோடு போராடி
என்னைச் சேர வா ............
வெண்ணிலவே நீ இல்லாது
இந்த வானம் தாங்குமா?

விழி நீரால் கோலம் இங்கே
உனக்காக நான் போடுறேன்
எனக்காக யாரும் இன்றி
என் சீவன் வாடுதிங்கே.....

                                     ( உன் பெயரதை )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/13/2013

பொங்கலோ பொங்கல் !!.........


பக்திப் பரவசத்தோடு என்றும்
அன்பும் அறனும் கலந்து
இன்பம் என்ற சொல் அது எல்லோர்
இதயம் அதிலும் பொங்கட்டும் !

முத்திக் கனிந்த கனி போல் சுவை
முன்னேறும் வாழ்வில் நிலைத்திடவே
எத்திக்கிலும் இருந்து நன்மைகள்
இடர்கள் களைந்து  பொங்கட்டும்!

தத்தித் தவழ்ந்து தவழ்ந்து மனிதன்
தரையில் நடந்து திரிந்து இதுவரைப்
பட்ட  துயர் நீங்கிடவே  உலகில்
இனிதே பாலும் தேனும் பொங்கட்டும்!

சுற்றம் நன்மை பெற்றிடவும் ஏங்கும்
உயிர்கள் சுகமாய்  வாழ்ந்திடவும்
குற்றம் குறைகள் நீங்கி நல்ல
குதூகலமான நாட்கள் பொங்கட்டும்!

பெற்ற தாயைப் போலென்றும்
போற்றும் எம் தேசம் அதில் எந்நாளும்
சத்தம் சலனம்  இன்றி மிகு
சமத்துவம் பேணும் நிலை பொங்கட்டும்!

கற்றுக் கொடுத்த நன் நெறியில்
எம் காலம் முழுவதும் வாழ்ந்திடவே
ஒற்றுமை என்பது குறைவின்றி
ஒளிபோல் எங்கும் பொங்கட்டும்!


பொங்கும் செல்வம் பொங்கட்டும்!
புவிமேல் இன்பம்  பொங்கட்டும்!
எங்கும் மங்களம் பொங்கட்டும்!
எதிலும் கருணை பொங்கட்டும்!

வாழ்வில் சாந்தம் பொங்கட்டும்!
வளமார் வாழ்வு இனிக்கப் பொங்கட்டும்!
வேண்டும் சுகமது பொங்கட்டும்
விழிகளில் ஆனந்தம் பொங்கட்டும்!
தேனும் பாலும் கலந்து நல்ல 
இனிய பொங்கல் திருநாள் நல் 
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/04/2013

என் தாய் பிறந்த நன்நாளிது !....


அன்பு செய்ய அன்னை வேண்டும்
எம்மை ஆதரிக்க அன்னை வேண்டும்
துன்பம் போக்க அன்னை வேண்டும்
மனம் தூய்மை பெறவும் அன்னை வேண்டும்!....

தன்னிறைவைக் கொடுப்பவள் தாய்
தரமாய் எம்மை வளர்ப்பவள் தாய்
இன்பம் தந்து மகிழ்பவள் தாய் அந்த
இறைவனையும் படைத்தவள் தாய் !...

கண்ணுறங்க நான் மறந்தேன் உன்னால் 
கனவினிலே தினம் மிதந்தேன் ...........
இன்னும் நூறு ஜென்மம் தொடரினும் 
உனக்கென நான் இங்கு காத்திருப்பேன்...

வெண்ணிலவை சாட்சி வைத்து
விடியும் அந்தப் பொழுதினிலே
உன்னருகில் நான் இருப்பேன்
என் உணர்வுகளை அன்று நீ அறிவாய் ......

நான் செய்ததொரு தவறும் இல்லை
இந்தச் சீரழிந்த உலகினிலே .............
மீண்டும் உன் மடியில் நான் உறங்க
வரம் ஒன்று தந்து இங்கே வாழ்த்து தாயே !!!!!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2012

2013 ராசிப்பலன் உங்களுக்கு எப்படி


தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்
தூய உள்ளம் நிலைக்க வேண்டும்
பட்ட கஸ்ரம் நீங்க வேண்டும் அந்தப்
பகவான் அருள் கிட்ட வேண்டும் ........

விட்டத்திலே இருந்து செல்வம்
விடிய விடியக் கொட்ட வேண்டும்
ஸ்ரத்துக்கு நீங்க எல்லாம்
இனிய வாழ்வு வாழ வேண்டும்

அன்பு எங்கும் நிலைக்க வேண்டும்
அடிமைத்தனம் அகல வேண்டும்
ஆயுள் பலம் பெருக வேண்டும்
மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்

நொந்த உள்ளம் சிரிக்க வேண்டும்
நோய் நொடிகள்  அகல வேண்டும்
பாலை வானத்திலும் பூ பூக்க வேண்டும்
பசுமையான உலகம் மலர வேண்டும்

சொந்த பந்தம் இணைய வேண்டும்
சோகங்களை மறக்க வேண்டும்
சண்டை எங்கும் ஒழிய வேண்டும்
சமத்துவம் எதிலும் நிலைக்க வேண்டும்

பக்தி மிகையாய் இருக்க வேண்டும்
பாரினில் நீதி தழைக்க வேண்டும்
அறிவு திடமாய் இருக்க வேண்டும்
பேராற்றலால் வெற்றி நிட்சயம் கிட்ட வேண்டும்....

இத்தனையும் எனது ஆசை இதற்கு  மேலும்
நல்லது நடந்தால் சொல்லுங்கள் உறவுகளே !.....:))))

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/18/2012

கொட்டும் முரசொலி கொட்டும்


கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும்   தாளம் தட்டும்!.
கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும் தாளம் தட்டும்!....

அந்தக் காலம் வரும் நேரம்
எந்தன் யீவன் இங்கே காத்திருக்கும்.....

                               (கொட்டும் முரசொலி ....)
மொட்டும் மலராகும்
தேய் பிறையும் முழு நிலவாகும்
நாம் கற்கும் தமிழ் என்றும்
இன்பம் பொங்கும் தேன் மழையாகும்

விட்டுக் கொடுப்பேனோ
என் தாயே உன்னை  நானும்
மட்டுப் படுத்தாமல் தினம்
மலை போல் இங்கு வளர்ப்பேனே !......

                                    (  கொட்டும் முரசொலி )

விட்டுப் பிரிந்தோமே எம்
தாயே உன் தேகம் !...........
கட்டுக்கடங்காமல் வரும்
துயர் என்றும் எம்மை வாட்டும்

முத்துத் தமிழ் மொழிபோல் இங்கு
மொழியே இல்லை என்பேன் !................
உன்னைக் கற்றுத் தருவோர் முன்
அன்பாய்க் காலில் நான் விழுவேனே

                                           (  கொட்டும் முரசொலி )
சுற்றிக் கடல் நடுவில் ஓர்
சொர்க்கம் என்   தாய் நீதானே !...
உன்னைக் கட்டித் தழுவாமல்
கரு முகில் போல் ஆனேனே !.......

கொட்டும் பனி மலையில் வாடும்
சிட்டுக் குருவி என் சோகம் அது
விட்டுப் பிரியாமல் தினம்
வாட்டும் போதெல்லாம் எந்தன்
உயிரில் எழுதிடும் பாடல் கேட்டு

                                                   (  கொட்டும் முரசொலி ) 

                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2012

முற்றுப் புள்ளியே ......



முற்றுப் புள்ளியே!- அடி
முற்றுப் புள்ளியே உன்னை 
முத்தமிட்ட குற்றத்துக்கு 
இந்தக் கதியா?

கட்டில் சுகமும் இனி 
மெத்தக் கசக்கும் நீ 
கற்றுத் தந்த பாடம் அது 
நெஞ்சில்க்  கிடக்கு 

                  (முற்றுப் புள்ளியே..)

விட்டில்ப் பூச்சி போல் 
உன்னைச் சுற்றி வந்தேனே 
நீயும் வெக்கப் பட்டு நிற்பது போல் 
என்னைச்  சுட்டெரித்தாயே!

உன் பட்டு உடல் மேல் 
என்றும் மோகம் இல்லடி என்
அன்பைப் பட்டியல் இட்டால் 
இங்கு யாவும் பொய்யடி...

கற்றுத் தரவா? நீ என் உயிர்க் 
காதல் தீபம் அல்லவா!
உன்னை விட்டுப் பிரிந்தால் 
இங்கு வாழ்க்கை ஏதடி!

வெண்ணிலவே  உன் நினைவில்  
நானிருக்கும் போதினிலே 
பொன் பொருளை நாடவில்லை
உன் அன்பை மட்டும் தேடுகின்றேன்

பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !....
பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !...........

மண்ணுக்குள்ளே போகும் முன்பே 
என்னைக் காண வா வா ...
                                (முற்றுப் புள்ளியே..)                     


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/12/2012

பாரதியார் பாடல்கள் தந்த துணிவே என் கவிதைகள்



"பாரதி "என்றொரு வரி உன்
பெயரதை எழுதினால் போதும் 
மீதியை நான் உரைப்பான் ஏன்!..
ஒவ்வொரு வீதியும் உன் கதை சொல்லும்!....

நீதியை நிலை நாட்டிட எங்கும் 
நீ தீயென வலம் வந்தாய் !........
எம் ஆருயிர் உள்ள வரைக்கும் 
யார் இதை இங்கு மறப்பார் !!!!.....

சாதிகள் இரண்டென உரைத்தாய் 
அவரவர் சங்கடம் தீர்த்திட விரைந்தாய் 
உன் பாவினால் நன்மைகள் புரிந்தாய் 
எப் பாமரரும்  மனம் குளிர நீ வளர்ந்தாய்!.....

பூமகள் பாதம் பணிந்திடும் பக்தன் 
உன் ஞாபகம் ஒன்றே போதும் 
இங்கு தேன் மழை போல் சந்தம் 
எம் நாவினிலும் வந்து நின்றாடும் !....

நான் வணங்கிடும் பாரதியே ........
நீ மலர்ந்த பொன்னாள் அதனில் தான்  
வீரமும் விவேகமும் மலர்ந்தது என்று 
நான்முகன் இங்கொரு காரணம் சொல்லானோ!!.... 

பாவலர் உள்ளத்தின் படிக்கட்டு 
நீ இல்லையேல் எமக்கேது புது மெட்டு
நான் வரைந்தது கவிதை என்றால் இதையும் 
நீ கொடுத்ததன் துணிவுதான்  என்பேன் !!!!!.............

வா மகனே வா என்று உன்னை இங்கு 
வாரியே அணைத்திடத்  தமிழ்த் தாய் இன்றும் 
பூமியில் தவமாய்த் தவம் இருக்கின்றாள் 
பிறந்து வா நீயும் எம்முடன் நிரந்தரமாய் வாழ!!!!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12-12-12-ரஜனி - பிறந்த நாளும் ஓர் அற்புதம்!!.....



திக்கெட்டும் வாழ்த்தொலிகள் இன்று
திகைத்துத்தான் போகிறது மனம்........!!
பக்கத்திலும் நெருங்க முடியாத புகழின்  உச்சி
எது இருந்தும் பரவசம் கொள்ளாத ரஜனி!!!!.....

ஆக்கத்தில் சிறந்த மனிதன் அவன்
தூக்கத்திலும் ஓர் ஏக்கம் இருக்கும்
பார்க்கின்ற கண்கள் பரவசம் கொள்ள
பரந்த வெளியில் சிறந்த வழியில்
அடைந்த புகழ் இது!!!!...

மாற்றங்கள் நூறு வந்தாலும் இங்கு
மாறாத உன் புகழைப் போற்றுவோர்
போற்றாது போவாரா  சொல் இப் பூவுலகில்
நீ பிறந்த நாள் அதுவும் புதுமையானதே!!!!....

வியந்து பார்க்க நடிப்பில்  திறனை
விளையாட்டாக செய்து முடிக்கும்
நடிகன் உனக்கு ரசிகர்கள் பல கோடி இருந்தும்
எந்த மயக்கமும் அற்றதே உன் மனதின் எல்லை!!!!....

என் வாழ்த்துக்குக்  காரணமும் இது ஒன்றே
உன்னை வாழ வைக்கும் இறைவனுக்கும்
நன்றி சொல்வேன் இன்பத் தமிழில் என்றும் பேசி
எங்கள் மனதைக் கொள்ளையடிப்பவனே !....

எந்த நோயும் உந்தன் அருகில்
வந்து துயர் தந்திடாது
முந்தும் நூறு வயசை உன் உடல்
முழு சுகம் பெற்றிட வேண்டும் .....


அன்பினாலும் நற் பண்பினாலும்
உயர்ந்து நிற்கும் நடிப்பின் சிகரம் உனக்கு
எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/10/2012

swiss lotto விழுந்தால் எப்படி இருக்கும்.....


ஐந்து கோடியும் வேண்டாம் அம்மா
பத்துக் கோடியும் வேண்டாம் அம்மா
ஒரு கோடி வீழ்ந்தால் போதும் இந்த
உலகில் உன்னை நான் மறவேன்!!!....

தொண்டு செய்து காலம் கழிப்பேன்
துலங்க வைத்து உன்னை ரசிப்பேன்
கஞ்சி ஊத்தி மனம் குளிர வைப்பேன் என்
காலமெல்லாம் உன்னை நினைத்திருப்பேன்!....

என்ன ஒரு வேண்டுதல் !!!!................
இவர்கள்  போல் பலர் எங்குமே  உள்ளார்
சொந்த நலன் கருதித் தினமும்
கேட்க்கும் வரம்  நிறைவேறுமா !!!!!.......

கொடுத்தால் அது சாமி என்பார்
கூட இருந்தும் பாட்டுப் படிப்பார்
அடுத்தவர் நலனை நினைக்காதவர்க்கு
ஆண்டவன் மீதும் ஆத்திரம் இருக்கும்!....

பாத்திரம் அறிந்து பிச்சை இடவும்
படைத்தவன் அவனுக்கு நன்கு தெரியும்
பல சாத்திரம் கற்று முடித்தவராயினும்
பக்குவம் இழந்தவர் ஏதும் அற்றவரே!!!!....

உட் பொருள் அறியாத் தத்துவம் போல்
உலகினில் தெய்வம் இருந்தாலும்
அதன் அற்புத சக்தி வேறாகும் அதை
அறிந்தவர் உள்ளம் வெண் மதியாகும்!!!!!......

நிற்பதும் நடப்பதும் அவன் செயல் என
நினையா மனதுடன் போட்டி என்ன!!!!! .....
எப்பொழுதும் எமைக் காத்திட வல்ல
இறைவன் இருக்கின்றான்  என வணங்கு!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/09/2012

காசு காசு காசு எங்க இருந்து அள்ளுறதாம்!....


உறைபனியில் உணர்வுகளைத் துறந்து தினமும்
மனிதரல்ல இயந்திரம்போல் உழைத்தும் என்ன
வரும் துயரை நீக்க ஒரு வழியில்லாமல் இங்கே
வருந்துகின்ற நாதியற்ற அகதிகள் எமக்கு !!!!.......

நடு நடுங்க உடல் விறைக்க இன்னுமொரு
நரகலோக வாழ்வும் உண்டோ இதைவிடவும்!!!!....
விரல்களுக்குள் ஊசிகளால் குத்துவது போல் இந்த
வேதனைகள் தாங்கி நிற்க முடியவில்லையே !...

செலவழித்து உடை வாங்கிப் போட்டுக்கொள்ளவும்
சீரழிந்த தமிழனுக்கு வேறு வழியும் உண்டோ....
உறவுகளின் கண்ணீரைப் பார்த்துப் பார்த்தே
உழைத்த பணம் உண்டியலைத் துடைத்துச் செல்லும் போது!..

விரகம் என்ன தாபம் என்ன எல்லாம் போய்விடும் 
மன விரக்தி மட்டும் நெஞ்சுக்குள்ளே நின்றாடிடும்
உலர்ந்த தரை உணர்சிகளைக் காட்டக் கொஞ்சம் இங்கே
உனக்கும் சுடும் என்ன செய்ய வாழ்க்கை இதுதான்!....

பரந்த கடல் தாண்டி வந்து அப் பாவிகளாய்
பர பரப்பில் மூழ்கும் இந்த நாடுகளில்
தின(மு)ம் குறித்த நேரம் அதற்குள் வேலைத்தளம்
செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என அவதியுறுவர்!...

இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.....

உழைத்த பணம் வில்லுக் கட்டச் சரியாய்ப் போகுது
இந்த ஊருக்குள்ளும் கள்ளப் புத்தி உள்ளோர் வாழ்கிறார்!...
பொதுப்படையாய்ப் பார்க்கும் போது உண்மை புரியாது
புறப்பட்டு வா உன் புலனைத் திருத்திச் செல்லலாம்!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/04/2012

பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்....


பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்
தேன் துளி விட்டுச் செல்லும் தேனீக்கள்
யார் இதை அழித்திட நினைத்தாரோ ...அந்த
வாசகர் நெஞ்சம் என்றும் வீண்தானே !...........

காகித ஓடம் நான் தொடுத்தேன் அம்மா......
கங்கையில் கண்ணீரைச் சேர்த்து விட்டேன்
பூமகள் பாதம் சேர்ந்திட வேண்டும்
புண்ணிய நதியே வந்துதவு!!! .................¨

                             ( பா மரம் பட்டுப் போகும் )
நீதியின் கண்கள் மூடியதாலே
நெஞ்சினில் தீப்பொறி பட்டதென்ன .....
பாவிகள் போகும் பாதையில் மட்டும்
சிலர் பாரிய முட்களை நட்டதென்ன !!!....

கோவிலில் இருக்கும் சிற்பத்தை எவரும்
தெருக் கோடியில் போட்டு உடைப்பாரா .....
கேள்விகள் எழுந்தால் கேலியாய்ப் பதிலைக்
கேட்பவர்க்கெல்லாம் உரைப்பாரோ !....

ஆயிரம் ஆயிரம் வேதனை  நெஞ்சினில்
யார் இதன் காரணம் அறிவாரோ .............
கூவிடும் குயிலின் குரவளை அதனில்
இனியும் கூரிய கத்தியை வைப்பாரோ !!!......

                           (   பா மரம் பட்டுப் போகும் ....)

நீதியே  கண்களை நீ  திறவாயோ ........
நீ மழையாய் இங்கு பொழியாயோ ...
ஓர் துளி ஈரம் பட்டாலும் போதும்
உள்ளத்தில் அமைதி தங்கிவிடும்

பாரினில் துயரம் பெருகிடும் பொழுதில்
பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்
தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
தீந்தமிழோடெம்மை  வாழ விடு ........

                        (   பா மரம் பட்டுப் போகும் ....)


                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/29/2012

வெறும் புகழ்தான் இங்கு வாழ்க்கையா



கவிதை மழையில் நனையும்போது
உறையும் பனியும் சுடுகிறதா !!!!.......
இந்த விதியை மாற்ற முயலும்போது
உன் மதியில் சஞ்சலம் எழுகிறதா......

பிறர் அருமை பெருமை தெரிந்திருந்தால்
அன்பைச் சிதைக்க மாட்டாயே உன்
வலிமை கொண்ட எழுத்தினாலே
நல் வாழ்வை அழிக்க மாட்டாயே .....

கருவில் இருந்து தெருவில் வந்து
களங்கம் உற்ற பின்னாலும்  இந்த
உயிரைக் குடிக்கத் தூது எதற்கு இனி
ஊன் உடலும் இதனை ஏற்காதே !!...

அமைதிப் பூங்கா நடுவினிலே அன்று
அக்கினிக் குண்டை ஏன் எறிந்தாய்!.....
உன் நிழலைக் கூடக் காணா மனிதரும்
நின்மதி இழந்து தவிப்பதர்க்கா !!!!...........

கருணை உண்டா உன் இதயத்திலே
களங்கம் சொல்லிப் போகின்றாயே
இன்று எரிமலையைப்போல சிதைந்த மனம்
இனியும் அமைதி கொள்ளாதே ....................

வறுமைக் கோடும் வதைக்கா மனதை
சில  வார்த்தை என்றும் அழித்துவிடும்
பிறர் உணர்வைக் கொன்று பெருகும் புகளில்
அப்படி என்ன ஓர் இன்பம் வந்து விடும் !!!!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2012

துயிலும் இல்லம் நோக்கி






துயர் படிந்த பாதை எங்கும் மெழுகானார்!
உள்ளத் தூய்மையினால் எமக்கிங்கே உயிரானார்!
பகைவருக்கும்   பணியாத ஒளியானார்!
எம் பாசம் மிகு மாவீரத் திலகங்கள்!


ஒரு கொடியில் பூத்த மலர் மணம் மாறுமா!
ஓங்கு தமிழ்க் குலத்தினது மொழி மாறுமா!
வறுமையிலும் மாறாத பண்பு மாறுமா!
எம்மை மாற்ற எண்ணும் எண்ணம் அது நிறைவேறுமா!

நடந்து வந்த பாதை அதை நினைத்துப் பாரடா!
நம்மவரின் சடலம் இன்றி வேறு ஏதடா!
எரித்த உடல் சாம்பலாகி வானில் பறக்குதே!- இன்னும்
எரியும் உடல் இங்கிருந்து கண்ணீர் வடிக்குதே!

சிலர் நடந்த கதை முடிந்ததென்று பின்னே செல்கிறார்!
நரிகளிடம் கூலி வாங்கி வயிறை வளர்க்கிறார்!
தமிழனது உள்ளமதை வதை வதைக்கிறார் பின்
தரம் இழந்த பின்னாலும்  தமிழன் என்கிறார்!

பரந்த கடல் வெளி எங்கும் பார்த்து நிக்குறார்
பாசம் மிகு காவலராய் எங்கள் மாவீரர்! - அவர்கள் 
இழந்த இரத்தம் உறைவதற்க்குள் இந்த ஆட்டமா!
எம் இனத்தவனே உனக்கு இது நீதியாகுமா!

தவழ்ந்த தரை மறந்து நீயும் தாவிக் குதிக்கிறாய்!
ஏன் தமிழினத்தின் பெயர் கெடுக்க மேலும் அலைகிறாய்!
விரைந்து எப்போ உன் கடனைத் தீர்க்கப் போகிறாய்!
என்றும் விடியலுக்காய் வீழ்ந்தவரை வணங்கிச் செல்லடா.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/25/2012

மாவீரர் நாள் 2012




ஈழத் தாயின் மடிமீது
காரிருளைப்  போக்க வந்துதித்த
கார்த்திகைத்  தீபங்கள்  கண்முன்னே
காட்சி தரும் இந்நாள் எமக்கு பொன்நாளே !...

வானம் கண்ணீர் மழை தூவ
இவ் வையகம் போற்றும் போர் வீரர்
பாதம் தொட்டு  வணங்கிட இன்றே
படை திரண்டு வாரீர் கடல் போல......

ஏழைகள் எங்கள் வாழ்க்கை என்றும்
இருளில் கிடக்கும் நிலை கண்டு
எந்நாளும் துடித்த யீவன்களை
இந்நாளில்க்  காண வாரீர் கடல் போல.....

பாழும் மனதில் பெராசையதால்
படு பாவம் செய்த கயவர்களை
எந்நாளும் அழித்து ஒழித்திடவே
எமக்கெனப் பிறந்த போர் வீர்கள்!.....

இவர்கள் தாகம் என்ன தாகம் இது !!!!.........
என்றும் தணியாத சுதந்திர தாகம்
உடல் வீழும் வரைக்கும் தளராததால் தம்
உடலையும் விதையாய் வீழ்த்திச் சென்றனரே!!!!....

போரினில் சிறந்த போர் வீரர்கள்
இப் புவியினில் எவரெனக் கேட்டாலிங்கே
நாளை இந்த உலகம் சொல்லும்
நம்மவர்  பெயர்கள்  அல்லால் வேறேது !!!!....

தோழில் சுமைகள் தாங்கியபடியே
துரோகிகள் வரவை எதிர்த்து நின்று அன்று
காவல் காத்த தெய்வங்கள் இவர்களைக்
காணக் கடல்போல் திரண்டு வாரீர் ..............:(

எம் மானம் பெரிதென நினைத்தவர்கள்
தம் மனதில் துயரை வடித்தவர்கள்
ஈழத் தாய் எம் தாய் ஈன்றெடுத்த
இனிய புதல்வர்களைக் காண வாரீர்.....!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/20/2012

ரோஜா மலரே ரோஜா மலரே.....



ரோஜா மலரே ரோஜா மலரே
முள்ளில் ஏனடி விழுந்தாய் நீ...
உடல் கீறிக் கிழித்து பாயும் இரத்த
வெள்ளம் கண்டால்  தாங்காதே !....

கோலம் போடும் கண்ணே  உந்தன்
மனக் கோட்டை சிதைந்தது எதனாலே
அந்த ஆளும்கட்சி தூளாய்ப் போகும்
அடி அடிமைப் பெண்ணே  கலங்காதே !:......
                                       (ரோஜா மலரே ரோஜா.....)

வீரத்தாயின் புதல்வி அம்மா
உன்னை உலகம் அறியாது உன்னை
அறியும் காலம் வந்தால் போதும்
இங்கு  அரக்கர் மனமும் தாங்காது !.......

நீலக் கடல் என சொல்வார் உலகில்
நீருக்கிங்கே நிறம் ஏது இதைப்
பாளாய்ப் போன மனம் உணர்ந்தாலும்
சொல்லும் பழக்கம்  என்றும்  மாறாது !...

வீணாய்ப் போகும் மனிதர் பேச்சு
அவர்கள் விருப்பம் போல  இருக்கட்டும்
பெண்ணே உந்தன் உள்ளத்தழகு
அது என்றும் உயர்ந்தால்  போதுமடி ...

கோளைக்கில்லை பெருமை இங்கே
பொறுமைதானடி வெல்லும் என்று
உன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்த
ஒற்றை நாணயம் அது பதில் சொல்லும்!....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/13/2012

காதோரம் காதல் சொல்லும்


காதோரம் காதல் சொல்லும்
உன்  பாடல் கேட்டால் போதும்
உடலும் மனமும் தீயில் எரியுது
அடி பெண்ணே உன்னாலே !......
என்னை அளவும் தொழவும்
விட்டுச் சென்ற ஆணவக்காரி நீதானே !....

தெருவோரம் நான் தூங்க
என் விழி நீரில் பயிர்  வாழ
உனக்கென்ன பெண்ணே சொல் என்
உயிர் மூச்சைக் கொண்டு சென்றாயே!

கனக்கின்ற இதயத்தில் இங்கே
உனக்காகவே   நான் வடித்த
கவிதைக்குள் அர்த்தப்  பாரம் அதை
இறக்கத்தான்   துடிக்கின்றேன் நீ
எனக்காகப் பிறந்தாயோ.... போ ..போ போ ....

மலைப் பாம்பு போல் உன் ஆசை என்
மனதை  விழுங்கிச் செல்லத்தான்
தடு மாறுதே!  என் உள்ளம் இருளானதே!
விடியாத பாதைகள் விரிகின்றதே!- அதில்
போதை இன்றி நெஞ்சம் அலை மோதுதே!

கனாக் காணும் உள்ளங்கள்  உலாப் போகுதே!
நிலா கூட என்னைக் கண்டு இடம்மாறுதே!
இதுதான் உன் காதல் தந்த பாடம் இனிக்
கண்ணில் கங்கை ஓடும் .........புது ராகம்
உனைச் சேரும் அதில் சோகம் எனதாகும்
அது போதும் போதும் போதும் பெண்ணே ...

                                                             (  காதோரம் காதல்....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2012

பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்



மனம் இனிக்கப் பேசும் முல்லை
மலரே இங்கு உன்னை வாழ்த்த
வெண்ணிலவை நானளைக்கவோ ஓஓஓ ஓஓ .....
விடி வெள்ளிகளால் மாலை கோர்க்கவோ .....

மானே எந்தன் மாங்குயிலே .....
தேனே.... எந்தன் திகழொளியே ...
நீயே... எந்தன் யீவனடா ...
எந்நாளும் இங்கு நீ வாழ
என்னுயிரை நான் கொடுத்து
வாழ வைப்பேன் !¨..உன் மடியில்
நான் தவழக் காத்திருப்பேன் !.........

                                                  (   மனம் இனிக்கப் )

பூவே இளம் பூவே உந்தன்
உள்ளம் அது வெள்ளை என
இந்த ஊரும் உலகும் போற்றும்போது
உன்னால் நானும் மகிழ்வேனே ......

வீரம் வேண்டும் நெஞ்சினிலே
வெற்றி என்றும் உனதாக நல்ல
ஞானம் வேண்டும் மகனே உந்தன்
வாழ்க்கை என்றும் சிறப்பாக .....

கோலம் போடும் கண்ணாலே என்னைக்
கொள்ளையடித்துச் செல்பவனே ......
எந்நாளும் இன்பம் பொங்கிடவே
இந்நாளில் நாமும் வாழ்த்துரைப்போம்....

ஆலம் விழுது போல் உன் வாழ்வு
அன்பால் உறுதி கொள்ளட்டும்
உள்ள காலம் முழுதும் உன்பெயரை
அந்தக் காலன்கூட சொல்லி மகிழட்டும் ...

ஏழை எளிய மக்கள் எல்லாம்
இவன்போல் துணைவன்  இல்லை என்று
நாளை இந்த யுகமே போற்ற
நலமாய் வாழ வாழ்துரைப்போம் .....

                                                  (   மனம் இனிக்கப் )                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/29/2012

ஈழத் திருநாடே எந்தன் தாய் நாடே



ஈழத் திருநாடே என்றன்  தாய் நாடே!
உ(ன்)னைக் காணும் ஆவல் நெஞ்சினிலே
எந்நாளும் இங்கு பொங்குவதேன்!
வானம் பாடி சிறகை இழந்து
வாட்டும் இந்தக் குளிர் நாட்டில்
நாட்டம் இன்றி ஏனோ இங்கே
வெள்ளோட்டம் ஓடுது  எந்நேரமும்!

பனிப் பூக்கள் தலை மேலே தினம் தூவ
இனி காச்சல் சளி நோயால்  உடல் வாட
இது என்ன  சாபம்! -  அடி போடி
உன் மடி மீது நாம் தூங்கும் சுகம் வருமா!

நறு மணம் வீசும் மலர்க்கூட்டம்
உன் எழில் கொஞ்சும் தரைமீது
தினம் தினம் உறவுகள் வலம் வரவே
தீராத சந்தோசம்  அது தீர்ந்து போனதின்று!

மாறாப்பு போட்ட மங்கை இவள்
மனசுக்குள் ஓடும் கங்கை வந்த
வீராப்பு அடங்கிப் போக விழிநீரால்
கோலம் போடுவதேன் இங்கே!
தாய் நாடே சொர்க்கம் சொர்க்கம்
அதைத் தயங்காமல் சொல்வதற்கு
ஏன் இந்த வெக்கம்!

பாய் போதும் நாம் தூங்க
பண்பாடு நிறைந்த எம் நாடே!
குயில் பாடும் பாட்டுச் சத்தம்
அது கேட்டால் போதும் போதும்!
மனசுக்குள் பட்டாம் பூச்சி
பட பட பட என்று பறந்திடவே
செந்தமிழாலே கவி பாடி
எம் உறவோடு நாம் சேரும் காலம் அது
எங்கே ....எங்கே ..எங்கே!

தேன் கூடு  கண்களுக்குளே
தீராத மோகம் ஊட்ட
 நான் பாடும் பாடல் இது
உனக்கங்கே கேக்குறதா?

                                              (   ஈழத் திருநாடே ...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/17/2012

நீங்களும் தெய்வமாகலாம் .....

உடலைக் குறைக்க நடப்போர் நடுவில்
உணவுக்கு ஏங்கும் உயிர்களைப் பார்!
இந்த வறுமைக் கோட்டை அழிக்கவா  உனக்கு
வல்லமை இல்லை சொல்டா  மானிடனே!

ஒருவர் பசியை ஒருவர் தீர்த்தால்
உலகில் வறுமை அழியாதோ!.......
நாம் தெருவில் சிந்தும் செல்வம் திரண்டால்
உயிர்கள் பிழைக்க முடியாதா!

கருணை வேண்டும் மனிதா உனக்கும்
கையில் இருப்பதைக் கொடுப்பதற்கு!
இது அழியும் உலகம் அதனால்தானோ
மனிதம் மரத்துப் போனதிங்கே!

மெழுகைப்போல நல் இதயம் இருந்தால்
ஒளியைத் தேடி அலைவான் ஏன்!
இந்தக் கொடுமை கண்டும் அசையா மனதை
உருகச் செய்ய நல் வழி தேடு!

விழியில் வழியும் கண்ணீரைக்கூட
அருந்தத் துடிக்கும் நிலையைப் பார்!
இங்கு அழியும் இந்த உறவைக் காக்க இனியும்
இத்தனை தாமதம் வேண்டாமே!

பல மொழியில் பேசித்  திரிந்தால் என்ன
மனிதன் என்பவன் ஓர் இனமே! இவன்
அழியும்போது துடிப்பவன்  எவனோ
அவன்போல் தெய்வம் வேறில்லையே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/15/2012

இப்படியும் ஓர் ஆசை!..(தொடர் கதை பாகம் -3)

யேய் ...ஜோதி உங்கட  அக்காவோட கலியாணத்தத்தான்  சும்மா அந்த மாதிரி சிறப்பா நடத்தி முடிச்சிற்றாங்களே...நீ எப்படீ .... கலியாணம் கட்டிகொள்ளப் போற?....சீ போடி .....அட்றா சக்க எண்டானாம் கலியாணம் எண்டதும்  வெக்கத்தப் பாரு !.....ஹா ...ஹா ..ஹா...அது சரீடி உங்க அக்காவும் அத்தானும் எப்படி லண்டனுக்கு போகினம் ?....அது தெரிய இல்லையடி அப்பா ..ஆனா எனக்கு மட்டும் எங்க அக்காவ விட்டுப்  பிரியிறத நினைச்சாத்தான் ரொம்பக் கவலையா இருக்குடி.  அப்போ நான் ஒண்டு செய்யட்டுமாடி ?...!..என்னது ?...உங்கட அப்பாட்ட சொல்லி உனக்கும் லண்டன்லையே மாப்பிளைய பாக்கச் சொல்லட்டா?....என்ன கிண்டலா ?...இல்லடி .எனக்கே உன்னப் பாத்தா நான் ஆம்பிளையா பிறந்திருக்கக் கூடாதா  எண்டு கவலையா இருக்குடி...யூ ராஸ்கோல்!....இருடி வாறன் இண்டைக்கு உனக்கு  ....ஜோதி விடடி...பிளீஸ்டீ ....பிளீஸ்டீ ....விடடி என்ன ...அதோ உங்க அப்பா வாறாருடீ ....ஏமாந்திற்றியா !....ஹா ..ஹா ....ஹா ........ சீ போடி நான் உன்னோட இனிமேல் கதைக்கவே  மாட்டன் .கோவிச்சுக் கொள்ளாதடி செல்லம்.. நீ கதைக்க இல்லையெண்டா நான் இனிமேல் யாரோடையும் பகுடி விட மாட்டன்டி அப்பா ..ஐயையோ அத மட்டும் நிறுத்தீராதடி அப்புறம் எங்கட பள்ளிக்கூடமே இருண்டு போயிரும்டி ஹா ஹா..ஹா....சரி வாடி  காப்பி குடிச்சிற்று போகலாம் .

                      அடடே!...வாம்மா மீரா .எப்ப வந்த ?..இப்பதான் ஆன்ரி.வீட்டில எல்லாரும் எப்புடி இருக்குறாங்கள் ?...ம்..எல்லாரும் நல்லா இருக்குறாங்கள் ஆன்ரி .நீங்க எப்புடி இருக்குறீங்க ?....எனக்கென்னடி அம்மா நான் நல்லாத்தான் இருக்குறன் .ஒரு மாதிரி மூத்த பொண்ணோட கலியாணம் முடிஞ்சுது .இனி ஜோதிக்கும் ஒரு நல்ல இடமாப் பாத்துக் கட்டிக் குடுத்திற்ரா எங்கயோ ஒரு மூலையில சிவனே எண்டு போய்க் குந்தீரலாம் .கேட்டுக்கோடி உங்க அம்மா சொல்லுறத ....பாருங்கம்மா இவள !..வந்த நேரத்தில இருந்தே  ஏதொ சொல்லி வச்சமாதிரி என்னோட கல்யாணத்தப் பற்றியே பேசீற்று இருக்குறாள் அதுக்கில்லடி அவளுக்கும் உனக்கும் இருக்கிற நட்புக்கு இடையில வேற யாராவது வந்திரப் போறாங்களோ  எண்டு பயப்படுகிறாள் போல. யாருக்கு தெரியும் !....இறைவன் யார் யாருக்கு இன்னார் எண்டு எழுதி வச்சிருக்கிறத !.....
எனக்கு தெரியுமே ஆன்ரி .நம்ம ஜோதிக்கு எங்க அண்ணனையேதான் இறைவன் நிச்சயிச்சு இருக்கிறார் .இனி நீங்கதான் ஆன்ரி அத முடிச்சு வைக்கணும் .ஓ!!!....விசயம் அப்புடி போகுதா ?....அச்சச்சச்சச்சோ  அவங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிற உண்மைய நான் உங்களிட்ட  சொல்லவே  மாட்டன் ஆன்ரி ...அதுதான் சொல்லீற்றியேடி அம்மா...!!! ஹா ...ஹா ...ஹா...சொல்லீற்றனா ஆன்ரி ?...!!!! போச்சுடா இப்ப நான் என்னடி  பண்ணுறது சொல்லுடி என் தோழி  .....சீ ....போடீ பாருங்க ஆன்ரி என்னப் போச்சொல்லீற்று அவ வெக்கப் படுகிறத ஹா ஹா ...ஹா ....ஹா .....

என்ன இங்க ஒரே சிரிப்பா இருக்கு ?.....அது ஒண்டும் இல்லங்க எல்லாம் நல்ல விசயம்தான் நீங்களும் நானும் ஆசப்பட்ட மாதிரியே உங்க செல்லப் பொண்ணு ஜோதி ஜோதிக்கு என்ன?...அவளுக்கு ஒண்டும் இல்லங்க .அவ நம்ம ரவி தம்பியக் காதலிக்கிறாளாம் .காதலிக்குறாளா ????....யாரக் கேட்டு இவ காதலிக்குறாளாம் ?....நீங்க யாரக் கேட்டு என்னக் காதலிச்சுக் கலியாணம் செய்தீங்களோ அவங்களக் கேட்டுத் தானுங்க .அப்புடியா விசயம் !...    ஆமாங்க அப்புடி எண்டா சரீடி .இந்தக் கலியாணத்தயும்  ஜாம் ஜாம் எண்டு செய்து முடிச்சிர வேண்டியதுதான் .எங்கடி என்ர செல்லப் பொண்ணு ?...ரொம்பவே தேடாதீங்க அங்கிள் .அப்புடியே அந்தக் கண்ணாடியப் பாருங்க!....  நம்ம நிலா அழகா சிரிக்குறத..... ஆமா இல்ல ஹா ...ஹா ஹா ...ஹா ...வெக்கப் பட்டது போதும் வாம்மா இங்க .அப்பா என்ன ஆசீர்வதியுங்கப்பா ..தீர்க்க சுமங்கலியா இரும்மா போ ..போய் உங்க அம்மா கால்லையும் விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ அம்மா நீயும் என்ன ஆசீர்வதியம்மா என் கண்ணு ஆயுசுக்கும் நல்லா இரடியம்மா ......
                                               தொடரும் ......            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.